மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துராணி(42).இவர் தன்னுடைய உறவினர்களுடன் உசிலம்பட்டி மண்டபத்தில் நடைபெறும் உறவினர் இல்ல விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார்.கார் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி அருகில் வரும் போது டிரைவர் முன்னாள் சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் லாரி மீது மோதியது.இதில் காரில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஷேர் ஆட்டோவில்; சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப் பட்டனார்.இதில் தங்கத்தாய்(80) சிகிச்சை பலனின்றி மருத்துவமணையில் உயிரிழந்தார்.இந்துராணி(42) ஒச்சம்மாள்(80) அரவிந்த்(26) பிரகாஷ்(25) ஆகிய 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இது குறித்து உசிலம்பட்டி நகர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து நடைபெற்றது உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
15
You must be logged in to post a comment.