Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..

மாற்றுத்திறனாளிகள் முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..

by ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான முகாம் வரும் 19ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை சகாய மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இம்முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பேரணி நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் கோபி துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். முகாமில் வட்டார கல்வி அலுவலர் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். புதுப்பித்துத் தரப்படும். தேவைப்படுவோருக்கு உபகரணங்கள் வழங்கப்படும். உதவித் தொகை பெற்று தரப்படும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெறலாம்,” என்றார். பேரணி,அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பெருமாள் கோயில் தெரு, ராஜவீதி, சிவன் கோயில் தெரு வழியாக சென்று பள்ளியை அடைந்தது முடிந்தது.பொதுமக்களுக்கு முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மாணவ, மாணவியர், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com