கீழக்கரை செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: S.P. முரளி ரம்பா துவக்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை முன்பு JUNIOR CHAMBER INTERNATIONAL சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா துவக்கி வைத்து பாதுகாப்பு குறித்த சிறப்புரை உரையாற்றினார். பின்னர் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தார்.
இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் தூத்துக்குடி ஹெர்குலேனியம் சார்பாக அதன் தலைவர் மகேஷ், விழாவின் அமைப்பாளர் செல்ல கணேசன் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இதன் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் மத்திய பாகம்காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில், சார்பு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் சார்பு ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் திரும்பிச் சென்றனர் வீட்டுக்கு மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் பள்ளி மாணவர்களுடைய படுத்தி மேல ஆர்வம் குறைந்து உள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எப்போது ஆசிரியர் திரும்பி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்துவார் என்பதுதான் எங்களுடைய கவலை என்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை ..
இன்று மதுரை மாநகர் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தெப்பக்குளத்தின் நான்கு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க 50 அறிவிப்பு பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு என்று தனித்தனியே நிறுத்தும் இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 27.01.2019 ஞாயிற்று கிழமை நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான குர் ஆன் ஓதும் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து 250 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கு இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மற்றும் சீதக்காதி அறக்கட்டளையின் செயலாளர் திரு ஹாலித் ஏகே புஹாரி பரிசு வழங்கினார் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி- சமயபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஒன்றில் லாக்கரை உடைத்து கொள்ளை..
திருச்சி – சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் இன்று (28/01/2019) வங்கிக்கு வந்தனர். உள்ளே சென்றபோது சுவர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. உடைக்கப்பட்ட லாக்கர்கள் ஐந்தும் வாடிக்கையாளர்களின் லாக்கர்கள்.
வங்கியின் முக்கிய லாக்கர் உடைக்கப்படவில்லை. லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதால் போலீசார் அவைகளை கைப்பற்றினர். இதைஅறித்த வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர்கள் உடைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் வங்கி முன்பு குவிந்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரத்தைச்சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது விசைப்படகில் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் முருகேசன் 47, ஆறுமுகம் மகன் நவீன் 35, சேதுபதி மகன் ஆனந்த் 42, ஏரகாடு பகுதியைச் சேர்ந்த நம்புராஜன் செந்தில்பாண்டி 37 ஆகியோர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (28.01.2019) அதிகாலை தொழிலுக்கு சென்றனர். மீன் பிடிக்க வலை விரித்தபோது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை அந்த விசைப்படகை சுற்றி வளைத்து 4 மீனவர்களையும் சிறை பிடித்தது. நான்கு மீனவர்களை விசைப்படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளிடம் மீனவர்கள் மனு….
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் ஆகியோரிடம் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி கொடுத்த மனு :
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நாட்டுப் படகில் சென்று வந்தனர். இலங்கை உள்நாட்டு போர் காலத்திலும் எங்களது வழிபாட்டு உரிமையை காக்க நாட்டுப் படகுகளில் சென்று வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக விசைப்படகுகளில்பயணிகளை அழைத்துச் சென்றதால், நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தடை விதித்தனர்.
இந்நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிலைநாட்டவும், பாரம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நாட்டுப்படகுகளில் பாரம்பரிய மீனவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீன்பிடி விசைப்படகுகளில் வர்த்தகரீதியாக பயணிகளை ஏற்றிச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவுப்படி மார்ச்15, 16 தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் கலந்துகொள்ள 20 நாட்டுப் படகுகளில் தலா 23 பேர் வீதம் 460 பேருக்கு அனுமதி, பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அனைத்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாடானை, இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள், நகர், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், மகளிர்அணி(WIM) மாவட்ட நிர்வாகிகள், தொழிலாளர் அணி(SDTU) நிர்வாகிகள், செயல்வீரர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட துணை தலைவர் சோமு தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸ்கர் வரவேற்றார்.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சுலைமான், மாவட்ட செயலாளரும், ஊடக ஒருங்கிணைப்பாளருமான ஹமீது இப்ராஹிம்,, மாவட்ட செயலாளரும், ஊடகத் தொடாபா ளருமான அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ரபீக், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஹஸனலி, திருவாடானை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆஷாத், தொழிலாளர் அணி (SDTU) மாவட்ட தலைவர் முஸ்தாக், மகளிர்அணி (WIM) மாநில துணைத்தலைவி உம்முல்தௌலத்தியா, மாவட்ட தலைவி சகிலா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் எம். நியாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக்அஹமது, கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், கிழக்கு மாவட்ட செயலாளர் பைரோஸ்கான், மேற்கு மாவட்ட செயலாளர் அஸ்கர்அலி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசனலி நன்றி கூறினார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கையை சேர்ந்த மூவர் கைது..
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 110 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை வல்;வெட்டித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 2 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டு இருந்த இலங்கை பைப்பர் படகு மற்றும் தமிழக நாட்டு படகை சுற்றி வளைத்தனர். அப் போது தமிழக படகு இலங்கை கடற்படை ரோந்து கப்பலை கண்டதும் இந்திய எல்லைக்குள் தப்பி சென்றனர்.
இதனையடுத்து இலங்கை பைபர் படகை பிடித்து சோதனை செய்தனர். அதில் 110 கிலோ கேரள கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர் ,ஆனால் படகில் இருந்த இலங்கை நபர்கள் கடலில் குதித்து தப்பினர். இதனையடுத்து கடற்படையினர் வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து கஞ்சா கடத்த முயன்ற மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினரும் போலீசாரும் சேர்ந்து மடக்கி பிடித்தனர்.
;. வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து நூறு கிலோ கஞ்சா கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தியதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கஞ்சாவை வாங்கி செல்ல வந்த கொழும்புவைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வல்வெட்டித்துறைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடுக்கடலில் தப்பி சென்ற இந்திய கடத்தல்காரர்கள் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வடக்கு கடற்பிராந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ரயில் யாழ்ப்பாணம் வருகை..
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ரயில் “உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து நேற்று (27/01/2019) காலை தனது பயணத்தை துவக்கிய உத்தரதேவி மதியம் 2.40 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.
இப்பயணத்தில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சரின் செயலாளர், உதவி செயலாளர், ரயில் நிலைய அதிகாரிகள் உள பட பலர் பயணித்தனர்.
இதேவேளை, தமிழரசு கட்சி தலைவர் மவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ்.பிரதான ரயில் நிலையத்தில் வரவேற்றனர். தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ, மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒருவார காலமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வரததை கண்டித்து தொடக்க பள்ளி மானவ மாணவியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்படு வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பூட்டிச் என்பதால் நுழைவாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் போராட்டம் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு தரப்பில் இன்று பணிக்கு அனுப்பிய ஆசிரியர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் – காவலூர் சாலையில் அரசு பேருந்தும் கரும்பு ஏற்றிச்சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் படுகாயம் இரவு முதல் தற்போது வரை போக்குவரத்து சரி செய்யப்படாததால் ஆலங்காயம் – காவலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை திருவலம் அருகே ரூ 1.5 கோடி மதிப்பில் ரயில்வே சிமெண்ட் பாலம் அமைக்கும் பணி துவக்கம் . வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே சீக ராஜபுரம் ஹவுசிங் போர்டு அருகில் சென்னை – பெங்களூரு ரயில் பாதையில் சிறிய ரயில் பாலம் உள்ளது. தற்போது அது இரும்பு கர்டர் பாலமாக உள்ளது.
தென்னக ரயில்வே இந்த பாதையில் ரயில்வேகத்தை அதிகரிக்க உள்ளது.. அதனால் இரும்பு கர்டர் அகற்றப்பட்டு ரூ 1.5 கோடி மதிப்பில் சிமெண்ட் கர்டர் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி முடிந்த பிறகு ரயிலின் வேகம் அதிகரிக்கும் பணி 2 மாதத்தில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணி செய்யும்போது ரயில் போக்குவரத்து 8 மணி நேரத்திற்கு நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்து உள்ளது.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடப்பு கல்வி ஆண்டில் நடந்த ஹாக்கி போட்டிகளில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ராமநாதபுரம் ஹாக்கி வீரர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கும் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டில் நடந்த தேசிய, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் 7 கோப்பைகள், தங்கம், வெள்ளி, பதக்கங்களை ராம நாதபுரம் ஹாக்கி வீரர்கள் குவித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். இவர்களை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் பாராட்டினார்.
மேலும் ராமநாதபுரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை அமைத்து கொடுத்த மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், வீரர்களை பயிற்றுவித்த ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் குமார், ஹாக்கி வீரர்கள் அதிசய ராஜா பி.சதீஷ், ப்பி.முரளிகிருஷ்ணன், ஆர்.பாலாஜி, ஜி.அர்ஜுன், ஆர்.ஹரிஹரன், ஏ. கிரி பிரசாத், எம். ஆனந்த், எஸ்.மணிபாரதி, என். ஷாகுல் அசாருதீன், எஸ். அன்பரசன், வி.அருண்குமார், ட்டி.அபிஷேக், ஆர்.மனோஜ் குமார், எம்.அஜிஸ் ரஹ்மான், கே. சந்தோஷ் கே.சபரிநாதன், வி.முத்து அபிஷேக் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பகீரத நாச்சியப்பன், ரமேஷ் பாபு, ரமேஷ், தாமரை செல்வன், பயிற்றுநர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழாவில் குளறுபடி ..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்பு சாம்ராஜ் ஒன்றிய கழக செயலாளர், தலைமை டிகே ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் , பழனியப்பன் கழக தலைமை நிலைய செயலாளர், சேகர் தலைமை கழக பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடைசியாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசிய பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் மக்களுக்கு இலவசமாக கட்சி துண்டு சேலைகள் பழனியப்பன் வழங்கினார் இதில் இலவச சேலைக்கு மேடையில் ஏரி மக்கள் தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டது. இதனால் பழனியப்பன் சிலைகளை அப்படியே மேடையில் விட்டுவிட்டு கீழே இறங்கி கிளம்பிவிட்டார் இதில் கட்சி மக்கள் மேடையில் ஒருத்தருக்கு ஒருவருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிறகு பாப்பாரப்பட்டி போலீசார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.
செய்தி:- சிங்காரவேலு, தர்மபுரி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்…
தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி ஏந்தியும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்தன. வைகோ தலைமையில் கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார். பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே பி நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- கனகராஜ், மதுரை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினவிழா மற்றும் கிராம சபை கூட்டம்..
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் வீரசிகாமணி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் வடநத்தம்பட்டி என்ற கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி செயலர் திரு.லட்சுமணன் கூட்டத்தை நெறிப்படுத்தினார். பற்றாளர் திரு.
V.ஆறுமுகச்சாமி கிராம நிர்வாக அலுவலர் திரு.குருசாமி மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் லட்சுமணன் ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.
பொதுமக்களின் அடிப்படையான மிக முக்கிய விஷயங்கள், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
1.பிளாஸ்டிக் பயன்பாட்டு தடை.
2.குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல்
3.டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்
4.ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்
5.பொது சுகாதாரம்
6.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.
7.மகளிர் திட்டம்.
8.பொதுமக்களின் இதர கோரிக்கைகள்.
9.வீரசிகாமணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள்..
இவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நாட்டின் 70-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (27/01/2019) முதல் அதிவிரைவு ரயில்கள் கொடை ரோடு நிலையத்தில் நின்று செல்லும்..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட பாரம்பரியமிக்க இரயில் நிலையம். இந்த இரயில் நிலையத்திலிருந்ந்து தான் மலைகளின் இளவரசி கொடைக்கானல், தேனி, பெரியகுளம், வத்தல குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி உட்பட பல்வேறுபகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர்
மேலும் இந்த பகுதி அதிக விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள், பயணிகள் மதுரை திண்டுக்கல் உட்பட நகரங்களுக்கு சென்று வந்தனர் இந்நிலையில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை உட்பட வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அதிவிரைவு இரயில்கள் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்யையும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் M. உதயகுமாரின் தொடர் கோரிக்கையினை ஏற்று மத்தியரசின் இரயில்வே நிர்வாகம் குருவாயூர் அதிவிரைவு இரயில், தேஜாஸ்வி அதிவிரைவு நவீனசொகுசு இரயில் , மற்றும் இராஜஸ்தானிலிருந்து சென்னை வரை வந்து சென்ற பிக்கானியர் அதிவிரைவு இரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவும் கொடைக்கானல் ரோட்டில் நின்று செல்ல மத்தியரசு உத்தரவிட்டுள்ளது
அதன்படி இன்று முதல் சென்னையிலிருந்து குருவாயூர் சென்ற அதிவிரைவு இரயில் கொடைக்கானல் ரோட்டில் நின்று சென்றதுனர் M. உதயகுமார் அவர்கள் வரவேற்று பூக்கள் தூவி கொடியசைத்து துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்
மேலும் அடுத்த மாதம் முதல் மதுரையி விருந்து சென்னை செல்லும் வைகை அதிவிரைவு இரயிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய ரசிலிருந்து விரைவான அதற்கான அறிவிப்பு வரும் எனவும் தெருவித்தார்.
செய்தி:- ராஜா, நிலக்கோட்டை
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக சாதனை புரிந்த இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரி மாணவிகள்.. வில் மெடல்ஸ் அமைப்பு அங்கீகாரம்..
சாதனைகள் புரிவது பல விதம், அதிலும் தனித்தன்மையுடன் சாதனை புரிவது மிகவும் கடினமான விசயமாகும். அவ்வரிசையில் இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் த.மோனிஷா மற்றும் ரா.மித்ரா என்ற இரு மாணவிகள் இணைந்து காகிதத்தால் பல வண்ணங்களில் 3000 வகையான வடிவங்களை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனைக்காக கடந்த20/112018 முதல் 11/01/2019 வரை கடும் முயற்சியுடன் 26/012019 அன்று இச்சாதனையை நிறைவேற்றியுள்ளனர். இவர்களுடைய சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் வில் மெடல்ஸ் நிறுவனம், அம்மாணவிகளுக்கு அங்கீகார பத்திரம் வழங்கினர்.
இச்சாதனையை பற்றி அம்மாணவிகள் கூறிய பொழுது, ‘இச்சாதனையை புரிய நாங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆயத்த பணிகளை செய்து வந்தோம். இதற்கான முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், வழி காட்டுதலையும் வில் மெடல் நிர்வாகிகளான கலைவாணி, தஹ்மிதா பானு மற்றும் அஃப்ரின் வஜிஹா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
மேலும் இத்தருணத்தில் எங்களுக்கு பொருளாதாரம் மட்டுமல்லாமல் அனைத்து வகையான உதவிகளையும் செய்த பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், வங்கி மேலாளர் கார்த்திகேயன், கீழக்கரை கிளாசிஃபைடு எஸ்.கே.வி.ஜெய்னுலாப்தீன் மற்றும் ரோட்டரி ஹால் உறுப்பினர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என சாதனை மாணவிகள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.