கல்வி
இன்று (05-03-2017) புதுத்தெரு நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு மருத்துவர். ராசிக்தீன் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்.ஐவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு ரூபெல்லா தடுப்பபூசி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததோடு அதனுடைய நன்மையை பற்றியும், அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றியும் பெற்றோர்கள் மத்தியில் விளக்கி கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.