கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ராமப்பா ரோடு உழைப்பாளர் மார்க்கெட் அருகில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷின் வித்யாலயா பல் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் CITU பொது தொழிலாளர் சங்கம் இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் பல் மருத்துவர்கள் கலந்து கொண்டு நவீனமுறையில் சிகிச்சை அளித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -21
(கி.பி 750-1258)
சிலுவைப்
போருக்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சிலுவைப்போர் என்பது இரண்டு நூற்றாண்டுகள் நடந்த மிக நெடிய போராகும்.
கி.பி 1097 துவங்கி 1291 வரை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து நடந்த நீண்ட நெடிய போராகும்.
இந்தப் போர்களுக்கு சமூக ரீதியான,
சமய ரீதியான,
அரசியல் ரீதியான,
பொருளாதார ரீதியான, காரணங்கள் இருந்தது.
முஸ்லீம்களின் ஆட்சி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று பரவிக்கொண்டே இருந்தது.
ஆட்சியாளர்கள்
இடையே ஆதிக்க போட்டிகள் அதிகரித்தன.
கிறிஸ்தவர்களின்
கிரேக்க திருச்சபைக்கும்,
ரோமர்களின் திருச்சபைக்கும் இடையிலிருந்த அதிகாரப்போட்டி,
முஸ்லீம் மன்னர்கள் போரின் மூலம் கிறிஸ்தவ பிரதேசங்களை கைப்பற்றியது,
போர்கள் மூலம் முஸ்லீம்களுக்கு கிடைத்த சொத்துக்கள்,
இழப்பீடுகள்.
செல்ஜூக்கிய மன்னர் அல்ப் அர்ஸலான் காலத்தில் ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டு
ரோமமன்னர்
சிறைபிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீட்டு தொகை வாங்கியதுடன்
செல்ஜூக்கிய முஸ்லீம்கள் ரோமப்பகுதியில் குடியேறினர்.
முஸ்லீம்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜெருசலேம், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் ஜெருசேலம் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மத்திய தரைக்கடலின் பல தீவுகள் முஸ்லீம்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் மற்றவர்கள் வணிகம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள்,
கடல்பகுதிகளில் முஸ்லீம்களின் வேடத்தில் வந்த கடற்
கொள்ளைகாரர்
களால் உருவான பிரச்சினைகள்,
இந்தக்காலத்தில்
பாக்தாத்தை தலைமையிடமாக
கொண்டு அப்பாஸிய ஆட்சியும்,
ஸ்பெயின் கொரடோவாவை தலைநகராக வைத்து உமைய்யாக்களும்,
எகிப்து ,பாரசீகப்
பிரதேசங்களை மையமாக வைத்து
செல்ஜூக்கியர்கள்,
பாத்திமியாக்கள்,
சலாவுதீன் அய்யூபி என்று முஸ்லீம் அரசுகளின் வளையங்களில் சூழப்பட்ட கிறிஸ்தவர்கள்,
தங்களின் பல நூற்றாண்டுகால ஆட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகள் கோபங்களாக மாறின.
300 கிருஸ்தவ மதகுருமார்கள் பிரான்ஸில் கி.பி 1095 ஆம் ஆண்டு ஒன்று கூடினார்கள்.
இது “கிளமெண்ட் மாநாடு ” என்று அழைக்கப்படுகிறது.
ஜெருசேலத்தை மீட்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் போரில் கலந்து கொள்ளவேண்டும்.
இந்தப் புனிதப் போரில் கலந்து கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்.
சொர்க்கம் உறுதியாக கிடைக்கும்.
வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று பல்வேறு வகையில் கிறிஸ்துவ மக்களை ஒன்று திரட்டும் பணி துவங்கியது.
இதில் உட்ச கட்டமாக
செயல்பட்ட பீட்டர் சந்நியாசியின் செயல் கிறிஸ்தவர்களின்
வெறியைத்
தூண்டியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தரையர் சங்கம் மற்றும் சிகரம் வளர்ச்சி குழு சார்பாக தம்பி ரங்கீஷ் மருத்துவ செலவிற்காக வசூல் செய்த பணம் ரூபாய் 2,70,000 (இரண்டு லட்சத்தி 70 ஆயிரம்) அவர்களின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. இதற்கு பண உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இராமநாதபுரம் மாவட்ட முத்தரையர் சங்கத்தின் சார்பாக நன்றியை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் பேரூராட்சிகள் நிர்வாகத்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்ததுடன் தரம் மற்றும் அதன் தன்மை மாறாமல் அமைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பேரூராட்சி பகுதியில் நவீன மின்னணு மயானம் ரூ.161 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், பணியினை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கோட்டைமேடு ஊராட்சியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கவுள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்து ருசித்துப் பார்த்ததுடன் பொருள்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டுமொன பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர் முதுகுளத்தூர் வட்டம், சாம்பக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு, பதிவேடுகளில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்துள்ள பட்டியலினிபடி விவசாயிகளிடம் அரசு நெய் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், இதேபோல் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்து பயன்பெற்றிட அலுவவர்கள் அறிவுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் பயணத்தின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி , உதவி செயற்பொறியாளர் ஜெய கிருஷ்ணன் , இளம் பொறியாளர் இக்பால் , கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருக்கோஷ்டியூர் ஶ்ரீ சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவ விழா
by Baker BAker
written by Baker BAker
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மாசிமக தெப்ப உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது உலகப் புகழ் பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களுள் மாசி மகத் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மக தெப்ப திருவிழா கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து தினமும் பெருமாள் தேவியருடன் பல வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி புறப்பாடும், முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களின் சேவைக்குப் பின்னர் தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். மண்டபத்தில் பெருமாளுக்கு திருவந்திக்காப்பும், தீபாராதனையும் நடந்தது. பின்பு மதியம் தெப்பக்குளத்தில் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு தெப்பத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்தில் பெருமாள் வலம் வருகையில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்களிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு..
by Askar
written by Askar
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொ.ம.தே.க.,வுக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் கூறியதாவது: தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடம் கேட்டிருந்தோம். தற்போது மக்களவை தேர்தல் தொடர்பாக மட்டுமே பேச்சு என்று தி.மு.க கூறி உள்ளது. கட்சியின் சார்பில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக களம் காண இருக்கிறார். ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளோம். என கூறினார்.
கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை தி.மு.க., கூட்டணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:கொங்கு மக்கள் தேசிய கட்சி 2019 ம் ஆண்டை போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியி்டும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி வாகை சூடும். தி.மு.க ,கொ.ம.தே.க கூட்டணி உறுதியான கூட்டணியாக இருக்கும். கூட்டணி கட்சிகள் விரைவில் தேர்தல் பணிகளில் ஈடுபடும். கொ.ம.தே.க,வின் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்தி அறிவிக்கப்படும். புதிய முகத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அதன் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குமக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியை தி.முக. கூட்டணி ஒதுக்கி உள்ளது. இது குறித்த ஒப்பந்தத்தில் ஸ்டாலின், காதர்மொய்தீன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செல்போன் அழைப்பாளர் அடையாளத்தை காண்பிக்கும் வசதியை நடைமுறைப்படுத்த இறுதி பரிந்துரையை அரசிடம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமர்ப்பித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அழைப்பாளர் அடையாளத்தை (காலர் ஐடி) பயனாளர்களுக்கு வழங்க வேண்டும் என தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிவை வெளியிட்டது. இந்த முன்மொழிவு வெளியிடப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டிராய் தற்போது இறுதி பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
அதன்படி, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், ஒரு துணை சேவையாக அழைப்பாளர் பெயர்களைக் காண்பிக்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாளர் அடையாளத்தை வெளியிடுவதற்கான ஒரு தொழில்நுட்ப மாதிரியை டிராய், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இச்சேவையை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்குமாறு டிராய் பரிந்துரைத்துள்ளது.
டிஓடி, கடந்த 2022 மார்ச் மாதத்தில் இந்த முன்மொழிவை வழங்கிய பிறகு, டிராய் அதே ஆண்டு நவம்பரில் தொடங்கி, கடந்த மார்ச் வரை ஆலோசனையில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இறுதி பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. டிராயின் இறுதி பரிந்துரையானது அழைப்பாளர் விவரங்களை தொலை தொடர்பு நிறுவனங்களே காண்பிக்கும் சேவை, நடைமுறைக்கு வரும் நிலையை மேலும் ஒரு படி முன்னகர்த்தியுள்ளது.
இந்த அம்சம் நடைமுறைக்கு வந்தால், தற்போது அச்சேவையை விளம்பரங்கள் மற்றும் கட்டண ஆதரவுடன் வழங்கி வரும் ‘ட்ரூ காலர்’ போன்ற அடையாளத்தை காண்பிக்கும் செயலிகளுக்கு பெருத்த அடி விழும் என தொலைத் தொடர்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இயல்பான சேவையிலிருந்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் வகையில் செயல்பாடுகளை மேம்படுத்த ட்ரூ காலர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேனி தொகுதியில் எம்பி எலெக்ஷனில் தனித்துப் போட்டியிடுவேன் – ஜெயலலிதா மகள் என்று கூறும் ஜெயலட்சுமி பேட்டி.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அழகு சிறை கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா மகள் என்று கூறிக்கொள்பவரும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவருமான ஜெயலட்சுமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது
அம்மாவுக்கு ஏழை குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.இங்குள்ளவர்கள் அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன்.அம்மா வழியில் ஏழைகளுக்கு நானும் உதவிகள் செய்வேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனியில் சுயேட்ச்சையாக போட்டியிடுவதாகவும் பல்வேறு உருட்டல் மிரட்டல் வந்தாலும் நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை எனவும் கட்சிப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கட்சி சின்னத்தை அரசு தடை செய்து இருப்பதாகவும் கூடிய விரைவில் அதை மீட்டெடுத்து மாபெரும் வெற்றி கண்டு அம்மா துணையுடன் ஆட்சி புரிவேன் என ஜெயலலிதா மகள் என்று கூறும் ஜெயலட்சுமி செய்தியாளருக்கு பேட்டியளித்துள்ளார்.
உசிலை மோகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் ரூ.700 கோடிக்கு கனிமவளக் கொள்ளை! – வெளிப்படையான விசாரணை நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..
by Askar
written by Askar
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 கல்குவாரிகளில், அரசியல் பெரும் புள்ளிகள், அரசு உயர் அதிகாரிகள் துணையுடன் நடந்த சட்டவிரோத கனிமவளக் கொள்ளை குறித்தும், அதன்மூலம் நடைபெற்ற சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஊழல் முறைகேடுகள் குறித்தும் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ள ஆதாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தினை தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ் ஐஏஎஸ் அவர்கள், மாவட்டத்தில் செயல்படும் 54 கல் குவாரிகளில், முறைகேடாக இயங்கிய 53 கல் குவாரிகளில் 281 சதவீதத்திற்கும் அதிகமாக சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெற்று இருப்பதை கண்டறிந்தார். அதன் அடிப்படையில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ் அவர்கள், 53 கல்குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். மேலும், சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 24 குவாரிகளுக்கு ரூ.262 கோடியை சேரன்மகாதேவி துணை ஆட்சியர் அபராதமாக விதித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சட்டவிரோத கல்வாரிகளுக்கு எதிராக நேர்மையாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் நிர்மல் ராஜ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்கள் சேரன்மகாதேவி துணை ஆட்சியரால் 24 சட்டவிரோத குவாரிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 262 கோடியை, 14 கோடியாகக் குறைத்தும், அந்த அபராதத் தொகையை மாதத் தவணையில் செலுத்தவும் கல்குவாரி உரிமையாளர்களுக்கு சலுகை வழங்கினார். மட்டுமின்றி, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், அதிகமான முறையில் தோண்டப்பட்ட சட்டவிரோத கல்குவாரிகள் மீண்டும் செயல்படும் வகையில், மூடப்பட்ட கல் குவாரிகளை செயல்படவும் அனுமதி வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
கல்குவாரிகள் தொடர்பான இந்த சங்கிலி தொடர் மாற்றங்கள், நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள், சட்ட விரோத கல் குவாரிகள் மீண்டும் செயல்படுவதற்கான அனுமதிகள் ஆகிய இவை அனைத்தும், ஆட்சியாளர்களுக்கும், கனிமவளக் கொள்ளை மூலம் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குமான தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சட்டவிரோத கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டல் மட்டுமின்றி, அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு உண்மையான மக்கள் நலன் அரசாக இருக்குமானால் இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். ஆனால், இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது ஆளும் கட்சியின் தொடர்பில் உள்ள பெரும்புள்ளிகள் என்பதால், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்த அரசு ஊழல் முறைகேட்டிற்கு துணை போய்க்கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் செயல்படும் கல்குவாரிகளில் பல அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அதிகாரவர்க்க துணையுடன் இயங்கி வருகின்றன. மேலும், அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் கனிம வளங்களை வெட்டி கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன.
அண்டை மாநிலமான கேரளாவில் மணல், பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இயற்கை கனிம வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு நேர் மாறாக தமிழ்நாட்டில் மணல் குவாரிகள், கல் குவாரிகள் எவ்வித தடையும், வரைமுறையும் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. பிடுங்கியது வரை லாபம் என்ற கணக்கில் குவாரி உரிமையாளர்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் இயற்கை வளங்களை வெட்டிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்கும் கேரள மாநிலத்திற்கு இருக்கும் அக்கறையில் சிறிதுகூட தமிழக அரசுக்கு இல்லை என்பது வேதனையளிக்கிறது.
ஆகவே, அறப்போர் இயக்கம் வைத்திருக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை மாவட்டம் உள்பட தமிழக முழுவதும் செயல்படும் கல்குவாரிகள் குறித்து வெளிப்படையான ஆய்வுகளை நடத்தி, சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது விசாரணை நடத்தவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கல் குவாரிகளுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் சாதித்தால், எஸ்டிபிஐ கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நான் ஏன் பாஜகவில் இணைந்தேன்!- விளவங்கோடு எம்எல்ஏ, விஜயதாரணி பரபரப்பு பேட்டி.
by Askar
written by Askar
பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும், நாட்டின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் தன்னாலான அனைத்து பணிகளை செய்வதாகவும் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. இதனைத்தொடர்ந்து, விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்.தற்போது வேறு ஒரு தேசிய கட்சியில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் பிரதமரின் செயல்பாடு, திட்டங்களால் இந்த கட்சியில் இணைந்துள்ளேன். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. அவரோடு இணைந்து பாஜகவை தமிழ்நாட்டில் வலுப்பெற வைப்போம்.
நாட்டுக்கு பெண் தலைவர்கள் அதிக அளவில் தேவை. பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.எனவே நாட்டின் நன்மைக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் என்னாலான அனைத்து பணிகளையும் செய்வேன்.காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருக்கிறது.அதன் காரணமான அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறினேன்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் என்னுடைய பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுபோன்று பல ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த அதிருப்தியே அக்கட்சியை விட்டு வெளியேற காரணம் என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய பக்தர்களின்றி தொடங்கியது கச்சத்தீவு ஆலய திருவிழா!- ராமேசுவரத்தில் இருந்து படகு சேவை ரத்து..
by Askar
written by Askar
இந்திய பக்தர்களின்றி தொடங்கியது கச்சத்தீவு ஆலய திருவிழா!- ராமேசுவரத்தில் இருந்து படகு சேவை ரத்து..
கச்சத்தீவில் இந்திய பக்தர்கள் இல்லாமல், இலங்கை பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. ராமேசுவரத்திலிருந்து படகு சேவை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவை, நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் நேற்று மாலை 4 மணியளவில் ஆலயத்தின் கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது.
இந்த நிகழ்வுகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இன்று காலை கச்சத்தீவில் (சனிக்கிழமை) சிறப்புத் திருப்பலி பூஜையும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகின்றன. பின்னர், கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறு வயது முதலே காங்கிரஸின் ஒரு அங்கமாக இருந்தேன்.
தற்போது பாஜகவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், திட்டங்களால் பாஜகவில் இணைந்துள்ளேன்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுபெற வைப்போம்.
தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது;
பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
டெல்லியில் காங்.கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி பேட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை..
by Askar
written by Askar
TNPSC -Gr(IV)&VAO, திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்!-தொல்.திருமாவளவன் அறிக்கை..
சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr(IV)&VAO
தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.
மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
- தொடர்புக்கு:
- சென்னை:
- 9042991182
- அங்கனூர்:
- 9843660449
- ஜெயங்கொண்டம்:
- 9865756216
- சிதம்பரம்
- 9894447722
- திருப்போரூர்
- 74491 97728
- கடலூர்
- 9600244839
- கும்பகோணம்
- 7904832410
- திருவாரூர்:
- 8825995117
- திருச்செந்தூர்:
- 8675590803
- கள்ளக்குறிச்சி:
- 9003612449
- நாகப்பட்டினம்
- 9787825382
- நெடுங்குளம்
- 7639091631
- புதுகோட்டை
- 9443903727
- குறிஞ்சிப்பாடி
- 9042991182
- மதுராந்தகம்
- 9566227765
- திண்டிவனம்
- 9043751262
- வடலூர்
- 9942389886
- திருச்சி
- 8508082300
- பெரம்பலூர்
- 8015001001
- தஞ்சாவூர்
- 9600792241
மின்னஞ்சல் : [email protected]
இவண்:
தொல்.திருமாவளவன்
காப்பாளர், திருமா பயிலகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா; 1008 தேங்காய் உடைத்து வழிபாடு..
written by Abubakker Sithik
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும் ,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும் வகையில் அதிமுகவினர் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க வேண்டியும் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் அவர்களை சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு சட்ட சபையில் அங்கீகரித்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாகவும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவரும் கழக அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை இணைச் செயலாளர் துரை தன்ராஜ், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ரகு, மருத்துவர் அணி துணைசெயலாளர் கருப்பட்டி கருப்பையா, கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் சிவசக்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை இராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, பேரூர் கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், சரண்யா கண்ணன், முன்னாள் கவுன்சிலர் தண்டபாணி, இளைஞர் அணி நகர செயலாளர் கேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு, அண்ணா தொழிற்சங்க மதுரை வடக்கு மண்டல இணைச் செயலாளர் சக்திவேல், பேரூர் நிர்வாகிகள் துரைக் கண்ணன், ஜெயபிரகாஷ், ராஜா அசோக், ஜூஸ் கடை கென்னடி, குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் விஜய்பாபு, மன்னாடிமங்கலம் ராஜபாண்டி முள்ளிப்பள்ளம் சேது பாண்டியம்மாள் ராமநாதன், வடகாடு பட்டி பிரபு, பேட்டை முத்துக்குமார், சுரேஷ், ராஜா, மேலக்கால் ராஜபாண்டி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் திட்டம் அறிமுகம்..
கோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு பொருட்களின் விலையில் மூன்று பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இத்திட்டமானது கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் கண்கவர் வண்ணங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் இடம் பெற்று உள்ளன. ஆகவே வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறுமாறும், இத்திட்டமானது மார்ச் 25-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா. ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
EB தொடர்பான புகார்களை இனி வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
by Askar
written by Askar
EB தொடர்பான புகார்களை இனி வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு முழுவது உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகிறது.
அதுமட்டுமன்றி மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களையும் கண்காணித்து வருகிறது.
இதுவரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மின்சார வாரியம் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தர்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு என அனைத்து வகையான சேவகளையும் பொதுமக்கள் இந்த ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் என்ன என்பதையும் இந்த மூலம் அறிந்துக்கொள்ளலாம், எனவே மின்சார வாரியம் குறித்த தகவல்கள் அல்லது புகார் அளிக்க https://nsc.tnebltd.gov.in/nsconline/index.xhtml லிங்கை கிளிக் செய்து செயலியை பதிவிரக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரெயில் பயணிகள் கவணிக்க! நாளை (ஞாயிற்றுக்கிழமை) 44 மின்சார ரெயில்கள் ரத்து..
by Askar
written by Askar
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -2
கப்ளிசேட்
அப்பாஸிய பேரரசு -20
(கி.பி 750-1258)
சலாவுதீன் அய்யூபி அவர்களின் எதிரியான இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் ,ரம்லாவில் நோயுற்று ஒரு மாளிகையில் தங்கி இருந்தார்.
அவர் இருக்கும் பகுதிகளில் போர் பதற்றம் இருந்ததால், அவருக்கு மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.
ஆகவே மாறுவேடம் பூண்டு சலாவுதீன் அய்யூபி அவர்கள்
ரம்லா சென்று நோயுற்று இருந்த இங்கிலாந்து மன்னரை சந்தித்து உதவிகள் புரிந்தார்.
தன்னுடன் அழைத்து வந்திருந்த மருத்துவர்கள் மூலம் அவருக்கு சிறப்பு சிகிச்சையும் செய்து அவரை அவரது நாட்டிற்கு தப்பிச்செல்வும் உதவி புரிந்தார்.இந்த செயல் உலக வரலாற்றில் அதிசயமானதாகும்.
சலாவுதீன் அய்யூபி அவர்களின் படையில் ஏராளமான ஹாபிழ்கள்
(குர்ஆனை மனனமிட்டவர்கள்)
இருந்தனர்.
ஆகவே அய்யூபி அவர்கள் தனது வெற்றி ஆயுத பலத்தாலோ,
ஆட்களின் பலத்தாலோ இல்லை .
மாறாக குர்ஆனை ஓதும் நல்ல மனிதர்களால்தான்
சாத்தியமாகிறது என்பதையே எப்போதும் கூறுவார்.
ஜெருசலேம் மஸ்ஜிதுல் அக்ஸா இவரால் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
இவர் எகிப்தில் சிறப்பாக ஆட்சி செய்தபோது சிரியா டமாஸ்கசில் நூர்தீன் ஜங்கி மரணமடைந்தார்.
அவரது இளவயது மகன் மாலிக் சாலிஹ் பதவி ஏற்றார்.
சிறு வயதாக இருந்ததால் அமைச்சர்களால் ஏமாற்றப்பட்டார்.
இதனை கண்ட அய்யூபி அவர்கள் அமைச்சர்களை எச்சரித்தார்.
பல நிர்வாக உதவிகளையும் செய்தார்.
நூர்தீன் சங்கி அவர்களின் கனவில் ஒருநாள் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தோன்றி,
மதினாவில் தனது ரவ்லாவை
(அடக்க இடம்) சுற்றி
இரண்டு நபர்கள் தவறாக ஏதோ
செய்கிறார்கள்
அதை தடுத்து நிறுத்தவும் என கூறினார்கள்.
மேலும் அந்த இரண்டு நபர்களின் உருவமும் நூர்தீன் ஜங்கி அவர்களுக்கு காட்டப்பட்டது.
நூர்தீன் ஜங்கிக்கு மீண்டும் இரண்டு நாட்கள் தொடர்ந்து கனவின் மூலம் அந்த இருவரின் உருவமும் காட்டப்பட்டது.
ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்த நூர்தீன் ஜங்கி அவர்கள் உடனடியாக மதினாவிற்கு கிளம்பினார் .
தனது வீரர்களுடன் கிளம்பிய சிரியா டமாஸ்கசின் ஆட்சியாளரான நூர்தீன் ஜங்கி,
அதி விரைவாக மதினா நகரை வந்தடைந்தார்.
மதினா சென்றடைந்ததும் மதினாவில் வசிக்கும் ஆண்கள் அனைவரையும் மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலில் கூட்ட சொல்லி கவர்னருக்கு உத்தரவிட்டார்.
எல்லோரும் பள்ளிவாசலில் கூடிவிட இவர் கனவில் பார்த்த அந்த இருவர் அந்தக்கூட்டத்தில் இல்லை.
எல்லோரும் வந்துவிட்டார்களா என வினவப்பட,
இருவர் மட்டும் வரவில்லை என கூறப்படுகிறது.
அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்ற பாதுஷா அவர்கள், அவர்கள் இருவரும் மிகுந்த வணக்க சாலிகளாக இருப்பதை பார்த்தார்கள்.
பாதுஷா எதிர்பார்த்த உருவமும் இல்லை.
பாதுஷா அந்த வீட்டை சுற்றி வந்து ஏதோ சந்தேகப்பட்டவராக,
தரையில் விரித்திருந்த கம்பளத்தை உயர்த்திப்பார்க்க
அங்கிருந்து ஒரு சுரங்கப்பாதை பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் ரவ்லாவை
(அடக்கஇடம்)நோக்கி தோண்டப்பட்டு இருந்தது.
உடனடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது
மதினாவின் புகழை குறைக்க பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடலை எடுத்து செல்ல,
சுரங்கம் தோண்டியதை அந்த மாறுவேடத்தில் இருந்த இரண்டு யூதர்களும் ஒப்புக்கொண்டனர்.
அவர்களின் மாறுவேடம் கலைக்கப்பட்ட போது
நூர்தீன் ஜங்கி அவர்கள் கனவில் பார்த்த அதே உருவமாக இருந்தனர்.
அவர்கள் தண்டிக்கப்பட்டதுடன்
ரவ்லாவை
(அடக்க இடம்)
சுற்றி பூமியில் தாமிர
கலவைகளால் பூசப்பட்டு குழிகள் தோண்ட முடியாதவாறு அடைக்கப்பட்டது.
*(இந்த தகவலை உலமாக்கள் உறுதிப்படுத்த வேண்டும்)*
நூர்தீன் ஜங்கியின் மகன் மாலிக் சாலிஹ்
வாரிசுகள் இல்லாமல் மரணமடைந்தார்.
அவரது மனைவி அமைச்சர் இஜ்ஜுதீனை மணமுடித்தார்.அவர் மம்லூக்கியராக இருந்ததால் மம்லூக்கிய அரசு ஏற்பட்டது.
சலாவுதீன் அய்யூபியோடு
சிலுவைப்படை வீரர்களின் மோதல் ஏற்பட்டது.
சிலுவை போர்களின்
நிலைகள் என்ன??
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
written by Abubakker Sithik
தென்காசியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணித்தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் நம்பிக்கை இல்லை எனவும், மக்களை ஏமாற்றும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறி தமிழகம் முழுவதும் பிப்.23 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த வகையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டும் வைத்து தேர்தலை நடத்தக் கூடாது. மாறாக, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களோடும் ஒப்புகைச் சீட்டைப் பெறும் இயந்திரமும் இணைக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களித்த பின்னர், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் இன்று பதவியேற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமையை பெற்றார்.
You must be logged in to post a comment.