ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கீழக்கரையில் போதைப் பொருள் வியாபாரிகள் குறிப்பாக 18 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை மூளை செலவு செய்து அவர்களுக்கு தேவையான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை வழங்கி அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையில் இரு வாலிபர்களை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டது கீழக்கரை மக்களிடையே பெரும் பதட்டத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் உங்கள் அருகில் உள்ளவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Category:
மாநில செய்திகள்
இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.
அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 101.66°F, கோயம்பத்தூர் 101.84°F, தர்மபுரி 105.26°F, கரூர் பரமத்தி 105.8°F, மதுரை நகரம் 101.12°F, மதுரை விமான நிலையம் 103.28°F, பாளையங்கோட்டை 100.58°F, சேலம் 105.98°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.52°F, திருச்சிராப்பள்ளி 104.9°F, திருத்தணி 105.08°F, வேலூர் 106.88°F என வெப்பமானது பதிவாகி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்..
by Askar
written by Askar
இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில் ) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன் அருளப்பன் என்பவர் திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து வாங்க நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில், தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..
by Askar
written by Askar
சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில், தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..
சென்னையில் பயிற்சி பெற்று வரும் இளம் வழக்கறிஞர் பிரஷாந்த் கே.பிரகாஷ் தொடங்கியுள்ள சௌராஷ்டிர பாரம்பரிய மன்றத்தின் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமானது, சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல்களை கர்நாடக இசை மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கர்நாடக சங்கீத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் கச்சேரிகளில் குறைந்தது ஒரு சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல் இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கை போன்று சௌராஷ்டிர மொழியையும் ஒரு இசைக்கான மொழியாக முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனை மீட்டெடுப்பதற்கான புதிய முயற்சியாக இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை டி.ஆர்.துளசிதாஸ் தலைமையேற்று நடத்த, மதுரை ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் நிறுவனர் டி.ஆர்.பிரகாஷ் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் செயலாளர் டி.ஆர்.மோஹன்ராம் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார் மேலும், பாபநாசம் ஸ்ரீ ஆர்.குமார், தோப்பூர் டாக்டர்.பி.சாய்ராம் பாலமதி ஆகிய மூத்த இசை கலைஞர்களும், கீர்த்தனா, ஸ்ரீ கிஷோர் ஆகிய வித்துவான்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் நெட்டை இரசு நாற்றுகளும் 3000 எண்கள் விற்பனைக்கு நெட்டை x குட்டை இரக நாற்றுகளும் ஆக மொத்தம் 24500 நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ,ஒரு எண் நெட்டை இரக நாற்று ரூ.60/- எனவும் ஒரு எண் நெட்டை x குட்டை இரக நாற்று ரூ.125/- விலையில் விற்கப்படும் என்றும் ,தென்னை நாற்று விநியோகம் தொடர்பான விபரங்களுக்கு 9080246728 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் 4 வருடங்களில் காய்பிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!
by Baker BAker
written by Baker BAker
இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க இந்நிறுவனம் இலக்கு நிரணயித்துள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தேசிய உள்நாட்டு குழாய் மூலம் இயற்கை வாயு இயக்கத்தை மே 3ம் தேதி வரை நீட்டித்து. ராமநாதபுரத்தில் உள்ள வீடுகளுக்கு இந்த எரிவாயு வழங்கும் பணியை ஏஜி.பி பிரதம் துரிதப்படுத்தி உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்புத் திட்டத்தில் ஒரு மாத இலவச எரிவாயு செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவு கட்டணம், வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகைக் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஏஜிஃபி பிரதம் வழங்குகிறது புதிய நுகர்வோருக்கு பதிவுக் கட்டணத் தொகையான 354 ரூபாய் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான 6000 ரூபாயை தள்ளுபடி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகர்வோர் சாதாரண எல்பிஜி சிலிண் சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத தொகையை சேமிக்க முடியும். மேலும், போக்குவரத்து பிரிவில் குறைந்த செலவில் தேவைக்கேற்ப செய்ய பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜியை வினியோகிக்க இந்நிறுவனம் சிஎன்ஜி நிலையங்களை நிறுவியுள்ளது பல்வேறு முக்கிய இடங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 6 சிஎன்ஜி நிலையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக திறக்கப்படும் இந்த மையங்கள் மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், சிறிய வணிக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சிஎன்ஜியை தடையின்றி வழங்கும். வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் வீடுகளில் குழாய் இயற்கை வாயுவை பயன்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் கார்பன் மற்றும் மாசு வெளியேற்றம் வெகுவாக குறைவதோடு சிறந்த சுற்றுச்சூழலுக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஏஜிஃபி பிரதம் வழங்கும். (AG&P pratham )ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ராமநாதபுரம் மண்டலத் தலைவர் எசக்கிமுத்து பூமாரி கூறுகையில், ராமநாதபுரம் பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக உள்ளூர் சமூகத்திற்கு இயற்கை எரிவாயுவை சீராக வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க 11 கிமீ ஸ்டீல் பைப்லைன் மற்றும் 140 கிமீ மீடியம் டென்சிட்டி பாலிஎதிலீன் பைப்லைனை பதித்துள்ளோம். இதன் மூலம் முதல் கட்டமாக நாங்கள் இப்பகுதியில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு எளிதாக குழாய் இயற்கை எரிவாயுவை வழங்க முடியும். ராமநாதபுரத்தின் உள்பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக. எங்களின் இந்த முயற்சியானது இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், அவர்களின் மாதாந்திர எரிபொருள் செலவினங்களை 30 சதவிதம் வரை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வாகனங்களுக்கான மாற்று எரிபொருளாக சிஎன்ஜி-யை எங்கள் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவானது 45 சதவிதம் வரை குறைகிறது. சிஎன்ஜி-யை பயன்படுத்துவதன் மூலம் அது வாகனங்களின் என்ஜினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக அதிக மைலேஜை அந்த வாகனங்கள் தருகின்றன. மேலும் பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறைகின்றன. பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், வாகனங்களில் சிஎன்ஜியை பயன்படுத்தும்போது அதில் இருந்து குறைந்த அளவு கார்பன் மட்டுமே வெளியேறுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிஎன்ஜி முக்கிய பங்களிக்கிறது. இந்த முன்முயற்சிகள் வரும் 2030-ம் ஆண்டிற்குள் நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன. சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் ராமநாதபுரத்தில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..
by Askar
written by Askar
வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..
IFHRMS மென்பொருளில் வருமான வரி பிடித்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்
இது நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்கு துறையின் கவனத்திற்கு மாநில அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பழைய முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 20% தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டு கடன், ஆயுள் காப்பீடு ,இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளன .
ஆகவே அவற்றை கணக்கில் கொள்ளவும் கட்டாய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது .
அது குறித்த அரசு தரப்பிலிருந்து தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். குளறுபடிகள் களையப்பட்ட பிறகு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம.
மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பல லட்சம் கோடி பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது!- ராகுல் காந்தி கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
நரேந்திர மோடி தனது பில்லியனர் நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,000 அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்!
இவ்வளவு பணத்துடன்:
16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வேலை கிடைத்திருக்கும்
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.
10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் முழுச் செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்கலாம்
-தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞர்களும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியைப் பெற்றிருக்க முடியும்.
‘இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது.
நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது.
இப்போது நிலைமை மாறும் – ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும்.
-ராகுல் காந்தி –
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நரேந்திர மோடி போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும்!-சு.ஆ.பொன்னுசாமி காட்டம்..
by Askar
written by Askar
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு மொழிகள், ஜாதி, மதங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் தேசத்தில் அவற்றின் பெயரால் வெறுப்புணர்வை விதைத்து, பிரிவினையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் எவராயினும் அவர்கள் இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்,
அந்த வகையில் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய வகையில் பேசி வெறுப்புணர்வை விதைத்து அதன் மூலம் தேசிய அரசியலில் வெற்றியை அறுவடை செய்ய நினைக்கும் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தகுதியிழப்பு செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்றால் வேட்டை நாய்கள் போல உடனுக்குடன் பாய்ந்து, பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாஜக விவகாரத்தில் மட்டும் வீட்டு வளர்ப்பு நாய் போல அவர்களுக்கு நன்றியோடு வாலாட்டிக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும் என்பதால் நடப்பு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..
by Askar
written by Askar
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ரயிலில் பயணம் செய்வது என்றால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் இரவு நேரங்களில் ரயில் பயணம் என்பது அனைத்து மக்களும் விரும்பக் கூடியது. பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது நாம் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஏனென்றால் ரயில் நிலையங்களில் உள்ள உணவுகள் அந்த அளவுக்கு நன்றாக இருக்காது. மேலும் பலருக்கும் உடல்நிலை கோளாறை ஏற்படுத்தும் நிலை இருப்பதால் அச்சத்துடனேயே வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்வர்.
மேலும் அங்கு விற்கப்படும் உணவுகள் விலையும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் மக்கள் எண்ணி வீட்டில் இருந்தே சமைத்து கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு இருக்க தற்போது புதிய முயற்சியை தெற்கு ரயில்வே சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மிகவும் குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய தற்போது நடைமேடையிலேயே கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் நடைமேடையிலேயே தெற்கு ரயில்வே சார்பில் ஊழியர்களுடன் உணவு விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் எக்கனாமி மீல் என்று வெரைட்டி ரைஸ் 20 ரூபாய்க்கும் அதாவது லெமன் சாதம், தயிர்சாதம், பருப்பு சாதம், ஊறுகாயுடன் சேர்த்து ஒரு மரத்திலான ஸ்பூன் ஒன்றும் வழங்கப்படும்.
இதேபோல ஜனதா கானா என 20 ரூபாய்க்கு பூரி வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஸ்நாக்ஸ் மீல் என்று 50 ரூபாய்க்கு சவுத் இந்தியன் வகை அரிசி வகைகளும் லெமன் ரைஸ், சாம்பார் சாதம், தயிர்சாதம், பொங்கல், மசாலா தோசை அதுவே 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் தண்ணீர் 3 ரூபாய்க்கும் கிளாசில் சீல் இடப்பட்டு கொடுக்கப்படுகிறது. இது தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது திருச்சி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.
by Askar
written by Askar
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்:
சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளித்தார்கள். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்த கேள்விக்கு:
அது எப்போதும் வரத்தான் செய்யும். வரவர திருத்தம் செய்து அறிவிப்பார்கள்.
அதிமுகவை மீட்பது குறித்த கேள்விக்கு:
பொறுத்திருந்து பாருங்கள்.
பிரதமர் மோடி இஸ்லாமியர் தவறாக பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
பாரத பிரதமர் பத்தாண்டு கால ஆட்சி சிறப்பாக நடத்தினார். எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிபம் துபே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமால் இருந்தார். 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை அவர் எடுத்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தை சந்தித்த தோனி பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக சென்னையை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது லக்னோ. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றிக்கு வித்திட்டார். ஸ்டாய்னிஸ் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். அதிகபட்சமாக பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை அணியின் தீபர் சஹார், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பத்திரானா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த இரு அணிகளுக்கு இடையே லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவி இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நான்கு முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே ஒரு முறை, லக்னோ சூப்பர் ஜெயண்ட் 2 முறை, ஒரு போட்டி முடிவு இல்லை. லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் 217 ஆக உள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னோவின் அதிகபட்ச ஸ்கோர் 211 என இருக்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி! மருத்துவர்கள் கூறுவது என்ன..
by Askar
written by Askar
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அனைவரும் அச்சப்படுகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது குறித்தும், ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறியதாவது:
புவி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் கடும் வெப்பத்தின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் கடும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தங்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த, காலக்கட்டத்தில் ஒருவர் போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அவரது உடலின் நீர்சத்து வெகுவாக குறைந்துவிடும். இதன் காரணமாக உங்கள் உடலின் சூடு அதிகரிக்கும். இந்த சூடானது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது. உடலால் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் இது ஏற்படுகிறது. வெப்பநிலை 103 டிகிரிக்கு மேல் உயரும்போது, உடலை குளிர்விக்க முடியாமல் போகும்போது, தோல் சிவந்து வறண்டு போகும். அதிக சூடு காரணமாக தலை வலி, குமட்டல், தலைச்சுற்றல், வலிப்பு, தசை இழுப்பு மற்றும் குழப்பம் மற்றும் சில நேரங்களில் சுயநினைவு இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளியேறுகிறது. இதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படும்.
வெப்ப அழுத்தம் என்பது உடல் குளிர்ச்சியடையாமல் இருப்பதாகும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வையானது தொடர்ந்து அப்படியே இருப்பதால் அது காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். வெப்ப சோர்வு என்பது உங்கள் உடல் அதிக வெப்பமடையும்போது ஏற்படும் ஒரு நிலை மற்றும் வெப்பம் தொடர்பான மூன்று நோய்களில் ஒன்றாகும், வெப்ப பிடிப்புகள் லேசானவை மற்றும் வெப்ப பக்கவாதம் மிகவும் தீவிரமானது. கடுமையான வியர்வை உடலில் சொறி சிரங்கு, தோல் சிவத்தல், வலிமிகுந்த சிவப்பு கொப்புளங்கள், தோலில் தடிப்புகள் அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இவை பொதுவாக மார்பு, முதுகு மற்றும் கைகளில் ஏற்படுகின்றன. நீண்டநாள் சுவாசம் மற்றும் இருதய நோய் மற்றும் ரத்த குழாயில் பிரச்னை உள்ளவர்களுக்கு கடும் வெயில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதன் முற்றிய நிலை மரணத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே, இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவை வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடலில் நீர்சத்தை பராமரிக்க அதிகளவு தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும், உடலுக்கு நீர்சத்தை தரும் பானங்கள், மோர், தேங்காய் துருவல் போன்றவற்றை சாப்பிடலாம். காபி, ஆல்கஹால் உள்ளிட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது. உடலை இறுக்கிப்பிடிக்காத தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
கடும் வெயிலில் உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் போன்ற வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவும். விளையாட்டு மற்றும் வெளியே செல்ல வேண்டிய வேலைகள் இருந்தால், அவற்றை மாலை வேளையில் செய்வதற்கு திட்டமிடுங்கள். விளையாட்டு வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. சன்கிளாஸ், தொப்பி, குடை மற்றும் சன்ஸ்கிரீன் லோஷன் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மின்விசிறி, ஏர் கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மால்கள் அல்லது குளிர்ச்சியான இடங்களில் இருப்பது நல்லது. நீச்சல் குளத்தில் குளிப்பது என்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மரங்களை நடுவது சுற்றுச்சூழலை குளிர்விக்க உதவுகிறது, மரங்களை வெட்டி இயற்கையை அழிக்கக்கூடாது. கோடை காலங்களில் ஒவ்வொரு தெருக்களிலும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மண் பானைகள் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
எனவே, மக்களின் தாகம் தணிக்க ஒவ்வொரு இடங்களிலும் மண் பானைகளில் தண்ணீர் வைத்தால், இந்த கோடை காலத்தில் மிகவும் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! சென்னையில் இன்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது…
by Askar
written by Askar
தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானதுவேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-தஞ்சாவூர் 102.2, திருப்பத்தூர் 106.88, திருச்சி 104.18, திருத்தணி 103.64, வேலூர் 106.7, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்..
by Askar
written by Askar
நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முதல் வார்டு பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைச்சாமி தனக்கு சொந்தமான வீட்டை தனது மகன் விஜய கண்ணனுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆடு மேய்ப்பு தொழிலுக்கும் செல்ல முடியாத மலைச்சாமி வீட்டிலேயே முடங்கினார்.இதனால் வீட்டில் இருப்பவர்கள் மலைச்சாமியை பாரமாக நினைக்கத் தொடங்கினர்கள். இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பாக கடைசி காலம் வரை மகன் இருப்பார் என நம்பிய தந்தை, சொத்து கைமாறியவுடன் தந்தையை கைவிட்டு உள்ளார். மேலும் அவருடைய மனைவியும் இவரை விட்டு பிரிந்து விட்டார் .
மனைவி மற்றும் மகன் இருவரும் கைவிட்டதால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமலும் தங்குவதற்கு இடமில்லாமலும் வயதான காலத்தில் மலைச்சாமி தவியாய் தவித்துள்ளார்.
கிடைத்ததை சாப்பிட்டும், தெருவில் உறங்கியும் தனது அன்றாட பொழுதை கழித்த மலைச்சாமி தன்னை ஏமாற்றிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தனக்கு சொத்தை மீட்டு தாருங்கள் என நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடியிடம் மனு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த மனு உரிய விசாரணைக்காக கோட்டாட்சியருக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வதாக வட்டாட்சியர் தனுஷ்கோடி கூறியுள்ளார்.
தனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும் மலைச்சாமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..
தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், புளியரை சோதனைச் சாவடியில் கால்நடை பாரமரிப்புத் துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக் காய்ச்சல் தடுப்பு முகாம் மற்றும் பணிகளை நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி..
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்குகோரியும் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..
written by Abubakker Sithik
கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..
வீ.கே.புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் பின்வரும் 06 நபர்களை அப்போதைய சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இடையர்தவனை ராமர் என்பவரின் மகன் ஐயப்பன் (37), தாயார் தோப்பு குத்தாலிங்கம் என்பவரின் மகன் சேர்மலிங்கம் (50), ஜான்சன் என்பவர் மகன் மோசஸ் ராஜ்குமார் (44), சங்கரன்கோவில் முருகேசன் என்பவரின் மகன் மணிகண்டன் (57), ராஜபாளையம் சீனி என்பவரின் மகன் வீரபாண்டியன் (57) மற்றும் ராஜபாண்டி சண்முகையா என்பவரின் மகன் ராஜேந்திரன் (52) ஆகியோரின் வழக்கு விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி, குற்றவாளிகளுக்கு தலா 07 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வீ.கே.புதூர் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூரில் மிகவும் பழமையான புனிதம் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கடந்த 9 நாளுக்கு முன்பு, காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் பல்வேறு தீபாராதனைகள் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து வைகை ஆற்றில் சரியாக ஏழு முப்பது மணி அளவில் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷத்துடன் இறங்கி பக்தர்களுக்கு அருள் அளித்தார். மேலும் அங்குள்ள மண்டகப்படியில் இன்று ஒரு நாள் முழுவதும் பக்தர்களுக்காக காட்சியளிக்கிறார். பின்பு, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலை வந்து அடைவார்.இந்த சித்திரை திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து வந்திருந்த அனைத்து ஆன்மீகப் பெரியோர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் வார வழிபாட்டு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வாட்டி வதைக்கும் வெயில்!மரத்திலேயே வதங்கி உதிர்வதால் விவசாயிகள் கவலை..
by Askar
written by Askar
பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே காய்ந்து உதிர்வதால் விவசாயிகள் கவலை..
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, கோம்பைபட்டி, கணக்கண்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மாங்காய் விவசாயத்தில்.ஈடுபட்டு வருகின்றனர. வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி, சித்திரை மாதங்களில் மாங்காய் விளைச்சல் கிடைக்கும். இந்த ஆண்டு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பழனியில் மாங்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது. மாமரங்களில் பூ பூத்து பிஞ்சுகள் உருவாகும் நேரத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் மரத்தில் இருந்த மாபிஞ்சுகள் உதிர்ந்து வருகிறது. அதிக வெப்பத்தால் பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பழநி- ரியாஸ்
You must be logged in to post a comment.