Home செய்திகள் கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..

by Abubakker Sithik

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..

வீ.கே.புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் பின்வரும் 06 நபர்களை அப்போதைய சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இடையர்தவனை ராமர் என்பவரின் மகன் ஐயப்பன் (37), தாயார் தோப்பு குத்தாலிங்கம் என்பவரின் மகன் சேர்மலிங்கம் (50), ஜான்சன் என்பவர் மகன் மோசஸ் ராஜ்குமார் (44), சங்கரன்கோவில் முருகேசன் என்பவரின் மகன் மணிகண்டன் (57), ராஜபாளையம் சீனி என்பவரின் மகன் வீரபாண்டியன் (57) மற்றும் ராஜபாண்டி சண்முகையா என்பவரின் மகன் ராஜேந்திரன் (52) ஆகியோரின் வழக்கு விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி, குற்றவாளிகளுக்கு தலா 07 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வீ.கே.புதூர் காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!