Home செய்திகள் பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.

பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.

by Askar

பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்:

சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு:

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளித்தார்கள். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்த கேள்விக்கு:

அது எப்போதும் வரத்தான் செய்யும். வரவர திருத்தம் செய்து அறிவிப்பார்கள்.

அதிமுகவை மீட்பது குறித்த கேள்விக்கு:

பொறுத்திருந்து பாருங்கள்.

பிரதமர் மோடி இஸ்லாமியர் தவறாக பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:

பாரத பிரதமர் பத்தாண்டு கால ஆட்சி சிறப்பாக நடத்தினார். எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!