Home செய்திகள் இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!

இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் நெட்டை இரசு நாற்றுகளும் 3000 எண்கள் விற்பனைக்கு நெட்டை x குட்டை இரக நாற்றுகளும் ஆக மொத்தம் 24500 நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ,ஒரு எண் நெட்டை இரக நாற்று ரூ.60/- எனவும் ஒரு எண் நெட்டை x குட்டை இரக நாற்று ரூ.125/- விலையில் விற்கப்படும் என்றும் ,தென்னை நாற்று விநியோகம் தொடர்பான விபரங்களுக்கு 9080246728 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் 4 வருடங்களில் காய்பிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!