இராமநாதபுரம், செப்.10- தமுமுக 29ஆம் ஆண்டை முன்னிட்டு மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை சார்பில இலவச கண், பொது மருத்துவ முகாம் நடந்தது. தமுமுக மாவட்ட பொருளாளர் ஹமீது சபிக் தலைமை வகித்தார். அப்துல்லாஹ் என்பவருக்கு இருதய சிகிச்சை மருத்துவ உதவியாக ரூ.20 ஆயிரம்| மண்டபம் ஹமீது என்பவருக்கு உயர் கல்வி உதவி தொகை ரூ. 5 ஆயிரம் என 25 ஆயிரம் வழங்கப்பட்டது. இம்முகாம்பில் 250 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லா கான், மதிமுக மாவட்ட மீனவர் அணி செயலர் பேட்ரிக், தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலர் ஆசிக் சுல்தான், பனைக்குளம் பரகத்துல்லா, தமுமுக மாவட்ட துணைச் செயலர் சுலைமான், மமக மாவட்ட துணை செயலர்கள் பிஸ்மி சேக், ஜாகீர் பாபு, இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச் செயலர் ஹக்கீம், தொண்டரணி மாவட்ட செயலர் நைனா, மீனவர் அணி மாவட்ட செயலர் ரஜப் ரஹ்மான், பாம்பன் கிளை தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக கிளை செயலர் முஹமது சர்புதீன், பரக்கத் அலி, இஸ்லாமிய மாணவர் இயக்க கிளை செயலர் முஹமது ஃபாசில், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹமது தாஜுதீன், தமுமுக நகர் செயலர் முஹமது தமீம், மமக நகர் செயலர் செய்யது அக்பர், நகர் பொருளாளர் மைதீன் கனி, இஸ்லாமிய பிரசார பேரவை நகர் செயலர் முஹமது சபி, தங்கச்சிமடம் கிளை தலைவர் நூருல் ஜமீர் மமக செயலர் இலியாஸ் தமுமுக செயலர் ஆசிர் ரஹ்மான், பொருளாளர் செய்யது இஸ்மாயில், பனைக்குளம் ஹாஜா,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.