தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்தால் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்தாகவும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் தேர்தலுக்கு முன்னரே 75% நிதி உள்ளிட்ட அணைத்தும் கோரிக்கை களையும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்படுவதாகவும், எதி்ர்வரும் நாட்களில் அரசாணையாக வெளிவர உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய அறிவிப்பின்படி கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் ஏற்கப்பட்டு விட்டதால் அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால் அனைவரும் வழக்கம்போல் பணிக்கு திரும்புவதாக அச்சங்கத்தின் மாநில மையம் தெரிவித்துள்ளது
Category:
தேசிய செய்திகள்
உலக செய்திகள்கீழக்கரை செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்மாநில செய்திகள்மாவட்ட செய்திகள்விளையாட்டு செய்திகள்
கீழக்கரை சார்ந்தவருக்கு சவுதி அரேபியாவில் பரிசு விழா !
by Baker BAker
written by Baker BAker
சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் தமிழர்கள் அதிகமாக வேலை செய்யும் நிர்வணமன அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் விளையாட்டு பேட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கீழக்கரை, காயல்பட்டிணம் கடையநல்லூர், லெப்பைகுடி ஊரை சேர்ந்தவர்கள் 6 அணிகளாக கலந்து கொண்டதுடன். வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மொடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை கம்பேனியின் இயக்குணர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன் மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினர்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்.!? முடிவுக்கு வருகிறதா கூட்டணி இழுபறி..!?
by Askar
written by Askar
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் நீண்ட இழுபறிக்கு பிறகு இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய்குமார், முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். அத்துடன் காங்கிரஸ் விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்தார்கள்.ஆனால் தி.மு.க. தரப்பில் 5 பிளஸ் 1 என்று கூறப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தலைவர்களுடன் தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்.பேச்சுவார்த்தை முழுவதும் டெல்லி தலைவர்களுடனேயே தொடர்ந்தது. தி.மு.க. தரப்பில் ஒரு கட்டத்தில் 6 பிளஸ் 1 என்று முடிவாக சொல்லியதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.வடமாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதில் இழுத்து பிடித்தது போல் தமிழகத்திலும் சிக்கல் ஏற்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தரமுடியாது என்று தி.மு.க. பிடிவாதம் காட்டியது. அதே போல் 12-ல் இருந்து குறைவாக சம்மதிக்கப் போவதில்லை என்று காங்கிரசும் பிடிவாதம் காட்டியது.இதனால் உடன்பாடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. வரட்டும் பார்க்கலாம் என்று இரு தரப்பும் கொஞ்ச நாட்கள் விட்டு பிடித்தன.இதற்கிடையில் 3 தொகுதிகளுக்காக முரண்டு பிடித்து வந்த விடுதலை சிறுத்தைகளுக்கு கடைசியில் 2 தொகுதிகள் வழங்கப்பட்டது.இரண்டு தொகுதிகளுக்காக மல்லு கட்டிய வைகோவும் ஒரு தொகுதியை பெற்றுக் கொண்டு அமைதியாகி விட்டார்.கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கும் கடந்த தேர்தலில் ஒதுக்கிய எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கியதால் கூட்டணி பங்கீடு சுமூகமாக முடிந்தது.அடுத்து காங்கிரஸ்தான் என்ற நிலையில் தி.மு.க. தலைவர்கள் நேற்று டெல்லி காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது எல்லா கட்சிகளுக்கும் பழைய எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்து விட்டோம். எனவே நீங்களும் கூடுதல் தொகுதி வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள். பழைய எண்ணிக்கையில் அதாவது 9 பிளஸ் 1 தர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.தொகுதி உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று மாலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜய்குமார் ஆகியோர் சென்னை வருகிறார்கள்.விமான நிலையத்தில் இருந்து நேராக அறிவாலயம் செல்கிறார்கள். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடுகிறார்கள்.இந்த உடன்பாட்டின் போது எந்தெந்த தொகுதிகள் என்பதும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக கூறப்படுகிறது.அதே போல திமு.க. தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தியதில் சில தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை என்றும் அதனால் அந்த தொகுதியை மாற்றி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.தலைநகர் சென்னையிலும் ஒரு தொகுதி வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக தென்சென்னை தொகுதியை கேட்கிறது. இது தி.மு.க. கைவசம் இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பெத்தரி தெருவில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு (WIM) விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பெண்களின் வலிமை மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி மாபெரும் பொது கூட்டம் விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவி முபினா முன்னிலையில் நடைபெற்றது. விம் நகர் செயலாளர் மசூதா வரவேற்புரை வழங்கினார். விம் நகர் தலைவி செய்யது ஜாபிரா தொகுப்புரை வழங்கினார். இக்கூட்டத்தில் பெண்கள் வலிமை பெற வேண்டும் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் குறிப்பாக அரசியலில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விம் மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா பீவி , எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கீழை ஐஹாகீர் அருஸி , பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவி அக்பர் ஜான் , ஐந்தாவது வார்டு உறுப்பினர் ரஜப்பு நிஷா , விம் மாவட்ட பொதுச் செயலாளர் சித்தி நிஷா , கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியில் 18 வது வார்டு கவுன்சிலர் சகினா பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு உறுப்பினர் பைசல் கருத்துரை வழங்கினார். விம் நகர் பொருளாளர் சையது சுல்தான் பீவி நன்றி உரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விம் நகர் துணைத் தலைவி அஜிதா பேகம் , துணைச் செயலாளர் அஸ்மது நிஷா , செயற்குழு உறுப்பினர் ரஹ்மத் ரமீஸா பேகம் , முபிதா , நஸ்ரின் தஸ்லிமா , எஸ்டிபிஐ கட்சியின் நகர் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகர் மன்ற தலைவர் பேச்சுரிமை பறிப்பு ! நகர்மன்ற உறுப்பினர் மகளிர் தின வாழ்த்து !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தாங்களே முன்வந்து சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் மேலும் சாலை அமைக்கவில்லை என்றால் சாலையில் உருண்டு பிரண்டு போராட்டம் நடத்துவேன் என்று எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாவது வார்டு உறுப்பினர் உம்முல் சல்மா கூறுகையில் கருவாட்டுக் கடை பகுதியில் இருந்து பிக் பஜார் வரை கழிவுநீர் வாருகால் அமைத்து தர வேண்டும் என்றும் முத்தலிபு அரிசி கடை பகுதியில் வாருகால் குழாய்கள் மறுசீரமைக்கு தர வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 19 ஆவது வார்டு உறுப்பினர் சப்ராஸ் நவாஸ் கூறுகையில் நகராட்சியில் போதுமான நிதி பற்றாக்குறை இருப்பதால் நகராட்சியின் நிதியை கருத்தில் கொண்டு முக்கியமான தீர்மானங்களை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் கூறுகையில் மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து போற்றி புகழ்ந்தார். அதனைத் தொடர்ந்து நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு அதன் வேலைபாடுகளை கள ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கடந்த நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்த போது அமைத்து தருவதாக துணைத் தலைவர் வாக்குறுதி அளித்தார் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என இருபதாவது வார்டு உறுப்பினர் ஷேக் உசேன் விளக்கம் கேட்டார். பதில் அளிக்காமல் அமர்ந்திருந்தார் துணைத் தலைவர். கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறும் பொழுது நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொழுது நகர் மன்ற தலைவரை பேச விடாமல் தானாகவே முன்வந்து பதில் கூறி வருகிறார். அவரிடம் வைத்த கேள்விக்கு பதில் கூறாமல் மன்றத் தலைவரிடம் கேட்கும் கேள்விக்கெல்லாம் இடைமறித்து பேசுகிறார். இதனால் நகர் மன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைக்கும் முறையாக நகரமன்ற தலைவரால் பதில் அளிக்க முடியவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் இருந்தும் அவர்களிடம் கேள்வி எழுப்பினார் அவர்கள் பதில் கூற விடாமல் ஏன் துணைத் தலைவர் தடுக்கிறார் என்பது சில உறுப்பினர்களிடம் கேள்வியாகவே இருந்துள்ளது. அடையாளப்படுத்துவதற்காக முன் வருகிறாரா என்ற சந்தேகங்கள் எழுகிறது இதனால் நகர்மன்றத்தில் தீர்மானங்கள் முறையாக விவாதிக்க முடிய வில்லை என்று வருத்தப்படுகின்றனர். இனிவரும் நகர்மன்ற கூட்டங்களில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் முறையாக உறுப்பினருக்கு பதிலளித்தால் மட்டுமே இது போன்ற குழப்பங்கள் தீரும் என்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் பொதுவான கருத்தாகவே உள்ளது. மேலும் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கூட்டம் 20 நிமிடங்களில் முடிந்தது .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு விற்பனை ! சிபிஐ மாநில செயலாளர் போராட்டத்தில் பேட்டி !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது படகுகளை பறிமுதல் செய்வது படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கும் இலங்கை அரசை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பது : தமிழக மீனவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பில்லை என்கின்ற மிக மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் இன்றைக்கு பிரதமர் வேட்பாளராக இருக்கின்ற நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் மீனவர்களுக்கு பாதுகாப்பளிப்பேன் என்கின்ற வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இந்த பத்தாண்டு காலத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து இருப்பதாகவும் பகைநாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானில் கூட இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படை தமிழக கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு தொல்லை அளிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை சிறை தண்டனை இலங்கை அரசு வழங்கி சிறையில் அடைத்துள்ளதாகவும் 143 தமிழக படகுகளை இலங்கை அரசாங்கம் பறிமுதல் செய்து வைத்துள்ளது .ஒவ்வொரு படமும் 40 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான படகுகள் ஆகும் அதனை மீட்பதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை கடந்த நவம்பர் மாதம் ராமேஸ்வரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்த பொழுது அதற்கு முதல் நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் அப்போது மீனவர்கள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்தனர் உடனடியாக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் . அப்படி விடுவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் 143 தமிழக படகுகளை இலங்கை அரசிடம் இருந்து மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் பெருமளவு உதவி செய்து அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எல்லா உதவிகளையும் செய்தனர் . இப்படி நல்ல அடிப்படையில் உதவி செய்த சூழ்நிலையில் மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் நீடித்து வருவதாகவும் தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் தானா அல்லது அன்னியர்களாக என்ற ஐயம் உள்ளதாகவும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கம் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும் பொழுது நடவடிக்கை எடுக்காமல் தமிழக மக்களை இந்திய குடிமக்களாக ஒன்றிய அரசு கருதவில்லையா என்ற கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார் .அதன் பின் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குஇந்தியா முழுவதும் போதைப்பொருள் இறக்குமதி செய்யும் மையமாக இருப்பது குஜராத் எனவும் அங்கிருந்து தான் போதைப் பொருள்கள் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அதில் தமிழ்நாடு ஒன்றாக உள்ளதாகவும் போதைப் புழக்கத்திற்கு முக்கியமாக மாநிலமாக திகழ்வது குஜராத் மாநிலமாகவும் குஜராத் மாநில துறைமுகத்திற்கு யார் அதிபர் என அனைவருக்கும் தெரியும் அதை கட்டுப்படுத்தினாலே தமிழ்நாடு முதல் இந்தியா முழுவதும் போதைப்பொருள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த ஐவர் ! ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டை பறிமுதல் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கலம் துடுப்பு உள்ளிட்ட சில அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் கடல் அட்டைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும், தேவையும் இருப்பதால் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை சிலர் பிடித்து பதப்படுத்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பழனிவலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைப்படகு ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் கடலில் சென்று கொண்டிருப்பதை கண்ட வனத்துறையினர் படகை மடக்கி பிடித்து படகில் சோதனை செய்ததில் 185 கிலோ கடல் அட்டை இருந்தது தெரியவந்தது. சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த படகை கரைக்கு இழுத்து வந்து அந்த படகில் இருந்த மண்டபத்தை சேர்ந்த முகமது, முகமது அஷ்ரப், இம்மாத்தலி, வாசிம்கான், பீர்முகமது ஆகிய 5 பேரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து விளக்கம் அளித்தார். ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான முனைவர் ராம்குமார் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னையை தாக்கும் கருந்தலைப்புழு , சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு , தென்னை சுருள் வெள்ளை ஈ மற்றும் தென்னையை தாக்கும் நோய்களான தஞ்சாவூர் வாடல் நோய், குருத்து அழுகல் நோய் போன்றவற்றை கண்டறியும் முறைகள் மற்றும் நிர்வாகம் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க உரையாற்றினர். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர் முனைவர் ஜெகதீசன் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றியும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் உரப் பரிந்துரை குறித்தும் விளக்கி பேசினார் அம்பேத்குமார் மூத்த வேளாண் அலுவலர் ராமநாதபுரம் உயிர் உரங்களின் பயன்பாடு அதனை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். கலைவாணி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) உச்சிப்புளி உழவர் கடன் அட்டை விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்கம் மையம் உச்சிப்புளி தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் , சீதாலட்சுமி வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், பாண்டியம்மாள் தோட்டக்கலை அலுவலர் தென்னை நாற்று பண்ணை, உச்சிப்புளி, தங்கவேல் துணை தோட்டக்கலை அலுவலர், உச்சிப்புளி அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனி ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் , பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ,உச்சிப்புளிஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இதுசம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை உதவிக்கு 8300031100 Hello Police 100 என்ற எண்னை உதவிக்கு அழைக்கலாம் என்றும் அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம் என்று தெரிவித்தார. மேலும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம் என்றும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை வருவாய் ஆணையர் அலுவலகத்தில் குவிந்த வருவாய் துறையினர் ! பொதுமக்கள் பாதிப்பு !! அரசு அழைத்துப் பேச சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !!!
by Baker BAker
written by Baker BAker
சென்னையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சுமார் 5000 வருவாய்த்துறை அலுவலர்கள் வருவாய் ஆணையர் அலுவலகம் முன்பாக முகாமிட்டு இன்று முதல் (07.03.2024) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி மூன்று கட்ட போராட்டங்களை அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையான அனைத்து நிலை அலுவலர்களும் இரவு பகலாக தொடர் காத்திருப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு இதுவரை அழைத்து பேசாத காரணத்தினாலும் , அரசின் அலட்சியத்தால் சென்னையில் குவிந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வருவாய்துறை சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் போராட்டம் நீடிக்காமல் அரசு உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி அழைத்துப்பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என பல பொதுநல அமைப்புகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் 34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 34 வது போட்டி நடைபெற்றது, இதில் தமிழ்நாடுகோவா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பாண்டிச்சேரி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், உள்ளிட்ட 32 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், தேசிய அளவிலான நடுவர்கள்குழு போட்டியை 5 நாட்கள் கீழக்கரையில் நடத்தியது. இறுதிப்போட்டியில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த ஆண்கள் அணியினர் டென்னிஸ் பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கோப்பையை தட்டி சென்றது, இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டி வாழ்த்தினார், இதில் பல்வேறு மாநிலம் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய அளவிலான விளையாட்டு சங்கம் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கீழக்கரையில் சோதனை !
by Baker BAker
written by Baker BAker
பெங்களூரு சிறையில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்பாக பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கீழக்கரை உள்ள இருவரது வீட்டில் சோதனை நடத்தினர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நசீர். இவர் சிறையில் இருந்த போது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தார் என்ற வழக்கின் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ந்தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நசீரின் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாயை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ந்தேதி ஏடிஎம் மெசினில் டெபாசிட் மூலமாக நசீர் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை மண்ணடியில் கீழக்கரையைச் சேர்ந்த தமீமுல் ஆசிக் மற்றும் அல் முபீத் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமீமூல் ஆசிக் சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வருகிறார். அல் முபீத் சென்னையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்த பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அவர்கள் சொந்த ஊரான கீழக்கரை பருத்தி காரன் தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரு இடங்களிலும் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரி இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வீட்டில் எந்த முக்கிய ஆவணங்களும் கிடைக்காததால் ஒரு பென்டிரைவ் மற்றும் இருவரது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்றதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் சென்ற பெண் மீது என் என்எல் பஸ் மோதியதில் படுகாயம் டிரைவர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது என். என்.எல் பஸ் மோதியதில் (ஜெயலெட்சுமி) படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி (47) இவர் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு ரோட்டோரம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி வந்தஎன் என்எல் பஸ் ஜெயலெட்சுமி மீது மோதியதில் பின் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம்பட்ட ஜெயலெட்சுமியின் கணவர் கண்ணன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்ன கன்னு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியா வழக்குபதிவு செய்து என் என்எல் பஸ்ஸை பறிமுதல் செய்து டிரைவர் லாரன்சை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுத்தியதாகவும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், பட்டணம்காத்தான் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி. மருது பாண்டியன் துவக்க உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி! ஆகியோர் போதைப்பொருள் கடததல் காரர்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். டில்லியில் சிக்கிய போதைப்பொருள் தமிழக போலீசார் பிடித்திருக்கால் உணவுப்பொருள் எனக் கூறி மூடிமறைத்திருப்பர்கள் டில்லியில் பிடிபட்டதால் குட்டு வெளியானது என மாவட்ட கழக செயலாளர் எம்- ஏ. முனியசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கண்டனம் உரை நிகழ்த்தினார் . முன்னாள் அமைச்சர் கோஷங்களை படிக்க பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் உரக்க கோஷமிட்டனர். அதிமுக தொண்டர்கள் கையில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என்னும் பதாகையுடன் திரளாக கூடியிருந்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன் மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா சசிகுமார, அவைத்தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார, முதுகுளத்தூர் முனியசாமி பாண்டியன, கடலாடி, காளிமுத்து கமுதி ராஜேந்திரன், அந்தேரனிராஜ சாயல்குடி, பிரவீன் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் , சிக்கல் முதுகுளத்தூர் நகர் செயலாளர் முத்துராமலிங்கம் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் இரவு பகலாக தொடர் போராட்டத்தை தொடங்கிய வருவாய் துறை அலுவலர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உள்பகுதியில் 10 அம்ச கோரிக்கையினை தமிழக அரசு நிறைவேற்ற கோரி, வருவாய் துறை ஊழியர்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கினர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி மூன்றாம் கட்ட போராட்டமாக அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையான அனைத்து நிலை அலுவலர்களும் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊழியர்களும் கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து இரவு பகலாக ஆண்கள் பெண்கள் என அனைத்து ஊழியர்களும் தேவையான உணவை அந்த இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் வருகின்ற 7ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் இருந்து சுமார் 14,000 மேற்பட்ட வருவாய் துறை சங்கத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பணிகளையும் புறக்கணிக்கப் போவதாகவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் நிர்மலாதேவி ஆகியோர் இணைந்து குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்ள்ளது. அதிலும் முடிவு எட்டப்படவில்லையெனில் சென்னை வருவாய் நிர்வாகஆணையர் அலைவலகம் முன்பாக 14000 வருவாய்த்துறை அலுவலர்களும் இரவுபகலாக காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி குமார் செய்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி, மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் புரோஸ்கான் பள்ளி தலைமை ஆசிரியர் த. கொன்னமுத்து, ஆசிரியர்கள் மு. ரமேஷ் , த. சந்திரசேகர் , உதவி ஆசிரியர்கள், PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6,698 மாணவர்களும் 7,500 மாணவிகளும் தனித்தேர்வர்கள் 280 நபர்களும் என மொத்தம் 14,478 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு 160 மையங்களில் நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுவையில் தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நகராட்சி பொறியாளர் அருள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா திமுக அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் திமுக நகர் துணை செயலாளர் ஜெய்னுதீன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ் சித்திக் மீரான் அலி நஸ்ருதீன் சுகைபு சேக் உசேன் சக்கினா பேகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
You must be logged in to post a comment.