பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம் செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடை முறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Category:
செய்திகள்
நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..
by Askar
written by Askar
நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரக்கூடிய 30 ந்தேதி மாலை மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற (புதுச்சேரி) தலைமை நீதிபதி டி.கிருஷ்ணராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விளையாட்டு விழா நடைப்பெற உள்ளது அதனைத் தொடர்ந்து வரக்கூடிய அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார்..
by Askar
written by Askar
பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார்..
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி கிரி வீதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரி வீதியில் உள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் கூடுதல் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து இன்று கோயில் நிர்வாகம் சார்பில் 26 லட்சம் மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் வாகனமும், அமெரிக் காவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனமும் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பழனி கோயிலுக்கு தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருவதாகவும் முதியவர்கள் குழந்தைகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பேட்டரி கார் வாங்கி கொடுத்ததாக ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்..
by Askar
written by Askar
3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்..
புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது 3வது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறார். நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41ல் இருந்து மே 6ம் தேதி இரவு 10:34 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்டவர். சுனிதாவுக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..
written by Abubakker Sithik
ஆதரவற்ற முதியவரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு..
தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பணிகளை பசியில்லா தமிழகம் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்ற நிலையில் 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு பெண் தங்கியிருப்பதாக கடையநல்லூர் காவல் ஆய்வாளர் மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. உடனடியாக களத்திற்குச் சென்று அந்த முதியவரை மீட்டெடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து தேவையான முதலுதவி செய்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து காவல்துறை ஆய்வாளர் மூலமாக GENERAL MEMO வாங்கி பசியில்லா தமிழகத்தின் தென்காசி மாவட்டம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் அனுமதித்து தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றார்.
அந்த இல்லத்தில் அவர்களுக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பாய், தலையணை மற்றும் அடிப்படை பொருட்கள் அடங்கிய WELCOME KIT கொடுத்து இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து அன்புடன் வரவேற்று இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்கள் யாரேனும் இருந்தால் பசியில்லா தமிழகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அந்த நபர் மீட்டெடுக்கப்பட்டு அவருக்கு உரிய உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தும் இலவசமாக செய்து கொடுப்பதற்கு பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பு தயாராக இருக்கிறது. ஆதரவற்றோருக்கு உதவும் பணியில் பசியில்லா தமிழகம் அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு 93639 14416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
2024; பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டி ‘மே’ தினச் சூளுரை ஏஐடியுசி – சிஐடியு கூட்டறிக்கை..
by Askar
written by Askar
சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
உழைக்கும் மக்கள் உரிமைப் போரில் பங்கேற்ற அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
உலகில் வறுமை, சுரண்டல், சமூக அநீதி போன்றவை பாட்டாளி வர்க்கத்தைச் சூழ்ந்துள்ளது; தீவிர தேசியவாதம், பண்பாட்டுப் பிரிவினைவாதம் ஆகியவற்றோடு பாசிசம் கை கோர்த்துள்ளது. அப்பா விகளான பாலஸ்தீன மக்களின் மேல் இஸ்ரேல் மிருகத்தனமான இனப்படுகொலை தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஜனநாயகம் மற்றும் தொழிற் சங்க உரிமைகள் மீதான கடுமையான புதிய, புதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை கொடூரமாகப் பாதித்துள்ளது. தனியார்மயமாக்கல், ஒப்பந்தம், அவுட்சோர்சிங், டெலிவொர்க்கிங் மற்றும் “சேவைக் குத்தகை” போன்றவை இந்த கடுமையான நவதாராளவாத தாக்கு தலின் வடிவங்கள் ஆகியுள்ளன. இவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
பாலஸ்தீனத்தின் மீதான உடனடியான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் பிற மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து அமெரிக்காவில் பிரம்மாண்டமான கூட்டணி உருவெடுத்துள்ளது.
பின்லாந்து, இலங்கையில்…
உலகின் பல சிறந்த சமூக நலத் திட்டங்களுக்கு நன்கு அறியப்பட்டது பின்லாந்து. ஆனால் தற்போ தைய அமெரிக்க ஆதரவு, நேட்டோ-சார்பு பின்லாந் தின் வலதுசாரி பிரதமர் பெட்டேரி ஓர்போ, தொழிலாளர் உரிமைகள் மீதான
தடைகள் மூலம் தொழிற்சங்கங்க ளை உடைக்க முயற்சிக்கிறார். அதற்கு ஃபின்னிஷ் தொ ழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (SAK) அரசியல் பொது வேலைநிறுத்தங்கள் மூலம் பதிலளித்துள்ளன. இலங்கையில் வேலை நேரத்தை அதிகரித்தல், நியாயமற்ற பணிநீக்கம், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமைகளை அகற்றுதல் போன்ற வகையில் 13 தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி புதிய வேலை வாய்ப்புச் சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள் ளது. இதனை எதிர்த்த தொழிற்சங்கங்களின் போராட்டம் வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இரயில்வேயில் ஒட்டுமொத்தமாக தனியார்மயம் நடந்து கொண்டிருக்கிறது. அரசிடம் இருந்த படைக்கலன் ஆலைகள் நிறுவனமய மாக்கப் பட்டுள்ளன. ஆயுதங்களும், வெடிமருந்துகளும் உற்பத்தி செய்யும் உரிமம் பன்னாட்டு கம்பெனிக ளுக்கு தரப்படுகின்றன. நிலக்கரி, பாதுகாப்பு, தொலை பேசி, விமான நிலையம், பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, சுரங்கம், மருந்து, துறைமுகம், சாலைப் போக்குவரத்து, மின்சாரம், இரும்பு, எண்ணெய், கனரக இயந்திரங்கள் போன்றவைகளில் தனியார் மயமாக்கம் நடைபெறுகின்றன.
முறியடிக்கப்பட்ட மோடி அரசின் சட்டங்கள்…
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் (NDA-1) பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்ப தற்கென தனியாக ஒரு அமைச்சகத்தையே வைத்தி ருந்தார். இப்போது அந்தப் படுபாதகச் செயல் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ள நாடு இந்தியா எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்குவது சுயச்சார் பின்மைக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது. இந்திய தொழிலாளர்கள் 150 ஆண்டு காலம் போரா டிப் பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்புகளை உள்ளடக்கிய 44 சட்டங்களை மோடி அரசு மாற்றியது. அதற்குப் பதிலாக சத்தற்ற சக்கையாக, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக செயலுக்கு கொண்டு வர முடியாமல் இந்திய தொழி லாளி வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டங்களால் தடுத்தி ருக்கிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்க ளை 700க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்து விவசாயிகள் கிழித்தெறிந்திருக்கிறார்கள். சர்வ வல்லமை பெற்றவர் என்று பாஜகவினரால் போற்றப் படும் மோடியே நினைத்தாலும், அதை விவசாயிக ளும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டுப் போராடி முறிய டிக்க முடியும் என்பதை அனுபவம் நிரூபிக்கிறது.
ஐஎல்ஓ -வின் அறிக்கை
அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றா லும் கூட, ஏற்கனவே இருக்கும் சட்டங்களை செயல் படுத்துவதை அரசு கைவிட்டு விட்டது. தொழிலா ளர்களின் உண்மை ஊதியம் மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிறது. வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் எந்த சட்டப் பாது காப்புமற்ற அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கி றார்கள். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதில், ஆண்களை விட பெண்கள் ஐந்து மடங்கு பின்தங்கி இருக்கிறார்கள் என்று ஐஎல்ஓ அறிக்கை தெரி விக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் அகற்றுதல்) சட்டம், 1970-இன்படி இருந்த குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பையும் முற்றாகப் போக்கும் வகையில்
அவுட்சோர்ஸ் முறை அறிமுகப் படுத்தப்பட்டு பரவலாகி வருகிறது. இதனால் செல் வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் சுரண்ட லுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் கூலி அடிமைக ளாக நடத்தப்படுகிறார்கள். 30 கோடி தொழிலா ளர்கள், கிக், பிக்ஸட் டேம், நீம் மற்றும் திட்ட ஊழியர்கள் எனும் பெயர்களில் தொழிலாளர் என்ற வரையறை யில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.
27 கோடியே 73 லட்சம்
தொழிலாளர்களின் எதிர் காலத்திற்கான சேமிப்புகளைப் பராமரித்துவரும் தொழிலாளர் பிராவிடண்ட் ஃபண்ட் சேமிப்புப் பணம், கார்ப்பரேட்டுகள் நலனுக்காக, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவது, தொழிலாளர்களின் எதிர் காலத்திற்கு கேள்விக் குறியாகி உள்ளது.
வெற்று விளம்பர ‘இ’ஷ்ரம்…
‘இ’ ஷ்ரம் எனும் பெயரில் 30 கோடி தொழிலாளர்க ளை வெற்று விளம்பரத்திற்காக பதிவு செய்தனர். அவர்கள் நலனுக்காக இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. மாநில அரசுகளால் நடத்தப்படும் கட்டிட தொழிலா ளர் நல வாரியங்களை செயலிழக்கச் செய்து, அதில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடி தொழிலாளர் பணத்தை ஏப்பம் விட ஒன்றிய அரசு முயல்கிறது. ஆண்டுக்கு 25 நாள் கூட வேலையளிக்க முடியாத அளவுக்கு கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி தொழிலாளர்கள் வேலை அட்டை பெற்றிருந்தும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 70 முதல் 80 லட்சம் இளை ஞர்கள் வேலை வாய்ப்பு தேடி
வருகிறார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 5.7 சதவீதத்தில் இருந்து 17.5சதவீதமாக அதிகரித் துள்ளது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருக்கிறது. வேலை கிடைக்காத மக்கள் தொகையில் 83 சதவீதம் பேர் 34 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் என்று ஐஎல்ஓ தெரிவிக்கிறது.
நெருக்கடியில் தவிக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்
கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு,நடுத்தர தொழில் கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. பெருந் தொற்று, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலையேற்றம், உற்பத்திப் பொருள் இறக்குமதி போன்ற காரணங்களால் 2 கோடிக்கும் அதிகமான சிறு குறு நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன. வேலை செய்து பொருள் ஈட்டுவதாகச் சொல்லப் படுபவர்களின் எண்ணிக்கையில் 58 சதவீதம் -அதாவது ஒன்பதரை கோடிப் பேர்- சுயதொழில் புரிப வர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் ஈட்டுவது அற்பத் தொகைகளே ஆகும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தவிர்க்க முடியாத செலவினங்கள் அதிகரிப்பதால்
உலகத்தில் மிகக் கடும் பட்டினியில் உள்ள 16 நாடுகளில் ஒன்று இந்தியா என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. புரதச் சத்து குறைபாட்டால் 36 விழுக்காடு
குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கிறார்கள், 38 விழுக்காடு குழந்தை கள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் உள்ளனர். ஜிஎஸ்டி வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகி றது. சாமானிய மக்களிடமிருந்து 67 சதவீதம் வசூலிக் கப்படுகிறது. ஆனால் பெரும் பணக்காரர்களான 10 சத வீதம் பேர் வெறும் 3 சதவீதம்தான் வரியாகச் செலுத்து கிறார்கள். கார்ப்பரேட் வரி 32 சதவீதம் வரை இருந்தது. இப்போது அது 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. 1 சதவீதம் என்பது 50 ஆயிரம் கோடியை விட அதிகம்.
வறுமை ஒழிப்பு: பொய் தம்பட்டம்
2014 ஆம் ஆண்டில் மாத வருவாய் நகரங்களில் ரூ.1407 என்று வறுமைக்கோடு வரையறுக்கப்பட்டு இருந்தது. அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, 10 ஆண்டு களில் வறுமை கோட்டு வருவாய் ரூ.2279 என்று உயர்ந்தி ருக்க வேண்டும். ஆனால் 2023இல் நகர்ப்புற வறு மைக்கோட்டு வருவாய் ரூ.1286 என்று, 2014ல் இருந்ததை விட குறைவாக வரையறுத்தது. 2014ம் ஆண்டை விட குறைவான வருவாயை நிர்ணயித்து விட்டு, 25 கோடி பேரை வறுமை கோட்டிலிருந்து மீட்டுள்ளதாக பாஜக அரசு பொய்யாக தம்பட்டம் அடிக்கிறது.
இந்தியாவின் பொதுக் கடன் உள்நாட்டு உற் பத்தியை விட (GDP) 82.3 சதவீதமாக அதிகரித் துள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் கடன் அதிகரித்து சேமிப்பு வீழ்ந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது. மக்கள் வறுமையிலும், கடன் வலையிலும்
சிக்கித் தவிக்கின்றனர். நாட்டின் செல்வம் குறிப் பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந் துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயி களுக்கு தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்களின் போது எதிரி நாட்டு ராணுவத்தை எதிர் கொள்வது போன்ற மூர்க்கத்தனத்துடன் பாஜக அரசு கடுமையான தாக்குதல்களை தொடுத்தது.
ராமர் கோவில் திறப்பு விழா கைகொடுக்கும் என்று பாஜக அரசு நம்பியது. சட்டப் பூர்வமான தேர்தல் பத்திர மோசடியை உச்ச நீதிமன்றம் தடை செய்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு விதிகள் உருவாக்கியது. பொய், மோசடி,ஊழல், ஊதாரித்தனம், ஆணவம், சர்வாதிகாரம், மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல் இவற்றின் மொத்த உருவமான மோடி ஆட்சியை வீழ்த்தி நாட்டை காப்போம் எனும் முழக் கத்துடன் மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவ சாயிகள் முன்னணியும் இணைந்து போராடி வரு கிறோம். இந்த நிலையில் 18 ஆவது மக்களவை தேர்தல் நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி பாஜக மோடி ஆட்சி அகற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளி வரும் நிலை உருவாகியுள்ளது.
தொடர வேண்டிய உரிமை மீட்புப் போராட்டங்கள்…
இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொழிலாளர், விவசா யிகள் போராட்டங்களில் ஆதரவளித்தன; ஜனவரி 30, ஆகஸ்ட் 24 தேதிகளில் தில்லி மாநாட்டு பிரகடனங்க ளை மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாய முன்னணியும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு தந்துள்ளன. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளும் உறுதி அளித்துள் ளன. ஆட்சி மாற்றத்தின் விளைவாகவும், தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிப்பாலும்
இழந்த உரிமைகளை மீட்பதற்கு வழி பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உரிமை மீட்புப் போராட் டங்களை வெற்றியை நோக்கி தொடர்வோம். தோழர் சிங்காரவேலர் இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடிய நூற்றாண்டை கொண்டாட கடந்த ஆண்டு தயாரான போது, தமிழ்நாட்டில் தொழிலாளர்க ளின் வேலைநேரத்தை அதிகரிக்கும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது.
தமிழ்நாட்டின் தொழி லாளி வர்க்கத்துடன் மக்களும் இணைந்து போராடி னர். அந்த சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்பட்டது.
போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், டிஎன்சி எஸ்சி, ஆவின், மருத்துவம், உள்ளாட்சி உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான, நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்ட அம லாக்கம் கானல் நீராக உள்ளது. போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயர்களில் நிரந்தரமற்ற, சட்டப் பாதுகாப்பு ஏதுமற்ற தொழிலாளர்கள் நுழைக்கப் படுகிறார்கள்.
தொழிலாளர் வரையறைக்கு வராமல்…
ஐசிடிஎஸ், ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு, அமரர் ஊர்தி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போன்ற திட்ட ஊழியர்களை தொழிலாளி என்ற வரையறைக்குள் கொண்டு வராமல் கடுமை யான உழைப்புச் சுரண்டல் நடைபெறுகிறது. நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது.
உள்ளாட்சி துறையில் கீழ் நிலை யில் பணி அனைத்தும் அவுட்சோர்சிங் செய்யப்படு கிறது. சமூகத்தின் அடித்தட்டில் உழல்கிற ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளை பறித்து, முந்தைய நிலையை விட மோசமாக ஊதியத்தை குறைத்து, வேலைப்பளுவை அதிகரித்து, ஆட்குறைப்பை திணிக்கிறது. நிரந்தரத் தொழிலாளர் என்ற நிலையே இனி இல்லை எனும் நிலை உருவாக்கப்படுகின்றது. இது தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கோட்பாடுக ளுக்கு விரோதமானதாகும். சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது.
தலையிட வேண்டிய தொழிலா ளர் துறை, மாநில அரசின் கொள்கைகளுக்கு விரோத மாக, ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்புகளை வரவேற்று அமலாக்க ஆயத்தமாக உள்ளது.
அமைப்பு சாராத் தொழிலாளர்கள்…
செயலி மூலமாக, உணவு உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ‘கிக்’ ஊழியர்கள் பணிப் பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள்.
இவர்களை தொழி லாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிலை யில், அமைப்புசாராத் தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க மட்டுமே தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கறாராகச் செயல்படுத்த வேண்டிய கடமையைக் கொண்ட மாநில அரசாங்கமே, அதைவிடவும் ஆகக் குறைந்த ஊதியத்தை வழங்கலாம் என்று துறைவாரி யான அரசாணைகள் வெளியிடுகிறது. நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையாணைகள் சட்டத் திருத்தம், பல ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. அதற்கு விதிகள் உருவாக்கி அமல்படுத்துவதற்கு மாறாக அந்த சட்டத் திருத்தத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பெரும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது.
போராட்டங்களைத் தொடர்வோம்
கட்டிடம் மற்றும் இதர உடல் உழைப்புத் தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்வதும், நிதிப் பயன்கள் பெறுவதும் பெரும் கஷ்டமாக உள்ளது. இதுவரை ஆன்லைன் முறை வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆன்லைன் முறை ஏராளமான குளறுபடிகளைக் கொண்டதாக இருக்கிறது. வருடக் கணக்கில் அதை சரி செய்யாமலேயே, தொழிலாளர்களை அலைக் கழிக்கும் முறை நல்லதல்ல. நிதிப் பலன்களும் பாரபட்சமாக வழங்கப்படுகின்றது. நல வாரியங்கள் எந்த அதிகாரமும் இன்றி பெயரளவுக்கு செயல் படுத்தப்படுகின்றன. அரசு எடுக்கும் முடிவுகளை பின்னேற்பு செய்வதற்காக ஒரு வாரியம் அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் நிதி நிலை அறிக்கை கூட தொழி லாளர் நலன் என்பதை விட்டுவிட்டு விவாதிக்கும் அளவிற்கு சுருங்கிப் போனது.
தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம் ஒற்றுமையும், போராட்டமும், சர்வதேசியமும் ஆகும். அந்த ஆயுதம் கொண்டு தொழிலாளர், விவசாயிகள், மக்கள் உரிமைகளை
மீட்கும் போராட்டங்களைத் தொடர் வோம் என்று இந்த மே நாளில் சபதமேற்போம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக! மே தினம் நீடூழி வாழ்க!புரட்சி ஓங்குக!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறைத் துணைத் தலைவர் ஆய்வு..
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் USP தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS ஆய்வினை மேற்கொண்டு காவல் துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் உடனிருந்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கீழக்கரையில் போதைப் பொருள் வியாபாரிகள் குறிப்பாக 18 வயதில் இருந்து 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை மூளை செலவு செய்து அவர்களுக்கு தேவையான ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை வழங்கி அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையில் இரு வாலிபர்களை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டது கீழக்கரை மக்களிடையே பெரும் பதட்டத்தையும் வருத்தத்தையும் உருவாக்கியது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் உங்கள் அருகில் உள்ளவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்தால் உடனடியாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது.
அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6°F வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 101.66°F, கோயம்பத்தூர் 101.84°F, தர்மபுரி 105.26°F, கரூர் பரமத்தி 105.8°F, மதுரை நகரம் 101.12°F, மதுரை விமான நிலையம் 103.28°F, பாளையங்கோட்டை 100.58°F, சேலம் 105.98°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.52°F, திருச்சிராப்பள்ளி 104.9°F, திருத்தணி 105.08°F, வேலூர் 106.88°F என வெப்பமானது பதிவாகி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்..
by Askar
written by Askar
இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில் ) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன் அருளப்பன் என்பவர் திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து வாங்க நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில், தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..
by Askar
written by Askar
சௌராஷ்டிர பாரம்பரிய மன்றம் சார்பில், மதுரை கீதா நடன கோபால நாயகி மந்திரில், தியாக பிரம்ம பஞ்சரத்ன கீர்த்தனை மற்றும் சித்ரா பூஜா நிகழ்ச்சி..
சென்னையில் பயிற்சி பெற்று வரும் இளம் வழக்கறிஞர் பிரஷாந்த் கே.பிரகாஷ் தொடங்கியுள்ள சௌராஷ்டிர பாரம்பரிய மன்றத்தின் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமானது, சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல்களை கர்நாடக இசை மூலம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். கர்நாடக சங்கீத்தை மையமாக கொண்டு நடத்தப்படும் கச்சேரிகளில் குறைந்தது ஒரு சௌராஷ்டிர மொழியில் எழுதப்பட்ட பாடல் இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கை போன்று சௌராஷ்டிர மொழியையும் ஒரு இசைக்கான மொழியாக முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனை மீட்டெடுப்பதற்கான புதிய முயற்சியாக இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை டி.ஆர்.துளசிதாஸ் தலைமையேற்று நடத்த, மதுரை ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் நிறுவனர் டி.ஆர்.பிரகாஷ் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஸ்ரீமன் நாயகி இயக்கத்தின் செயலாளர் டி.ஆர்.மோஹன்ராம் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார் மேலும், பாபநாசம் ஸ்ரீ ஆர்.குமார், தோப்பூர் டாக்டர்.பி.சாய்ராம் பாலமதி ஆகிய மூத்த இசை கலைஞர்களும், கீர்த்தனா, ஸ்ரீ கிஷோர் ஆகிய வித்துவான்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் நெட்டை இரசு நாற்றுகளும் 3000 எண்கள் விற்பனைக்கு நெட்டை x குட்டை இரக நாற்றுகளும் ஆக மொத்தம் 24500 நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ,ஒரு எண் நெட்டை இரக நாற்று ரூ.60/- எனவும் ஒரு எண் நெட்டை x குட்டை இரக நாற்று ரூ.125/- விலையில் விற்கப்படும் என்றும் ,தென்னை நாற்று விநியோகம் தொடர்பான விபரங்களுக்கு 9080246728 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் 4 வருடங்களில் காய்பிற்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!
by Baker BAker
written by Baker BAker
இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க இந்நிறுவனம் இலக்கு நிரணயித்துள்ளது. மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தேசிய உள்நாட்டு குழாய் மூலம் இயற்கை வாயு இயக்கத்தை மே 3ம் தேதி வரை நீட்டித்து. ராமநாதபுரத்தில் உள்ள வீடுகளுக்கு இந்த எரிவாயு வழங்கும் பணியை ஏஜி.பி பிரதம் துரிதப்படுத்தி உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்புத் திட்டத்தில் ஒரு மாத இலவச எரிவாயு செக்யூரிட்டி டெபாசிட் இல்லாத பூஜ்ஜிய பதிவு கட்டணம், வட்டியில்லா தவணை முறை வசதி மற்றும் பூஜ்ஜிய வாடகைக் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஏஜிஃபி பிரதம் வழங்குகிறது புதிய நுகர்வோருக்கு பதிவுக் கட்டணத் தொகையான 354 ரூபாய் மற்றும் செக்யூரிட்டி டெபாசிட் தொகையான 6000 ரூபாயை தள்ளுபடி செய்வதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எரிவாயுவை பயன்படுத்தும்போது நுகர்வோர் சாதாரண எல்பிஜி சிலிண் சிலிண்டர்களுடன் ஒப்பிடுகையில் 30 சதவீத தொகையை சேமிக்க முடியும். மேலும், போக்குவரத்து பிரிவில் குறைந்த செலவில் தேவைக்கேற்ப செய்ய பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்று எரிபொருளாக சிஎன்ஜியை வினியோகிக்க இந்நிறுவனம் சிஎன்ஜி நிலையங்களை நிறுவியுள்ளது பல்வேறு முக்கிய இடங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 6 சிஎன்ஜி நிலையங்களை திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக திறக்கப்படும் இந்த மையங்கள் மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், சிறிய வணிக வாகனங்கள், இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சிஎன்ஜியை தடையின்றி வழங்கும். வாகனங்களில் சிஎன்ஜி மற்றும் வீடுகளில் குழாய் இயற்கை வாயுவை பயன்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் கார்பன் மற்றும் மாசு வெளியேற்றம் வெகுவாக குறைவதோடு சிறந்த சுற்றுச்சூழலுக்கு தனது சிறப்பான பங்களிப்பை ஏஜிஃபி பிரதம் வழங்கும். (AG&P pratham )ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் ராமநாதபுரம் மண்டலத் தலைவர் எசக்கிமுத்து பூமாரி கூறுகையில், ராமநாதபுரம் பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக சாத்தியமான பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக உள்ளூர் சமூகத்திற்கு இயற்கை எரிவாயுவை சீராக வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க 11 கிமீ ஸ்டீல் பைப்லைன் மற்றும் 140 கிமீ மீடியம் டென்சிட்டி பாலிஎதிலீன் பைப்லைனை பதித்துள்ளோம். இதன் மூலம் முதல் கட்டமாக நாங்கள் இப்பகுதியில் உள்ள மொத்தம் 50 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரம் வீடுகளுக்கு எளிதாக குழாய் இயற்கை எரிவாயுவை வழங்க முடியும். ராமநாதபுரத்தின் உள்பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக. எங்களின் இந்த முயற்சியானது இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், அவர்களின் மாதாந்திர எரிபொருள் செலவினங்களை 30 சதவிதம் வரை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வாகனங்களுக்கான மாற்று எரிபொருளாக சிஎன்ஜி-யை எங்கள் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களுக்கு எரிபொருள் செலவானது 45 சதவிதம் வரை குறைகிறது. சிஎன்ஜி-யை பயன்படுத்துவதன் மூலம் அது வாகனங்களின் என்ஜினை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக அதிக மைலேஜை அந்த வாகனங்கள் தருகின்றன. மேலும் பராமரிப்பு செலவுகளும் வெகுவாக குறைகின்றன. பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், வாகனங்களில் சிஎன்ஜியை பயன்படுத்தும்போது அதில் இருந்து குறைந்த அளவு கார்பன் மட்டுமே வெளியேறுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிஎன்ஜி முக்கிய பங்களிக்கிறது. இந்த முன்முயற்சிகள் வரும் 2030-ம் ஆண்டிற்குள் நாட்டின் எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன. சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் ராமநாதபுரத்தில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..
by Askar
written by Askar
வருமான வரி கணக்கீடு, குழப்பங்களை தீர்க்க தமிழக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்..
IFHRMS மென்பொருளில் வருமான வரி பிடித்ததில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்
இது நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்கு துறையின் கவனத்திற்கு மாநில அமைப்பின் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பழைய முறையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு 20% தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டு கடன், ஆயுள் காப்பீடு ,இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் உள்ளன .
ஆகவே அவற்றை கணக்கில் கொள்ளவும் கட்டாய பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது .
அது குறித்த அரசு தரப்பிலிருந்து தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். குளறுபடிகள் களையப்பட்ட பிறகு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம.
மாநில மையம்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பல லட்சம் கோடி பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது!- ராகுல் காந்தி கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
நரேந்திர மோடி தனது பில்லியனர் நண்பர்களின் ரூ.1,60,00,00,00,00,000 அதாவது ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார்!
இவ்வளவு பணத்துடன்:
16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வேலை கிடைத்திருக்கும்
16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.
10 கோடி விவசாயக் குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளைத் தடுத்திருக்கலாம்.
20 ஆண்டுகளுக்கு வெறும் 400 ரூபாய்க்கு நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியிருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் முழுச் செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்கலாம்
-தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞர்களும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியைப் பெற்றிருக்க முடியும்.
‘இந்துஸ்தானிகளின்’ வலிக்கு மருந்தாக வேண்டிய பணம், ‘அதானி’களுக்காகச் செலவு செய்யப்பட்டது.
நரேந்திர மோடியின் இந்தக் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது.
இப்போது நிலைமை மாறும் – ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்திற்காகவும் காங்கிரஸ் ஆட்சி நடத்தும்.
-ராகுல் காந்தி –
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நரேந்திர மோடி போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும்!-சு.ஆ.பொன்னுசாமி காட்டம்..
by Askar
written by Askar
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கீழ்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு மொழிகள், ஜாதி, மதங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் தேசத்தில் அவற்றின் பெயரால் வெறுப்புணர்வை விதைத்து, பிரிவினையை தூண்டி, அமைதியை சீர்குலைத்து அதில் குளிர்காய நினைக்கும் எவராயினும் அவர்கள் இந்திய அரசியலமைப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்,
அந்த வகையில் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய வகையில் பேசி வெறுப்புணர்வை விதைத்து அதன் மூலம் தேசிய அரசியலில் வெற்றியை அறுவடை செய்ய நினைக்கும் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தகுதியிழப்பு செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் என்றால் வேட்டை நாய்கள் போல உடனுக்குடன் பாய்ந்து, பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பாஜக விவகாரத்தில் மட்டும் வீட்டு வளர்ப்பு நாய் போல அவர்களுக்கு நன்றியோடு வாலாட்டிக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும் என்பதால் நடப்பு மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதித்து அவரை தகுதியிழப்பு செய்து இந்திய இறையாண்மையை காத்திட வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..
by Askar
written by Askar
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதி!இனி வீட்டில் இருந்து இத எடுத்துட்டு போகாதீங்க! தெற்கு ரயில்வேயின் அசத்தல் ஏற்பாடு..
தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ரயிலில் பயணம் செய்வது என்றால் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் இரவு நேரங்களில் ரயில் பயணம் என்பது அனைத்து மக்களும் விரும்பக் கூடியது. பொதுவாக ரயிலில் பயணம் செய்யும்போது நாம் வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
ஏனென்றால் ரயில் நிலையங்களில் உள்ள உணவுகள் அந்த அளவுக்கு நன்றாக இருக்காது. மேலும் பலருக்கும் உடல்நிலை கோளாறை ஏற்படுத்தும் நிலை இருப்பதால் அச்சத்துடனேயே வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துச் செல்வர்.
மேலும் அங்கு விற்கப்படும் உணவுகள் விலையும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் மக்கள் எண்ணி வீட்டில் இருந்தே சமைத்து கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு இருக்க தற்போது புதிய முயற்சியை தெற்கு ரயில்வே சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது மிகவும் குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய தற்போது நடைமேடையிலேயே கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் நடைமேடையிலேயே தெற்கு ரயில்வே சார்பில் ஊழியர்களுடன் உணவு விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் எக்கனாமி மீல் என்று வெரைட்டி ரைஸ் 20 ரூபாய்க்கும் அதாவது லெமன் சாதம், தயிர்சாதம், பருப்பு சாதம், ஊறுகாயுடன் சேர்த்து ஒரு மரத்திலான ஸ்பூன் ஒன்றும் வழங்கப்படும்.
இதேபோல ஜனதா கானா என 20 ரூபாய்க்கு பூரி வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து ஸ்நாக்ஸ் மீல் என்று 50 ரூபாய்க்கு சவுத் இந்தியன் வகை அரிசி வகைகளும் லெமன் ரைஸ், சாம்பார் சாதம், தயிர்சாதம், பொங்கல், மசாலா தோசை அதுவே 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் தண்ணீர் 3 ரூபாய்க்கும் கிளாசில் சீல் இடப்பட்டு கொடுக்கப்படுகிறது. இது தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது திருச்சி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..
by Askar
written by Askar
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதும் பா.ஜனதா குறி வைத்திருப்பதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையை சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கனவே சந்தித்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பானர்ஜி பேசினார். ஹசன் நகரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது. தேர்தலில் வெற்றி பெறப்போவதாக உறுதியாக நம்பினால், பிறகு ஏன் எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துகிறீர்கள்?.
ஒரு பா.ஜனதா தலைவர், குண்டு வெடிக்கும் என்கிறார். உங்களுக்கு மம்தா பானர்ஜி மீது கோபம் இருந்தால், என்னை கொல்லுங்கள். ஆனால், அபிஷேக் பானர்ஜியை கொல்ல திட்டமிடுகிறீர்கள். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விட்டோம்.
அவர் அபிஷேக் பானர்ஜி வீட்டை உளவு பார்த்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் பானர்ஜி நேரம் கொடுத்திருந்தால், அவரை கொலை செய்திருக்கக்கூடும்” என்று அவர் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.
by Askar
written by Askar
பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்:
சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த பொதுமக்களும் நல்ல வரவேற்பு அளித்தார்கள். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடி குறித்த கேள்விக்கு:
அது எப்போதும் வரத்தான் செய்யும். வரவர திருத்தம் செய்து அறிவிப்பார்கள்.
அதிமுகவை மீட்பது குறித்த கேள்விக்கு:
பொறுத்திருந்து பாருங்கள்.
பிரதமர் மோடி இஸ்லாமியர் தவறாக பேசுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
பாரத பிரதமர் பத்தாண்டு கால ஆட்சி சிறப்பாக நடத்தினார். எந்தப் பகுதியிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிபம் துபே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக ஆடிய துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகமால் இருந்தார். 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த ரன்களை அவர் எடுத்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தை சந்தித்த தோனி பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் மேட் ஹென்றி, யாஷ் தாக்கூர், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது முறையாக சென்னையை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது லக்னோ. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டாய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றிக்கு வித்திட்டார். ஸ்டாய்னிஸ் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். அதிகபட்சமாக பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
சென்னை அணியின் தீபர் சஹார், முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பத்திரானா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இந்த இரு அணிகளுக்கு இடையே லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை தழுவி இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நான்கு முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே ஒரு முறை, லக்னோ சூப்பர் ஜெயண்ட் 2 முறை, ஒரு போட்டி முடிவு இல்லை. லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் 217 ஆக உள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னோவின் அதிகபட்ச ஸ்கோர் 211 என இருக்கிறது.
You must be logged in to post a comment.