மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது சின்னக்குறவகுடி கிராமம்.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு தலைமை ஆசிரியராக வடுகபட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி பணியாற்றி வருகின்றார்.இவர் கடந்த 24 வருடங்களாக இப்பள்ளியில் பணியாற்றிய நிலையில் இன்று பணி நிறைவு பெறுகின்றார்.இவருக்கான பிரிவு உபச்சார விழா சின்னக்குறவகுடி பள்ளியில் நடைபெற்றது.இந்நிலையில் இப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராமமக்கள் ஒன்றிணைந்து தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்திய தலைமை ஆசிரியருக்கு பித்தளை அண்டா குண்டா மற்றும் சேலைகளை சீர் வரிசையாக கொடுத்து அசத்தினர்.மேலும் தலைமை ஆசிரியை செல்வசிரோன்மணிக்கு பரிவட்டம் கட்டி மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து தலைமை ஆசிரியருடன் கிராமத்தையே ஊர்வலமாக வலம் வந்தனர்.பின்னர் பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் தலைமைசிரியருக்கு பல்வேறு பரிசுப்பொருட்களை மாணவ மாணவிகள் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.
Category:
செய்திகள்
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு..
by Askar
written by Askar
சென்னையில் மெரினா கடற்கரை எதிரே பிரமாண்டமாக அமைகிறது சுதந்திர தின அருங்காட்சியகம்! முதலமைச்சர் அறிவிப்பு..
ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது – தமிழக அரசு
அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் – தமிழக அரச
கையெழுத் பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை
பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் எனவும் அரசு அறிவிப்பு.
75 வது சுதந்திர தினவிழாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் குறித்த அறிவிப்பு வெளியீடு.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
by Askar
written by Askar
தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர்.
குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலையும், பெரம்பலுார் பகுதியில் அரிசி ஆலை மற்றும் 100 ஏக்கரில் விவசாயத் தோட்டமும் உள்ளது.
திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் உள்ள சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி, தனது தந்தை குழந்தைவேலிடம் சக்திவேல் கேட்டுள்ளார்.
அதற்கு, குழந்தைவேலு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சக்திவேல், தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார் அதன் பின்னர் தந்தையை கொடூரமான முறையில் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.
சொத்து விவகாரத்தில் இருவரிடையே அடிக்கடி தகராறு வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது..
by Askar
written by Askar
எரியோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு! லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் போக்சோவில் கைது..
திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலுபாரதி(45) இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு D.கூடலூரை சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டது. கணவருடன் பிரிந்து அந்தப் பெண் 2 குழந்தைகளுடன் பாலுபாரதியின் தோட்டத்தில் வீட்டில் வசித்து வருகிறார். நிலையில் அந்தப் பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலுபாரதி பாலியல் தொந்தரவு செய்ததாக வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பாலுபாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டித் தூக்கிய போலிஸ்..
by Askar
written by Askar
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டி தூக்கிய போலிஸ்..
டெல்லி – துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடி.
வீடியோ வைரலானதை அடுத்து ஸ்பைடர் மேன் மற்றும் அவரது பெண் நண்பரை கைது செய்த போலீசார் ரூ.21,500 அபராதம் விதித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையேமோடியின் பேச்சில் வெளிப்படுகிறது! பிரதமர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!- சீமான் அறிக்கை..
by Askar
written by Askar
இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சமாகும்.
இந்தியப் பெருநாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்தே இசுலாமியப் பெருமக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இசுலாத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாரும் இந்த நாட்டிற்கு அந்நியர்கள் அல்ல.
ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துக்களின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் இலாபத்திற்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும்.
ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது. தம்முடைய ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமரானால் இந்த நாட்டில் சமத்துவம், சனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், பன்முகத் தன்மையையும் சிதைத்தழிக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க-விற்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது.
நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் பாசிச மனப்பான்மைக்கு நாட்டு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள். ஆகவே, இசுலாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இசுலாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
by Askar
written by Askar
பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..
பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த ரயில் இரு மார்க்கத்திலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று சென்றது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மேலும் 90 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 25ம் தேதி வரை இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.
வண்டி எண் 16731 பாலக்காடு – திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம் :
வண்டி எண் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு
ஸ்ரீவைகுண்டம் :
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..
by Askar
written by Askar
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது பேயல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் சுத்தமாகவும். சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவர் சான்று பெற்றிருக்க வேண்டும் மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக உள்ள புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும். unavupukarzęgmail.com என்ற மின்னஞ்சல் மூகமாகவும் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து Food Safety Consumer App-யை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல்முறையாக தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை..
by Askar
written by Askar
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர். திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தாண்டில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சன் அலர்ட் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50 சதவீதம் வாக்குகள் பதிவு..
by Askar
written by Askar
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 3 மணி நிலவரப்படி அசாம் 60.3%, பீகார் 44.2%, சத்தீஸ்கர் 63.9%, ஜம்மு-காஷ்மீர் 57.8%, கர்நாடகா 50.9%, கேரளா 51.6%, மத்தியபிரதேசம் 46.5%, மகாராஷ்டிரா 43%, மணிப்பூர் 68.5%, ராஜஸ்தான் 50.3%, திரிபுரா – 68.9%, உ.பி.யில் 44.1%, மேற்கு வங்காளம் 60.6% வாக்குகள் பதிவாகி உள்ளது.அதன்படி, இன்று நடைபெற்று வரும் 88 தொகுதிகளில் இதுவரை 50.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை: பழிக்கு பழி என தகவல்..
by Askar
written by Askar
மதுரையில் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை: பழிக்கு பழி என தகவல்..
மதுரை மாநகர் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (29) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்துவருகிறார் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்துவரும் அருள்முருகன் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது திடிரென அங்குவந்த மர்ம கும்பல் ஒன்று அருள்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்னர். மேலும் அருள்முருகனின் கையை தனியாக வெட்டியதோடு முகத்தில் 20க்கும் மேற்பட்ட முறை வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக அருள்முருகன் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கூடல்புதூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து அருள்முருகனின் உடலனாது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுரை விரகனூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கல்மேடு பகுதியை சேர்ந்த அருள்முருகனின் உறவினரான நவநீதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக பழிக்கு பழியாக நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட நவநீதனின் பெரியம்மா மகன் அருள்முருகன் என்பது குறிப்பிடதக்கது.
மதுரை மாநகர் பகுதியில் பட்டபகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி: போலீசார் விசாரணை..
by Askar
written by Askar
நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலி: போலீசார் விசாரணை..
மதுரை பைபாஸ் ரோடு காளவாசல் பிபி சாவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மதுரை மேலக்கல் பகுதியைச் சேர்ந்த குப்பாயி வயது 70 என்பவர் மீது விக்கிரமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது. இதில் முன்சக்கரம் மற்றும் பின் சக்கரம் இரண்டும் மூதாட்டி மீது ஏறி இறங்கியது. ஆகையால் சம்பவ இடத்திலேயே குப்பாயி பலியானார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் குப்பாயி உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அரசு பேருந்து ஓட்டி வந்த ரமேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்து சென்ற மூதாட்டி அரசு பேருந்து மோதி இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திரு உத்தரகோசமங்கையில் 10 ஆம் நாள் சித்திரை பெருவிழா ! வானவேடிக்கையுடன் கோலாகல கொண்டாட்டம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களநாதர் மங்களீஸ்வரி ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு இங்குள்ள சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பத்தால் பாண்டியர்களின் ரகசியம் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் உலகத்திலேயே எந்த முருகனுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு முருகப்பெருமானுக்கு முன்பு வெள்ளை யானை இருப்பதே ஆகும் இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக தேவலோக மரபினரான தேவேந்திர குல வேளாளர் மக்கள் பத்தாம் நாள் விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடும், வானவேடிக்கையுடனும் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த மண்டகப்படியில் விடிய விடிய அன்னதானம் வழங்கப்படுவது மற்றொருபுரம் பாரம்பரிய கலையான பரதம், மல்லர் கம்பம், மல்லர் கயிறு, சிலம்பம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டது. முன்னதாக 101 தேவேந்திர குல வேளாளர் கிராம மக்களுக்கு பல்வேறு திவ்ய திரவியங்களால் அபிஷேக கோலத்தில் மூலவருடன் பஞ்ச மூர்த்திகள் காட்சியளிப்பார் பின்னர் தேவேந்திரகுல வேளாளர் மகாசபை தலைவர் அழகர்சாமி பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டி முதலுரிமையும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 101 தேவேந்திர குல வேளாளர் கிராம தலைவர்களுக்கும் பரிவட்டம் ஆனது கட்டப்படுகிறது. இதனை அடுத்து மங்களநாதர் மகளேஸ்வரி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது சங்கு நாதங்கள்,மங்கள இசை முழங்க,வழி நெடுகிலும் தீப ஆராதனை காண்பித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா..
தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா கல்லூரி தாளாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நூலகர் முனைவர் ஏஞ்சலின் உலக புத்தகம் தினம் குறித்தும் மாணவ மாணவிகள் புத்தகம் வாசிப்பதின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், வாழ்வின் உயர்நிலைக்கு செல்ல புத்தகத்தின் பலன்கள் குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புத்தக தின விழாவில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாசிப்பில் ஈடுபட்டனர். இந்த விழாவில் இலஞ்சி டிடிடிஏடிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் தாளாளர் ராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தஞ்சையில் மாபெரும் கல்வி கண்காட்சி ! மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் !!
by Baker BAker
written by Baker BAker
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று அங்கு இருக்கும் பாடத்திட்டங்கள், பாடபிரிவுகள், கல்விகட்டணம் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுவதால் மாணவர்கள் கலந்து கொண்டு எல்லா விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு ஸ்கூட்டர், லேப்டாப், செல்போன், கல்வி உதவித்தொகை 5000 என்று ஏராளமான பரிசு காத்து இருக்கின்றன. மேலும் 12 ஆம் வகுப்பில் முதன்மை மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு முழுக்கட்டணம் சலுகை, பெற்றோர் இல்லாதவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் குறைப்பு, படித்து முடிந்தவுடன் பெரிய நிறுவனங்களின் உடனடி வேலை வாய்ப்பு பேன்ற பல்வேறு சலுகைகள் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இந்த அறிய வாய்பை மாண மாணவிகள் பயன்படுத்தி மாபெரும் கல்வி கண்காட்சியில் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன் பெறுமாறு தெரிவித்துள்ளனார் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்!- பெங்களூருவில் ஓட்டளித்த பின்னர் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி..
by Askar
written by Askar
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது. 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு..
by Askar
written by Askar
கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தலில் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர்.
2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள்
▪️ கேரளா – 20 தொகுதிகள்
▪️ கர்நாடகா 14 தொகுதிகள்
▪️ ராஜஸ்தான் 13 தொகுதிகள்
▪️ மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள்
▪️ மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள்
அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள்
▪️ சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள்
▪️ ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கோர விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..
by Askar
written by Askar
நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கோர விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே பொட்டிசெட்டி பட்டியைச் சேர்ந்த பாலகுரு என்பவர் வத்தலக்குண்டு சோழ மண்டலம் ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை முடித்து கொடைரோடு நோக்கி தமது இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அது சமயம் சிலுக்குவார்பட்டி அருகே எதிர்பாராத விதமாக நடந்து சென்றவர் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாலகுரு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நடந்து சென்றுவரும் காயமடைந்த நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான நபரின் உடலை போலீசார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக பிரமுகரின் இடத்தை போலியாக பத்திர பதிவு செய்த சார்பதிவாளரை தட்டித் தூக்கிய போலீசார்! வழக்கறிஞர் உட்பட பலர் மீது வழக்கு பதிவு.
by Askar
written by Askar
வத்தலக்குண்டு அருகே போலி பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் அதிரடி கைது! மேலும் வழக்கறிஞர் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா எம் வாடிப்பட்டியில் குடியிருந்து வருபவர் சேவுகம்பட்டி திமுக நகரச் செயலாளர் தங்கராஜ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அமலோற்பவம் என்பவரிடம் நிலத்தை கிரயமாக பெற்று விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிலத்தை இவருக்கு தெரியாமலேயே அவருடைய பட்டா எண்ணை பதிந்து போலி பத்திரம் மூலம் அய்யம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் தயாரித்து ஆவண பதிவேற்றம் செய்த பெலிக்ஸ் மார்ட்டின், நெல்சன், அருள், ஜெசிந்தா மேரி, சத்திய செல்வி, அனிதா ராஜ், கிறிஸ்டி கெவின் மைக்கேல், கிறிஸ்டோபர் சாமுவேல், முருகானந்தம், தருண்குமார், பெரியசாமி, ராஜ் பரத் மற்றும் போலி ஆவணம் தயார் செய்த நிலக்கோட்டை வழக்கறிஞர் கந்தசாமி வில்லங்கம் பார்க்காமல் ஆவணத்தை பதிவு செய்த அய்யம்பாளையம் சார் பதிவாளர் பாலமுருகன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளர் பாலமுருகனை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் போலி பத்திரம் தயார் செய்து தலைமறைவாக இருக்கும் 11 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். போலி ஆவணம் தயார் செய்த நிலக்கோட்டை வழக்கறிஞர் கந்தசாமியையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனால் நிலக்கோட்டை வத்தலகுண்டு வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் அதிரடியாக விசாரணை நடத்தி குழந்தயை மீட்ட காவல்துறை! இருவரிடம் தீவிர விசாரணை..
by Askar
written by Askar
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் அதிரடியாக விசாரணை நடத்தி குழந்தயை மீட்ட காவல்துறை! இருவரிடம் தீவிர விசாரணை..
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலையத்தில் வெளிப்புறத்தில் உறங்கிகொண்டிருந்தபோது 35 வயது மர்ம பெண் ஒருவர் தான் சித்திரை திருவிழாவிற்கு வந்துள்ளதாக கூறி அருகில் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை எழுந்துபார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியா வை காணவில்லை என கூறி திடீர் நகர்
காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் அதிரடியாக விசாரணை நடத்தி கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய வழக்கில் இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை
மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே நிலையத்தில் படுத்து உறங்கிய குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Newer Posts
You must be logged in to post a comment.