தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் ஆகியோர் இணைந்து ராமநாதபுரம் பாரதி நகரில் தொடங்கி அம்மா பூங்கா வழியாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி மேளதாளத்தோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
Category:
செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் இந்த ஊரில் இதுபோன்ற இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.இந்த வேலையில் இது போன்ற இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியது வரவேற்கத்தக்கது மேலும் இச்சங்கத்தின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாக குழுவின் மூலம் இணைந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முறையாக இதை வழிநடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் எங்கள் ஊருக்கு வந்து பார்வை இடவும் இல்லை என்றும் தெரிவித்தனர். . மேலும் இந்த உப்பளம் அமைவதால் ஆணைகுடி, களரி, சாம்பகுளம் சுமைதாங்கி உட்பட் சுற்றியுள்ள கிராமத்தில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பாலாகிவிடும் என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் , காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் அரசு பேருந்தில் பயணம் செய்த பயனிடம் 10 லட்சம் பணம் பறிமுதல்
by Baker BAker
written by Baker BAker
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தீவிர சோதனை ஈடுபட்ட போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 லட்சம் பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பணம் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட பொருளாளர் பாபு, செய்தி தொடர்பாளர் தங்கவேல்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர். பிரசாத் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் சமூக சேவகருமான டாக்டர்.மாடசாமி மற்றும் இதர அமைப்பு பொறுப்பாளர்களும், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..
by Askar
written by Askar
நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி பந்தலூர் அருகே தரையிறங்கினார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை.
ஜனநாயகத்தை காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரே நாடு, ஒரே தலைவர் என தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் பிரதமர் மோடி. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு என எந்த திட்டமும் இல்லை. இந்தியாவில் பல மொழிகள் உள்ளன; இந்தியாவின் இயல்பை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை. பன்முகத்தன்மை மற்றும் சமூகநீதியை அழித்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் புகுத்த நினைக்கிறார்கள் இவ்வாறு கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஐபிஎல் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும் துபே 66 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.இதனையடுத்து ரோகித் – திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடி திலக் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இறுதியில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
by Askar
written by Askar
நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் யார் எங்கெங்கு இன்றைய பிரசாரம்..
- பிரதமர் நரேந்திர மோடி-நெல்லை.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவள்ளூர், வடசென்னை.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே – புதுச்சேரி, கடலூர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி -மத்திய சென்னை, தென்சென்னை
- அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி, தினகரன் -போடி
- தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – நீலகிரி.
- தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-தூத்துக்குடி.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. ஈரோடு, திருப்பூர்.
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. -சிதம்பரம், மயிலாடுதுறை.
- த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் -திண்டுக்கல்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராஜன்- மதுரை.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்- வத்திராயிருப்பு, சேத்தூர், புளியங்குடி, சிவகாசி.
- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.- சிதம்பரம்.
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – மதுரை,தென்காசி,விருதுநகர்.
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் – கோவை.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்-சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, வடலூர், காடாம்புலியூர், கடலூர்.
- மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி-ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி..
by Askar
written by Askar
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17வது சீசனில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்துவந்த வீரர்கள் அனைவரும் கொல்கத்தா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 45 ரன்கள் குவித்தார்.
இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் மிச்சேல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், வைபவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா தொடக்க வீரர்களாக சுனில் நரைன், பிலிப் சால்ட் களமிறங்கினர். நரைன் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்துவந்த ரகுவன்சி 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய சால்ட் அரைசதம் கடந்தார். இறுதியில் கொல்கத்தா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.
கொல்கத்தா தரப்பில் சிறப்பாக ஆடிய பிலிப் சால்ட் 89 ரன்களுடனும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்!பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
by Askar
written by Askar
ஆவினை குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்றத் துடிக்கும் வீணர் கூட்டம்!
பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..
இது சம்பந்தமாக சு.ஆ.பொன்னுசாமி தமது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஆவின் பால் பாக்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையையொட்டி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட ஆவின் நிர்வாகம் இன்று தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருநாளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாததை வைத்து ஒரு கும்பல் மத ரீதியாக சமூக வலைதளங்களில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள், குடியரசு தினம், சுதந்திர தினம், தேசிய பால் தினம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்கள் என வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை மட்டுமே ஆவின் நிர்வாகம் வழக்கமாக கொண்டிருந்தது.
ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் திட்டமிட்டு புறக்கணித்து வருவதோடு புதிதாக ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடும் புதிய நடைமுறையை திராவிட மாடல் அரசும், ஆவின் நிர்வாகமும் அமுல்படுத்தி, செயல்படுத்தியும் வருகின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த தேசிய தினங்களுக்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடாமல் புறக்கணித்த ஆவின் நிர்வாகத்திற்கும், திராவிட மாடல் அரசுக்கும் எதிராக இதுவரை பொங்காத அந்த வீணாய் போன வீணர் கூட்டம் தமிழ்ப் புத்தாண்டு என்று வாழ்த்துச் செய்தி வெளியிடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை சித்திரைத் திருநாள் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டாமா..?, இது இந்துக்களை புறக்கணிக்கும் செயலல்லவா..? என சமூக வலைதளங்களில் கம்பு சுற்றி வருகிறது.
ஆவின் நிறுவனம் என்பது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமாக இருந்தாலும் அது ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு தாய் பிள்ளைகளாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களால் செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற நிறுவனமாகும் எனும் போது அந்நிறுவனத்தின் மீது தவறான தகவல்களை கொண்டு ஆவினை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிறுவனமாக மாற்ற நினைக்கும் அந்த வீணர் கூட்டம் முதலில் ஆவினில் நடைபெற்று வரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், ஊழல் பெருச்சாளிகளை அழித்து, களையெடுக்கவும், திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிட்டு ஆவினை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கம்பு சுற்ற களமிறங்கட்டும். இல்லையெனில் அதே கம்பால் வீணர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்..
by Askar
written by Askar
மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது! மீன், இறால், நண்டு ஆகியவை கணிசமாக விலை உயரும் அபாயம்..
தமிழ்நாட்டில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிப்பது வழக்கம். மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை நிறுத்திவிடுவா். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவா்கள் மேற்கொள்வா். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபா் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவா்கள் ஈடுபடுவா். ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது.சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும். மீன்பிடித் தடைக்காலம் நாளை தொடங்குகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும்!-ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
பாஜகவின் போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏப். 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “மோடியின் கேரண்டி” என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி நிதியமைச்சர் அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என வாக்குறுதி அளித்தார். இன்று அதன் புள்ளி விவரங்களை கூட இந்த அறிக்கையில் கொடுக்க, அவர்கள் தயாராக இல்லை. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் மிக அதிகமாக உள்ளது. புள்ளி விவரங்களின்படி, 10 ஆண்டுகளில் பணவீக்கம் 70% அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். இன்று அக்கட்சியின் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்வதற்கான எதுவும் இல்லை.
மிக முக்கியமாக வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளை, பிரதமர் இன்று வரை சந்திக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்ற விவசாயிகளை, கடுமையான தடுப்புகள் அமைத்து தடுத்தனர். 10 ஆண்டுகளில் பாஜக தன் அறிக்கைகளால் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. இன்று நாட்டின் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மக்கள் பணவீக்கத்தால் சிரமப்படுகின்றனர்.
பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.300-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்தது. பெட்ரோல் விலை ரூ. 75-லிருந்து ரூ. 100-ஐ எட்டியது. டீசல் விலை ரூ. 55-ல் இருந்து ரூ. 90-ஐ எட்டியது. குழந்தைகளுக்கு போதிய அரசு பள்ளிகள் இல்லை. குடிமக்களுக்கு சுகாதார வசதி இல்லை. எனவே பாஜகவின் இந்த போலியான வாக்குறுதிகளை நாடு நம்பாது. மோடியும், பாஜகவும் தோல்வியைத் தழுவும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மொத்த செலவு, டெல்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவாக உள்ளது.”
இவ்வாறு டெல்லி நிதியமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 6,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,850 ஆக இருந்த நிலையில், இன்று ரூ. 75 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.600 அதிகரித்து ரூ.54,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 89க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.54,000-ஐ தாண்டியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்குமோ என்ற கவலை மக்களிடையே நிலவி வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம்!- நேதன்யாகு அறிவிப்பு..
by Askar
written by Askar
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..
by Askar
written by Askar
பாஜக அரசு தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி..
அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்.
புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை பாஜக சிதைக்க நினைக்கிறது. ஒரு தேர்தல் ஒரு அதிபர் என்று துணிச்சலாக தேர்தல் வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்கள்.
ஒருபோதும் ஒரு நாடு ஒரு தேர்தலில் அம்பேத்கருக்கு உடன்பாடு கிடையாது.
இந்த தேசம் எல்லோருக்குமான தேசம், ஒரு சாராருக்கான நாடு இல்லை. சர்வாதிகாரத்தை ஒருபோதும் திணிக்க முடியாது.
சர்வாதிகாரத்தை அனுமதிக்காத தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுத்துள்ளோம். சர்வாதிகாரத்தை அனுமதிக்கின்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக கொடுத்துள்ளது.
இந்த தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாத்திற்குமான தேர்தல். சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், சனநாயகம் வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இது தான் அம்பேத்கரின் பிறந்தநாள் உறுதிமொழியாக எடுத்துக் கொண்டுள்ளோம்.
ஆயுஷ்மான் பாரத்தில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் இறந்து போன, உயிரோடு இல்லாதவர்களுக்கு ஒரே தொலைபேசி எண்ணில் ஆயிஷ்மான் பாரத் நிதி செலுத்தப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான பயனாளிகள் மூலம் ரூ. 7,50,000 கோடி ஊழலை பாஜக செய்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டவில்லை, சிஏஜி அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பாஜக பதில் சொல்ல வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையும் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
இப்படி தேர்தல் அறிக்கை ஒன்றை கூட நிறைவேற்றாத பாஜக அரசு இப்பொழுதும் தமாஷான ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.
இந்தியில் ஜிம்லா என்று சொல்வார்கள். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியையே ஒன்றும் நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு இந்திய குடிமக்கள் மீதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை மோடி சுமத்தி இருக்கிறார்.
இதுதான் அவர் சாதனை, இதுதான் அவர் தேர்தல் அறிக்கை”, என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு! ரயிலின் கழிவறை குழாயைத் திருடி “தண்ணி” அடித்த “மது” பிரியர்கள்..
by Askar
written by Askar
மதுரை கோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறை குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது..
மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள குழாய்களில் கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரிய வந்துள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரயில் பயணத்தின் போது காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத்
துக்குள் சுற்றித்திரிந்த கோ. புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மது அருந்துவதற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 15-க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை கழட்டி விற்பனை செய்தது தெரிய வந்ததை அடுத்து இருவரையும் கைது செய்த காவல்
துறையினர் பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் என மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரயில் பெட்டி குழாய்களை மட்டும் திருடி விற்பனை செய்து வந்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழநியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தின் சார்பாக துண்டு பிரசுரம் வழங்கல்..
by Askar
written by Askar
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் பழனி பேருந்து நிலையம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை முன்னிருத்தி, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கோடைக்கால நீர் மோர் பந்தல் அமைக்கபட்டு நீர் மோர் பாக்கெட் மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கோடைக்காலம் முடியும் வரை பழனியின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக நீர் மோர் பந்தல் பந்தல் அமைக்கப்படும் என்றும் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து “சங்கல்ப் பத்ரா” பாஜகவின் தேர்தல் அறிக்கை..
by Askar
written by Askar
இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று (ஏப். 14) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை “சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் பிரதமர் மோடி வெளியிட்டார். இவ்விழாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவருக்கு, முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகளுக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனடைந்த தலா ஒரு பயனாளிக்கு தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு என ஒவ்வொரு திட்ட பயனாளிகளுக்கும் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது,
“வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள். பாஜக மீது லட்சக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்து கருத்துகளைத் தெரிவித்தனர். கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ‘சங்கல்ப் பாத்ரா’ என்ற பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகிய 4 தூண்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவை நனவாக்குவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்று நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இதன் மூலம், தகுதியானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். பாஜக அரசு மருந்து பொருட்களுக்கு 80% தள்ளுபடி அளித்து வருகிறோம்.
மானிய விலையில் கேஸ் சிலிண்டர் கொடுத்து வருகிறோம். அடுத்த கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய மின் உற்பத்தி மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் விநியோகிக்க உள்ளோம். 25 கோடி ஏழைகளை ஏழ்மையிலிருந்து எனது தலைமையிலான அரசு மீட்டெடுத்திருக்கிறது. இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம். தீர்வுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசுகிறோம்
தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் – திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். இந்தியாவின் கவுரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும். மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர். நாடு முழுவதும் மாணவர்களுக்கு அடையாள எண் வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிப்பு. 2025ம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் வந்த ராகுல்காந்தி!கண்டும் காணாமல் இருந்த கமல்ஹாசன்! காரணம் என்ன.?
by syed abdulla
written by syed abdulla
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
You must be logged in to post a comment.