நிலக்கோட்டையில் அ.தி.மு.க பட்டிமன்ற பொதுக் கூட்டம் நடந்தது அதில்அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்சேகாட்டை ஒன்றிய அ.தி.மு.க சார்பாக நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார் வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி சீனிவாசன், திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மாவட்ட செயலாளர் மருத ராஜ் ஆகியோர் பேசினர் முன்னாள் அமைச்சர் நத்தம் இராவிசுவநாதன், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் பட்டிமன்ற நடுவர் வைகை செல்வன் தலைமையில் அம்மாவின் வெற்றிக்கு காரணம் ஆளுமையா அல்லது அஞ்சாமையா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்த து.ஆளுமையோடு இணைந்த அஞ்சாமையே என்று முடிவில் தீர்ப்பு கூறினார் கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் தண்டபாணி, சேகர், மோகன், பீர் முகமது,ராஜா, நல்லதம்பி, சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஜான் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.