Home செய்திகள் சொத்தை அபகரித்து மிரட்டல். ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

சொத்தை அபகரித்து மிரட்டல். ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்காவை சேர்ந்த,  விவசாயி சேட்டு என்பவரின் நிலத்தை அபகரித்து மிரட்டல் விடுப்பவர்களிடமிருந்து, தனது குடும்பத்தினரை காப்பாற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி காப்பாற்றினர். அப்போது சேட்டு, போலீசாரிடம் கூறியதாவது,வெம்பாக்கம் தாலுக்கா ராந்தம் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் என்வரின் மகன் (சேட்டு- 57). தலித் சமூகத்தை சேர்ந்த நான், விவசாய தொழில் செய்து வருகிறேன்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, என் இளைய மகன் வேல்முருகன் செய்யாறை சேர்ந்த, தெய்வசிகாமணி என்பவருடன் கூட்டு சேர்ந்து, ஸ்ரீனிவாஸ் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், நிதிநிறுவனத்தில், வேலைசெய்த என் மகன் வேல்முருகன், கலெக்சன் பணம் கட்டவில்லை என்று, தெய்வசிகாமணி  என் மகன் வேல்முருகனை கடத்திச் சென்று, மிரட்டி, எனது சொத்தை அடமானம் எழுதி வாங்கியதாகவும், அதிலிருந்து மாதந்தோறும் தன்னிடம் வட்டி பணம் வாங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற வழி தெரியாததால், தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். பின்னர் அவரிடமிருந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், அவரை எச்சரிக்கை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!