தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் கிராமத்தில் உள்ள எச்எஸ்சி யில் உலக ஆஸ்மா தினத்தை முன்னிட்டு ஆஸ்மா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி சில்டரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷ் மேரி கலந்து கொண்டு ஆஸ்துமா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார். இடைநிலை சுகாதாரப் பணியாளர் மீனா கற்பகம் ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு முறையில் குறித்து சிறப்புரையாற்றினார் .இறுதியாக சில்டரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் நன்றி கூறினார். இதில் கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.
24