Home செய்திகள் ஆதிவாசி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆதிவாசி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

by mohan

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் டி. வெங்கடேசன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை, வனத்தை விட்டு ஆதிவாசி மக்களை வெளியேற்ற கூடாது. மனு கொடுத்த அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மலைப் பகுதியில், அரசு புறம்போக்கு நிலங்களை பயிர்செய்ய, பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், தாட்கோ மூலம், பழங்குடியினர் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, உடனே இணைப்பு வழங்க வேண்டும். ஜமுனாமரத்தூர் வட்டத்தை தனி சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!