Home செய்திகள் கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தேசிய ஹந்தி தின விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தேசிய ஹந்தி தின விழா..

by ஆசிரியர்

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் கல்லூரியில் தேசிய ஹந்தி தின விழா 01/10/2018 அன்று கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் ஹிந்தி துறைத் தலைவர் J.சுனிதா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் எஸ்.சுமையா தலைமையுரையாற்றினார்.

சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளர் சேக் தாவூத்கான் விருந்தினர்களை வரவேற்று பொன்னாடை போற்றினார். இவ்விழாவிற்கு வருகை தந்த கேப்டன் கௌஸ்துப் கோசாவி காமன்டிங் அலுவலர் மற்றும் மிஸ்.எல்.டி சி.டி.ஆர் டானிய ராவட் கல்வியல் துறை அலுவலர் பருந்து, உச்சிப்புள்ளி கலந்து கொண்டு ஹிந்தி தினத்தை முன்னிட்டு மாணவிகளுடன் கருத்து பரிமாற்றம் செய்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக ஹிந்தி துறை உதவி பேராசிரியை உஷா ராணி நன்றியுரையுடன் நிறைவுற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!