Home செய்திகள் அரியலூர் மாவட்டம் திருமானூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம்..

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம்..

by ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் 2/10/18 இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், முதியோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இக்கிராமசபை கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

-கீழக்காவட்டாங்குறிச்சி – திருமழபாடி நெடுஞ்சாலையில் கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்தில் கழிவு நீர் வடிகால் அமைத்தல்.

-கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்தில் மணல் குவாரிக்கு தடை விதித்தல்.

-கீழக்காவட்டாங்குறிச்சி பெரிய ஏரிக்கரையை சுத்தம் செய்து பொது மக்கள் குளிப்பதற்கு வசதி செய்து தருதல்.

-பெரிய ஏரிக் கரையை கருங்கற்கள் பரப்பி கரையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

-கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்து முழுவதும் கழிவு நீர் வடிகாலை சுத்தம் செய்தல்.

-கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைவதை தடுக்க கோருதல்.

-சுகந்திர போராட்ட தியாகி டி.கே.எஸ் சுப்பையா அவர்களுக்கு சுகந்திர தினம் குடியரசு தினங்களில் அவரது திருமானூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுதல்.

கிராம சபை கூட்டத்தின் இறுதியில் கலந்து கொண்ட அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டு கிராமசபை கூட்டம் நிறைவுற்றது.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ்)

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!