Home செய்திகள் பிறந்த நாள் காணும் பள்ளி மாணவர்களின் படம் காலண்டரில் :கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் ஒரு புதுமையான முயற்சி…

பிறந்த நாள் காணும் பள்ளி மாணவர்களின் படம் காலண்டரில் :கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளியில் ஒரு புதுமையான முயற்சி…

by ஆசிரியர்
ஆண்டு தோறும் காலண்டர் வடிவமைத்து மக்களுக்குக் கொடுப்பதில் ஒவ்வொருவரும் ஒரு புது மாதிரியைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வர்.  இதில்  கோவில்பட்டி  எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி ஒரு புதுமையான  முயற்சியைச் செய்திருக்கிறது. சில அமைப்புகள், தலைவர்களின் பிறந்த நாள், அறிவியலாளர்களின் பிறந்த நாள்  எனக் காலண்டரில்  பதிவு செய்வர். ஆனால் எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியோ அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களின் பிறந்த நாள் அன்று அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும், குழந்தைகள் மகிழ்ச்சியடையும் வகையிலும்,  அவர்கள் பிறந்த நாளன்று அவர்களின் வண்ணப் புகைப்படத்தைக் காலண்டரில் வெளியிட்டுள்ளனர்.காலண்டரில் குறிப்பாகக் குறியிட்டு ”எதிர்காலச் சாதனையாளர்கள்-அவர்கள் பிறந்த தேதியில்” எனப் அச்சிட்டுள்ளது பெற்றோர்களை மிகவும் மகிழ்ச்சிப் படுத்துவதாக  அமைந்திருக்கிறது.
இந்தக் காலண்டரை மாணவர்கள் மத்தியில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கன்ணையா, கலாநாதன் ஆகியோர் முதல்வர்  முத்து லெட்சுமி   முன்னிலையில் வெளியிட்டனர். பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.பள்ளியைத் துவங்கி வைத்ததும், பள்ளியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் மாணவர்களே முதன்மைப் படுத்தப்பட்டு அவர்களே சிறப்பு விருந்தினர்களாக இருக்கின்றனர் என நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
காலண்டரைப் பெற்றுக் கொண்ட ஐந்தாம் வகுப்பு மாணவியின் பெற்றொர் கூறும் பொழுது, ”என் குழந்தையின் பிறந்த நாளில் அவள் படத்தைக் காலண்டரில் வெளியிட்டு எங்களைச் சந்தோசப்பட வைத்துள்ளனர் இப்பள்ளியினர். அதோட எல்லா குழந்தைகளையும் அவர்கள் பிறந்த நாளில் வாழ்த்துச் சொல்லவும் இது பயன்படுகிறது” என்றனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!