11
கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சீதரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயச்சந்திரன் மற்றும் சங்கரன், ஜோதி, சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஜனவரி 8, 9-ம் தேதியில் நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்ககேற்பது, சங்கத்தின் 3வது மாநில மாநாடு செப்டம்பர் மாதத்தில் சேலம் மாவட்டத்தில் நடத்துவது, நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மார்ச் மாதம் 8 மாவட்டங்களில் கருத்தரங்கம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் சீதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் ஜன.8, 9-ம் தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் சார்பில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆதரவு வழங்குகிறது. போராட்டத்தின் முதல் நாளன்று அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மறுநாள் மறியல் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்களுடன் நாங்கள் இணைந்து பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையின் காரணமாக மிக மோசமான விளைவுகளை மக்கள் மீது சுமத்தியிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேச ஒற்றுமை பாதிக்கப்பட்டிருக்கிறது. மத வெறி இங்கு ஊட்டப்படுகிறது. இதையெல்லாம் எதிர்த்து தமிழகம் முழுவதும் 8 இடங்களில் கருத்து பிரச்சாரம் நடத்த உள்ளோம். 8 இடங்களிலும் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுத்துள்ளோம், என்றார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
You must be logged in to post a comment.