கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு செஸ் அஸோஸியேஷன், மாவட்ட செஸ் அஸோஸியேஷன் மாநில அளவிலான 14, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சதுரங்க போட்டிகள் நேற்று தொடங்கியது.
இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 765 பேரும், 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 135 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர். போட்டிகள் மொத்தம் ஒன்பது சுற்றுக்களாக நடத்தப்பட்டது.
இதில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எஸ். ஜெயஸ்ரீ, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அச்சையா விஜயன் ஆகியோர் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவில் வி.தருண், பி.செல்வ முருகன், ஜெ. சக்தி விஷால், பி.எல்.விக்னேஷ் காசி ஆகியோர் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.
14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் எம்.பிரனேஷ், எஸ்.அஸ்வத், எஸ்.பி.கே. அருள் ஆனந்த், தியாகராஜன் தமிழ்செல்வி, ஜி. ஆகாஷ், எம். ரூபன் சஞ்சய், எஸ். அரவிந்த் சண்முகம், எஸ். ராகுல் சரோ ஆகியோர் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.
14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் பெமிலா செல்லத்துரை முதலிடம் பெற்றார். 11 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் எஸ்.கனிஷ்கா, கே.ஸ்ரீனிமேஷ்கிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
இன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி இயக்குநர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.சண்முகவேல், சர்வதேச தலைமை நடுவர் ஆர்.அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சர்வதேச தடகள வீரர் நிகில் சிற்றரசு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதில், மாணவ, மாணவியர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
You must be logged in to post a comment.