ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று காத்திருப்பு போராட்டம்..
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் வட்டாட்சியர் பணியிடம் பணி மூப்பு அடிப்படையில் காலம், காலமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பணி மூப்பு எனும் மரபை தவிர்த்து தான் விரும்புவோருக்கு வருவாய் வட்டாட்சியர் பணியிடம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். பணி மூப்பு முறை மரபுப்படி பணியிடம் வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வருவாய் துறை கீழ்நிலை அலுவலர்கள் செய்ய மறுக்கும் பணியை வருவாய் ஆய்வாளர் செய்து முடித்தபின் எவ்வித விளக்கமும் கோராமல் செய்த தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தற்காலிக பணிநீக்க ஆணையை சம்பந்தப்பட்ட அலுவலரின் வீட்டு சுவர் முன் ஒட்டி வருவாய்த்துறையினரை அவமானப்படுத்திய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப். 3 முதல் வருவாய்த் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர் நிகழ்வாக வருவாய்த் துறையினர் அனைவரும் இன்று (பிப்.5) வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு பணிபுறக்கணிப்பு செய்து, ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம் என 9 தாலுகா அலுவலகங்கள், ராமநாதபுரம், பரமக்குடி என 2 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழி வாங்கல் போக்கை விலக்கிக்கொண்டு தீர்க்கமான முடிவு எட்டப்படாவிடில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க முடிவின் படி தொடர் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் வருவாய்த் துறையினர் முழுமையாக கலந்துகொள்ளவர் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.