Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை அவனியாபுரத்தில் சம்பவம்: பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை…

மதுரை அவனியாபுரத்தில் சம்பவம்: பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை…

by ஆசிரியர்

மதுரை அவனியாபுரம் வைகை தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற சுப்பிரமணியம் (வயது 26). இவர் நேற்று (23/05/2020) மதியம் மோட்டார் சைக்கிளில் வெள்ளக்கல்- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றார். அப்போது மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே வேகமாக வந்த கார் மோதியது. இதில் சுப்பிரமணியம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு அதே காரில் தப்பி சென்றுவிட்டது. இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவனியாபுரம் வைகை தெரு, காமராஜர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்துவிட்டு அங்கு உள்ள ஒரு பைனான்ஸ் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய் ராணி உடன் வசித்து வந்தார்.

சுப்பிரமணியனுக்கு அங்குள்ள சிலருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாரி என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை நண்பர் சரண் என்பவர் உடன் சேர்ந்து வெட்டியதாக ஒரு வழக்கு, போலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்காக அவர் ஜெயிலுக்கு சென்று வந்தார் அதன்பிறகு மும்பைக்கு புறப்பட்டுப் போய்விட்டார். மதுரை அவனியாபுரத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தவர், தாய் ராணி உடன் தங்கியிருந்து பைனான்ஸ் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.

சுப்பிரமணியனை கொலை செய்ய ஏற்கனவே ஒரு கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு முயற்சி செய்து உள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மணி, சோனா மற்றும் சோபன் ஆகிய 3 பேரும் ராஜீவ் காந்தி நகர் அருகே சுப்பிரமணியனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி செய்து உள்ளனர்.

இது தொடர்பாக சுப்பிரமணியன், தாயிடம் ஏற்கெனவே புலம்பி வந்து உள்ளார். அப்போது “திருப்பரங்குன்றம் மாரி கும்பல் என்னை கொல்ல திட்டம் தீட்டி விட்டது. அதற்கு முன்பாக நான் அவர்களை கொல்ல வேண்டும். இல்லை எனில் அவர்கள் என்னை தீர்த்து கட்டி விடுவார்கள்” என்று அம்மா ராணியிடம் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக சுப்பிரமணியம் செல்போனில் யாருடனோ நீண்ட நேரமாக பேசி சண்டை போட்டு வந்து உள்ளார். இந்த நிலையில் தான் சுப்பிரமணியன் வெட்டிக் கொல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

அவனியாபுரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாரி என்பவர், தனது காரில் பாக்கியம் மகன் தங்கபாண்டி கரந்தமலை மகன் ரவி மற்றும் சிலருடன் வந்து உள்ளார். அப்போது வெள்ளக்கல் சுத்திகரிப்பு நிலையம் அருகே பைக்கில் சென்றுகொண்டு இருந்த சுப்பிரமணியனை கார் மோதி கீழே தள்ளி உள்ளனர். அதன்பிறகு அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அதே காரில் தப்பி சென்று விட்டனர் என்பது தெரியவந்தது.

அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆதிகுண்டகண்ணன் அடங்கிய தனிப்படையினர், பைனான்ஸ் கடை ஊழியர் விக்னேஷ் என்கிற சுப்ரமணியநை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சுப்பிரமணியனின் தந்தை ஆனந்த மூர்த்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். சுப்பிரமணியனின் சகோதரர் இருளப்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சுப்பிரமணியநும் கொல்லப்பட்டு உள்ளார். இதனால் தாய் ராணி நிர்க்கதியாக நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் பழிக்குப்பழியாக அரங்கேறி வரும் கொலைகள், பொதுமக்கள் மத்தியில் பதட்டம்- பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!