15
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தாலும், ஊரடங்கு சட்டத்தாலும் பல்லாயிரகணக்கான குடும்பங்கள் அன்றாட வாழ்கைக்கு மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளார்கள். இத்தருணத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ளது.
தேவையுடையோர்களின் தேவைகளை இயன்ற வரை நிவர்த்தி செயும் வண்ணம் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு (99 batch) சார்பாக புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கீழக்கரை அருகில் உள்ள கிருஷ்ணாபுரம், தத்தங்குடி, இதம்பாடல், புத்தேந்தல், ஆரபத்தி, சிக்கல், தனிச்சியம், வல்லக்குளம், கீழக்கிடாரம், மேலசிக்கல், மதினா நகர், கோட்டையேந்தல் உள்ளனங்க மொத்தம் 12 கிராமத்தில் உள்ள 231 ஏழை குடும்பங்களுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.