ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி செங்கம் வட்டார வள மையத்திற்குட்பட்ட 0-18 வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துக்காபேட்டையில் மாநில திட்ட இயக்குநரின் அறிவுரையின்படியும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலோசனைபடியும், மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் மாவட்ட மருத்துவத்துறையினர், ஆகியோரின் உதவியுடன் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி சார்ந்த மனநலம், குழந்தை நலம். எலும்புமுறிவு, காது மூக்கு தொண்டை மற்றும் கண் ஆகிய சிறப்பு மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட 306 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்து அடையாள அட்டைகளை புதுப்பித்தல். மற்றும் புதிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற நிகழ்வு நடைபெற்றது.முகாமை செங்கம் ஒன்றியக் குழு தலைவர் விஜயராணிகுமார் பார்வையிட்டு வயதுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவியும் மற்றும் இருசக்கர நாற்காலியும் தமிழக அரசின் சார்பில் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் உதயகுமாரன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆசிரியர் பயிற்றுனர்கள் பிரபாகரன் சங்கர்நாத் அண்ணாமலை சுகந்தி மற்றும் சிறப்பாசிரியர்கள் மாசிலாமணி செல்வகுமாரி வெங்கடேசன் மற்றும் தசை பயிற்சியாளர் பகல்நேர பராமரிப்பு மைய பொறுப்பாளர் மாலா, உதவியாளர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வைரம்மாள் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.