மதுரை மாவட்டத்தின் மையப்பகுதியான வடக்கு மாசி வீதி பகுதியில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடத்தொடங்கியது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் கொண்டு உடனடியாக சரி செய்வதாக உறுதி அளித்தனர் .அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவிக்கும் பொழுது அதிகாலை முதலே பாதாள சாக்கடை நீர் அளவில் பல ஆயிரக்கணக்கான லிட்டர் சாலையில் வழிந்து ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசியதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக அந்த சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருமிநாசினி உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.