இரண்டு தினங்களுக்கு முன்பு கீழைநியூஸ் இணையதளத்தில் ரேஷன் அரிசி வாங்க 80 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்த முதியவர் பற்றறிய செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை வெளியிட்டன.
இதை தொடர்ந்த அந்த முதியவருக்கு அரசு நிவாரண நிதி ஆயிரத்துடன், கூடுதல் தொகை மற்றும் கூடுதல் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும் தன் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த முதியவரை தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் உதவியுடன் முதியவரை காரில் அழைத்து சென்று அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார்.
மேலும் மதுரை முகவரியில் இருந்த குடும்ப அட்டையும் அவர் வசித்து வரும் ஶ்ரீவிலிபுத்தூர் முகவரிக்கே மாற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து முதலில் செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் சைக்கிள் ஓட்ட முடியாமல் தவித்த தன்னை காரில் அழைத்து வர உதவிய தனியார் டிராவல்ஸ் உரிமையாளருக்கும் அம்முதியவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.