12
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ அடையாள அணிவகுப்பு பேரணி நடந்தது. இராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இராமேஸ்வரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையிர் மற்றும் தமிழக காவலர் இணைந்து இராமேஸ்வரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இராமேஸ்வரம் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மகளிர் காவல் நிலையம்; வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
You must be logged in to post a comment.