நெல்லை மாவட்டம் சுரண்டையில் மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 6 பவுன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலை சேர்ந்த செல்வராஜ் மனைவி கிரேஸ் பால்த்தாய் (75). இவரின் கணவர் செல்வராஜ் இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் கிடையாது. இவர் சம்பவத்தன்று காலை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை அணுகிய மர்ம நபர் முதியோர் உதவித்தொகையை கூடுதலாக வாங்கி தருவதாக கூறி அதற்காக ஆதார் அட்டை போட்டோ வேண்டும் என கூறியுள்ளார்.
அதனை வாங்கிய பின்னர் கழுத்தில் செயின் போட்டிருந்தால் உதவி தொகை கிடைக்காது என கூறி 6 பவுன் செயினை கழற்றி தர சொல்லியுள்ளார். இதனால் பதட்டமடைந்த மூதாட்டி பக்கத்தில் இருந்தவர்களிடம் நடந்ததை எடுத்து கூறி மர்ம நபரை தேடியும் கிடைக்காததால் சுரண்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி சம்பவம் நடந்த பகுதி கடைகளின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சற்று காலை சாய்த்து நடக்கும் மர்ம நபர் மூதாட்டியை ஏமாற்றி செயினை பறித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சியில் பதிவான மர்மநபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.