தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாநிலத் தலைவர் பணி ஓய்வை ஏற்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் அரசு முடிவை கைவிட வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள், குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும். கோவை அலுவலர்களின் மாவட்ட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயகுமார் பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜப்பார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா லூர்துமேரி, சத்தியகிரி, நந்திதா, நடராஜன், முத்துகிருஷ்னன், மற்றும் அனைத்து ஊழியர்களும் பங்கெடுத்தனர்.
Category:
செய்திகள்
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசா காலனி பகுதியில் நாகமலை புதுக்கோட்டை துணை ஆய்வாளர் கோபிநாத் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மலைராஜன் அவரது மனைவி ஜெயந்தி அவர்களிடமிருந்து 5.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது ஜெயந்தி என்கின்ற பெண்ணை கைது செய்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூகப் பொறுப்புத் திட்டத்தில் தேர்ப்பேட்டை ஏரியைப் புனரமைத்தது கேட்டர்பில்லர்
by mohan
written by mohan
சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் ஓசூர் அருகிலுள்ள கிராமமக்களுக்காக தெர்பேட் ஏரியை கேட்டர்பில்லர் நிறுவனம் புனரமைத்துக்கொடுத்துள்ளது.கேட்டர்பில்லர் இந்தியா நிறுவனத்தின் தொழிற்துறை மின்சாதனங்கள் தயாரிப்பு (IPSD) ஆலையின் அருகில் உள்ள கிராமப்பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. கடந்த டிச.17, 2018ல் இந்தத்திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் தொடங்கியது. இந்தத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்பு இந்த ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன.
எட்டு ஏக்கர் நிலம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் குடிமராமத்து செய்யப்பட்டு பாதைகள் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2014ம் ஆண்டு முதல் சமூகப்பொறுப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று ஐபிஎஸ்டி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் ரமேஷ் முத்துராமன் தெரிவித்தார். நகர்ப்புறங்களில் உள்ள பல்வேறு ஏரிகள் கடுமையாக மாசுபட்டுள்ளன என்றும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், வறட்சியை எதிர் கொள்வதிலும் ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைப்பது முக்கியமான நடவடிக்கை என நாங்கள் அறிவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாம் வாழும் மற்றும் பணிபுரியும் இடங்களின் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூழலியல் சமநிலையை நிலை நிறுத்து வதற்கான வாய்ப்பு என்பதால், தேர்ப்பேட்டை ஏரியை புனரமைப்பதற்கு முதலீடு செய்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.தரமான கல்வி, தூய்மையான குடிநீர், தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித்தருவது, ஆலைகள் அமைந்துள்ள சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக செலவிடுவது உள்ளிட்ட சமூகப்பணிகளை மேற்கொள்வதில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.
இந்தத்திட்டத்தை துவங்கும் முன்னர் இந்த ஏரியின் சுத்திகரிக்கப்படாத நீர் பாசி படிந்து மிகவும் அழுக்காகக்காணப்பட்டது. இந்த நிலையில் ஏரி மற்றும் அதனைப் பயன்படுத்தும் பொது மக்களைப் பாதுகாக்கும் மற்றும் ஏரிப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பான, அழகான மற்றும் குப்பைக் கூளங்களற்ற பகுதியாக மாற்றும் திட்டத்தை கேட்டர்பில்லர் நிறுவனம் முன்னெடுத்தது.குடிமராமத்துப் பணிகளுடன் ஏரி நீரும் சுத்திகரிக்கப்பட்டதை அடுத்து இந்த ஏரியின் நீர்த்தேக்கத்திறன் 61 மில்லியன் லிட்டராக அதிகரித்தது. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததால் தற்போது இந்த ஏரி 1500 குடும்பங்களுக்கு பயன்பட்டு வருகிறது. கரைப்பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாககற்கள் பதிக்கப்பட்டு ஏரியைச் சுற்றிவலை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் விளக்குகளும் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் 1930ம் ஆண்டிலிருந்தே கேட்டர்பில்லர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 11,000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைத் தமிழர் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 4, 1938)
by mohan
written by mohan
அன்ரன் பாலசிங்கம் மார்ச் 4, 1938ல் மட்டக்களப்பு, இலங்கையில் பிறந்தார். ஆரம்பகாலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.[1][2] இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துகொண்டார்.1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் வெற்றிபெற்றிருந்தாலும் அந்த அமைப்பை திரை மறைவில் வழி நடத்தியவர் அன்ரன் பாலசிங்கமே என்பதை வன்னி ஊடகவியலாளர் மாநாடே வெளிப்படுத்தியது.
அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் ஆன் பாலசிங்கம் புலிகளின் முக்கிய உறுப்பினரானார். இவர்ஈழப் போராட்டம் குறித்த பல நூல்களின் ஆசிரியர்.ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.2006 ஆம் ஆண்டி டிசெம்பர் மாதம் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர் அடேல் பாலசிங்கம் அரசியலில் காணாமல் போனார். பிரித்தானிய அரசு ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கும் தவறான வழிகளில் திசைதிருப்புவதற்கும் ஆரம்பத்திலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரித்தானிய அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு தொடர்பான கேள்விகள் எழுகின்றன.
இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகமாகக் காணப்படுகிறது. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் இயக்கத்தை வடிவமைப்பது இன்று அவசியமானதாகும்.2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது – 22 செல்போன்கள் பறிமுதல்..!
by Askar
written by Askar
பூட்டிய கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது – 22 செல்போன்கள் பறிமுதல்..!
மதுரை மாநகரில் உள்ள பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து திருடிய
நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு
காவல் துணை ஆணையர் திரு.பழனிகுமார் அவர்களின் தனிப்படையினரான காவல் உதவி ஆய்வாளர் திரு.அருண்
அவர்கள் தலைமையில் சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பெயர் கணேசன் மற்றும் பிரசாந்த் @ ஜாக்கி என தெரியவந்தது. மேலும் இருவரிடமும் விசாரணை செய்ததில்
மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் ஒன்பது திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 22 செல்போன்கள் இரண்டு லேப்டாப், மூன்று DVR, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருது நகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்.. “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்!
by Askar
written by Askar
விருது நகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்.. “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்!
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது!
விருதுநகர் மாவட்ட செய்தியாளர் (குமுதம் ரிப்போர்ட்டர்) கார்த்தி இன்று வெளியான இதழில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் உட்கட்சி பூசல் என செய்தி ஒன்றை வெளியிட்ட நிலையில். சிவகாசியில் செய்தியாளர் கார்த்தியை மர்ம நபர்கள் சிலர் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கடும் தாக்குதலுக்கு ஆளான கார்த்தி மிகவும் கடுமையான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.உண்மகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது தான் பத்திரிகை தர்மம், அதை சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள முடியாத கோழைகள் தான் இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கார்த்தி மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக அரசு நடவடிக்கைகள் எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.பெரும் பாதிப்புக்குள்ளான செய்தியாளர் கார்த்தி அவர்களுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும், இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்!
இவன்:
ஜெ.அஸ்கர்
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்!
தமிழ்நாடு
உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை கோவிலில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு:- முறைகேடுகள் நடப்பதாக புகார்..!
by Askar
written by Askar
திருவண்ணாமலை கோவிலில் அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு:- முறைகேடுகள் நடப்பதாக புகார்..!
அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. பஞ்சபூத ஸ்தலங்களை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது என்பதால் உலகம் முழுவதும் இருந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்க பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி வழிபாடுகளில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் கோவில் வருமானம் ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் உள்ளது.
இக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நிகழ்வதாக புகார் வந்ததால் அதிகாரி குழுவினர் கோவிலில் திடீர் சோதனை நடத்தினர்.
அருணாசலேஸ்வரர் கோவில் வாசலில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இலவசங்கள் என்று அறிவிக்கப்பட்ட அனைத்திற்கும் கட்டணங்கள் வசூலிப்பதாகவும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கோவில் அபிஷேகத்தில் பங்கேற்றபோது அதிக பணம் வசூலித்ததாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்த வேலூர் இணை ஆணையர் மாரிமுத்து, மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜான்சிராணி மற்றும் சென்னை அறநிலையத்துறை கமிஷனர் அலுவலக அதிகாரி ஒருவர் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் அலுவலகத்தில் ரகசிய விசாரணை நடத்தினர்.
கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறிய கருத்துக்களை பதிவு செய்து கொண்டனர்.
திருவண்ணாலை கோவிலுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தக்கார் மற்றும் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. அனைத்தையும் அதிகாரிகள்தான் கவனித்து கொள்கின்றனர்.
இதனால் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் தவறுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தக்கார் மற்றும் அறங்காவலர் குழு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கணவரை உருகி உருகி காதலிக்கும் இப்படிப்பட்ட பெண்ணை கைவிட எப்படி மனசு வந்ததோ” என காதலர் தினத்தன்று சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை வாரிக் குவித்த பெண், விஷம் குடித்துவிட்டதாக வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து திருமணம் செய்த கணவன் தன்னை விட்டுச் சென்றதாக இளம் பெண் ஒருவர் காதலர் தினம் அன்று கொடுத்த பேட்டி இது..
கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோதான் இது. காதலித்து கரம் பிடித்தவன் கைவிட்டாலும், கணவனுக்காக உருகும் இந்த பெண்ணை முன்மாதிரியாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் ஏராளம்.
தன்னை விட்டுச் சென்றாலும் தனது கணவன் அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது. அவரது காதல் உண்மை, புனிதம் என்று அவரது பேட்டியை புகழ்ந்து பகிர்ந்தனர்.
எத்தனையே டிக்டாக் பிரபலங்களுக்கு பல நாட்களில் கிடைக்காத புகழ், ஒரே வீடியோவில் இந்த பெண்ணுக்கு கிடைத்து. பிரபலம் என்றாலே “பிராப்ளம்” என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த பெண்ணுக்கும் சிக்கல் டிக்டாக் வீடியோ வடிவில் வந்தது.
யாரோ ஒரு இளைஞனுடன் வேறு ஒரு பெண் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு, இப்படிப்பட்ட பெண்ணை கணவன் கைவிடாமல் என்ன செய்வான் என பதிவுகள் வெளியாகின.
அடுத்தடுத்த நாட்களில் அந்த பெண்ணின் டிக் டாக் வீடியோக்கள் சுற்றின. தனது தங்கையுடன் அவர் மகிழ்ச்சியாக ஆடிப் பாடி வெளியிட்டிருந்த டிக்டாக்குகளில் பலரும் அவரை திட்டித் தீர்த்தனர்.
ஆபாச வார்த்தைகள் அவரது டிக் டாக் கமெண்டுகளில் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரே நாளில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூக வலைத்தளங்கள், அதேவேகத்தில் தரையில் போட்டு மிதித்து விட்டதால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை என அந்த பெண் மீண்டும் ஒரு டிக்டாக் போட்டுள்ளார்.
வாயில் ரத்தம் வழிய, விஷத்தை குடித்துவிட்டதாக அந்த பெண் போட்டுள்ள டிக்டாக் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானும் விஷம் குடித்துவிட்டதாக அந்த பெண்ணின் தங்கையும் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஊர், பெயரை உறுதிப்படுத்த முடியாத இந்த 2 இளம்பெண்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. ஆனால், டிக்டாக்கில் சிக்கி வாழ்வை சீரழித்துக் கொள்ளும் இளம்பெண்களுக்கு இந்த இரு பெண்களும் பாடம் என்பதுதான் நிதர்சனம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக வன உயிரின நாள் (மார்ச்.3 ) ஒரு யானை அழிந்தால் 16 வகை தாவரங்கள் அழியும் ஒர் எச்சரிக்கை தொகுப்பு..
by Askar
written by Askar
உலக வன உயிரின நாள் (மார்ச்.3 ) ஒரு யானை அழிந்தால் 16 வகை தாவரங்கள் அழியும் ஒர் எச்சரிக்கை தொகுப்பு..
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மார்ச் 3-ம் தேதியை சர்வதேச வன உயிரின நாளாகக் கொண்டாடுகின்றன. வன விலங்குகள், வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாக்க வும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதே இந்த நாளைக் கொண்டாடு வதன் நோக்கம். இந்த ஆண்டு உலக வன உயிரின நாளில், ‘வன விலங்கு களை வேட்டையாடுவது மிகக் கொடூரம்’ என்ற கருத்தை மக்களி டையே பரப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது.
‘வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்’ என ஐ.நா., சபை அறைகூவல் விடுத்துள்ளது. இயற்கை சமநிலை ஒரு சிற்றினம் அழியும் போது அல்லது, அதன் எண்ணிக்கை குறையும் போது பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் உணவு சங்கிலியும், உணவு வலையும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதே ஆகும். சூழல் சமநிலையை நிலைபெற செய்ய, வனவுயிரினங்களையும், அதன் சூழல் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும்.
ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காட்டில் 16 வகை தாவரங்கள் அழிந்து விடும் என மார்ச் 3-ம் தேதி (இன்று) சர்வதேச வன உயிரின நாளில் வன விலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
உலகில் உள்ள வன உயிரினங்களில் 6.5 சதவீதம் வன விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இங்குதான் நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய உயிரினங்கள் அதிகம் உள்ளன. தற்போது வனவிலங்குகளை மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக வேட்டையாடுவதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதில் மனிதனுக்கு வரக் கூடிய சில நோய்களை, வனவிலங்கு களுடைய ரத்தம், உடல் பாகங்கள் குணமாக்கும் என்ற கண்மூடித்தனமான மூடநம்பிக்கை யால் பெரும் பணக்காரர்கள், விலங்குகளின் உடல் பாகங்கள், ரத்தத்தை எவ்வளவு விலை கொடுத் தும் வாங்க தயாராக உள்ளனர்.
அதனால், சர்வதேச சந்தை யில் வன விலங்குகளின் உடல் பாகங்களுக்கு ஏற்பட்ட கிராக்கி யால், இயற்கையில் மதிப்புமிக்க வன விலங்குகளை வேட்டைக் கும்பல் வேட்டையாடுகின்றன.
இந்தியாவில் புலி, காண்டா மிருகங்கள், நட்சத்திர ஆமைகள் தான் அதிக அளவு வேட்டையாடப் படுகின்றன. வாழ்வியல் சூழலில் மரபணு, சமூக, பொருளாதார, பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் கலாச்சார, பண்பாட்டில் மனிதனுடன் வனவிலங்குகளுக்கு தொடர்பு இருக்கிறது. வனவிலங்கு கள் வசிக்கும் காடுகளை கொண்ட நாடுகளே, சிறந்த நாடு என அறியப்படுகிறது. அதனால், வன விலங்குகளை பாது காப்பது அவசியமாகிறது. வன விலங்குகளை நேரடியாகப் பார்த்தால் அவற்றை தொந்தரவு செய்யாமல் ரசிக்க வேண்டும். அதை சீண்டிப் பார்க்கக்கூடாது. வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறும்பட்சத்தில், அதனை மீண்டும் பாதுகாப்பாக காட்டில் கொண்டுபோய் விட வேண்டும்.
தேசிய வனவிலங்கு கொள்கைப் படி, மொத்த காடுகளில் 28 சதவீதம் பகுதியை, வன விலங்குகளுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள காடுகள் பரப்பளவில் 28 சதவீதம் வன விலங்கு சரணாலயமாகவும், தேசிய பூங்காக்களாகவும் அறிவிக்கப் பட்டுள்ளன.
இரு நூற்றாண்டுகளில் 300 வகையான பறவைகள் மாயமாகியுள்ளன. வனவிலங்குகளின் அழிவு காடுகளை மட்டும் பாதிப்பதில்லை. மனிதனையும் பாதிக்கிறது. ஒரு காட்டில் புலி வசித்தால், அதனை சுற்றியுள்ள வன விலங்குகள், மரங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வார்கள். ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காடுகளில் 16 வகையான முக்கிய தாவரங்கள் அழிந்து போகும்.
மனித செயல்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்ற இடமாக கடலே இருக்கின்றது. உலகின் எந்த மூலையில் தூக்கி வீசப்படுகின்ற கழிவும் கடைசியில் சென்று சேருகின்ற இடம் கடல்தான். கடல் என்பது தண்ணீர் மட்டும் அல்ல, கடல் என்பது உயிர். மிகச் சிறிய கடல்வாழ் நுண்ணுயிர்கள் தொடங்கி மிகப்பெரிய திமிங்கலம் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடம். கடலை நீல நிறக் காடு என்று கூறலாம்.
அதில், நமது கடல்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. மனிதர்களின் தோற்றத்திற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னரே நீருக்கு அடியில் உயிர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் இந்த கடல் உயிர் சூழலை பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கி விட்டோம். கடல் நாம் சுவாசிக்க காற்றினை சுத்தப்படுத்தி தருகிறது. சுமார் 70 சதவீத ஆக்ஸிஜன் கடலால்தான் கிடைக்கின்றது. மனிதர்களுக்கு உணவினைத் தருகின்றது, பருவ நிலையினை சீராக்குகிறது, பல லட்சம் மனிதர்களுக்கு வாழ்வளிக்கிறது.
ஆனால், நாம் பதிலுக்கு என்ன செய்து இருக்கின்றோம். உலகின் பல இடங்களில் சரிசெய்யவே இயலாத அளவுக்கு கடல் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. கடந்த 45 வருடங்களில் புவியில் வாழ்ந்த பாதி அளவுக்கும் அதிகமான வன உயிர்களை நாம் தொலைத்து இருக்கின்றோம்.
நம் அனைவருக்கும் இதனை புரிந்து கொள்ள வலிமை உள்ளது, அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கடமையும் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33 % மாவது காடுகளிருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதோ 20% காடுகள்தான். அடைய வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே சாலைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், விவசாயம், என மனிதகுல வளர்ச்சிப் பணிகளையும் காடுகளற்ற சமவெளிப் பகுதிகளில் விரிவுபடுத்துவோம். மிச்சமுள்ள காடுகளுக்கு சிறு அழிவும் ஏற்படாமல் காத்து நிற்போம். இதுவே இனிவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.
நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பணி நியமனம் – விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்..!
by Askar
written by Askar
செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 464 மாணவர்களுக்கு பணி நியமனம் – விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்..!
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது விழாவுக்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கிடாஜலபதி தலைமை தாங்கினார் செல்வ நாராயண ரெட்டியார் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் அம்பிகாபதி திகபவதி ரவிக்குமார் ரேவதி சுந்தரமூர்த்தி ஐஸ்வர்யாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்றுப்பேசினார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 464 மாணவர்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து பணி நியமன ஆணைகள் மாநில அளவில் தறப்பட்டியலில் மதிப்பெண்பெற்ற 24 மாணவர்கு ரூபாய் ஒரு லட்சத்து 37ஆயிரம் ரொக்கப்பரிசுகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கு கோப்பைகள் வழங்கிபேசினார். அப்போது பாலிடெக்னிக் கல்லூரியில் 100 சதவிகித வேலைவாய்பு தருவது மகிழ்ச்சியானது அதிகப்பட்சம் ரூ.24ஆயிரம் வரை சம்பளதவணைகள் வழங்கப்படுவதை மாணவர்கள் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் 1500 மாணவர் படிக்கும் இடத்தில் 300 பேருக்கு கேம்பஸ் இன்டர்வியு எனகூறி வேலைதருவார்கள் இங்கு நுறு சதவிகிதம் பணி நியமனம் வழங்குவது சிறப்பானது கல்லூரி காலம் பசுமையான காலம் இதுவரை அப்பா அம்மா செலவில் கல்லூரி உள்ளிட்ட சிறப்பான சலுகையில் வாழ்ந்தீர்கள் இனி நாங்கள் உங்கள் குடும்பம் சமுதாயம் உயரபாடுபடவேண்டும் ஏற்றஇறக்கம் இடர்பாடுகள் அவமானம் துன்பம் இனி வரும் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த வயதிலேயே குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் தண்ணீரில் மூழ்குபபனுக்கு அதிலிருந்து தப்பிப்பது மட்டுமே வழி குறிக்கோள் அதுபோல் குறிக்கோளை தேர்வு செய்து கொள்ள வேண்டும் தென் ஆப்ரிக்காவில் ஓடும் ரயிலில் காந்திபட்ட அவமானம் அவரை தேசத்தந்தை ஆக்கியது தனி மனித ஒழுக்கம் இருக்க வேண்டும். போதை பழக்கமும் குற்ற வழக்குளில் தவறுசெய்து மாட்டிக்கொள்வதும் கூடாது. சாலை பயனங்களில் நிதானம் தலைக்கவசம் சீட்பெல்ட் அணிதல் அவசியம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் புத்தகம் படித்தல் அறிவு வளர்ச்சிதரும் பயம் மனஅழுத்தம் போக்கும் கடினமுயற்சி விடாமுயற்சி உழைப்பு அவசியம் இவ்வாறு விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் பேசினார்
சூரிய மித்ரா திட்ட இலவச பயிற்சி பெற்ற 90 மாணவர்களுக்கு திருப்பத்தூர் அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் சந்திரசேகரன் மத்திய அரசு சான்றிதழ்களை வழங்கிப்பேசினார். நிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் தொகுதது வழங்கினார் முடிவில் ஆங்கில விரிவுரையாளர் அலெக்ஸான்டர் நன்றி கூறினார். விழாவில் அறிவுத்திருக்கோயில் திருவண்ணாமலை முரளி கடலுர் கிருஷ்ணகுமார் திருவண்ணாமலை மகாதீபம் குணசீலன் மின்வாரியம் அசோக்குமார் ஊசாம்பாடி சிவராமன் புதுப்பாளையம் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் முன்னதாக தண்டராம்பட்டு பாரத்வித்யாமந்தீர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமு மாணவர்களுக்கு தனிமனித மேம்பாடு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்..
by Askar
written by Askar
மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையொட்டி எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் ஒன்றுதிரண்டு தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் நினைவு பரிசாக ட்ரம்ஸ் தலைமை ஆசிரியர் ஜெயந்தி அவர்களிடம் வழங்கினார்கள். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், தனலட்சுமி ,சங்கீதா, நாராயணன் ,அரசு, மகேஸ்வரி ,ராஜா, ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மார்ச் 09, திங்கட்கிழமைதிருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்:- அழைை்பு விடுக்கும் இளஞ்சிறுத்தைகள்.!
by Askar
written by Askar
மார்ச் 09, திங்கட்கிழமை
திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்:- அழைை்பு விடுக்கும் இளஞ்சிறுத்தைகள்.!
கடந்த 16-12-2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன் பட்டணம் கிராமப் பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த முத்துநகரை சேர்ந்த கோமதி என்பவர் அன்று காலை பணிக்கு செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். அவருடன் சென்ற ஜெயலட்சுமி என்பவரும் படுகாயமடைந்தார். ஆனால் அரசின் சார்பில் இதுவரை எந்த நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.
ஒரு நாளைக்கு வெறும் 86 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று குடும்பம் நடத்திவந்த நிலையில் தற்போது கோமதியின் குடும்பத்தினரும், ஜெயலட்சுமியின் குடும்பத்தினரும் மிகுந்த வறுமையில் வாடுகின்றனர்.
இளஞ்சிறுத்தைகள் சார்பில் இக்குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் சென்ற 06-02-2020 அன்று பதிவுத்தபால் வழியே கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனாலும் இதுநாள்வரையில் எந்த முன்நகர்வும் இல்லை.
இந்நிலையில் இத்துப்புரவுப் பணியாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசு விரைந்து உரிய நிவாரண நிதி வழங்கி உதவிடக் கோரி எதிர்வரும் மார்ச் 09, திங்கட்கிழமை அன்று மாலை 5-மணிக்கு திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வைத்து இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் போஸ் அவர்கள் பங்கேற்று கோரிக்கை உரையாற்றுகிறார். அனைத்து கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
அனைவரும் வருக!
இவண்
சு.விடுதலைச்செழியன்
மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா
விசிக – தூத்துக்குடி தெற்கு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து மற்றும் தற்காப்பு குறித்த பயிற்சிகள் நடைபெற்றது..!
by Askar
written by Askar
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து மற்றும் தற்காப்பு குறித்த பயிற்சிகள் நடைபெற்றது..!
வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் . மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தென் மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் மற்றும் செஞ்சிலுவை சங்கம் கால்நடை பராமரிப்புத்துறை கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து தீயணைப்பு மற்றும் தற்காப்பு வசதிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது.இதில் பள்ளி, கல்லூரிகளி விருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை கால்நடை துறை , நகராட்சிகள் துறை , சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் கவரும் இருந்தது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடர் முழக்கம் போராட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று 03:03:2020 மாலை 05:00 மணியளவில் வடக்குத்தெரு கொண்ட கருணை அப்பா பள்ளிவாசல் (மணல்மேடு) அருகில் பொது மக்கள் சுமார் 500க்கு மேற்பட்டோர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 75 நாட்களுக்கு மேலாக CAA, NRC, NPR க்கு எதிராக இந்தியா முழுவதும் பல பகுதிகளிலும் டெல்லியில் ஷாகின்பாக் போராட்டத்தை தொடர்ந்து, தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, வேலூர், இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் போன்ற பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள், கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
கீழக்கரையில் இருந்து எஸ்.கே.வி.சுஹைபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவன் என்பவர் வனவிலங்குகள் விவசாய நிலத்தில் நுழையாமல் இருக்க அனுமதியின்றி மின்வேலி அமைத்து இருந்தான். அந்த வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற சந் தோஷ் என்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். உடலை மீட்டு பள்ளி கொண்டாபோலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்கி ( லிப்ட்) பகுதிகள் இரவில் வண்ண விளக்குகளால் தொடர்ந்து ஒளி வீசி கொண்டு இருப்பது கண்கொள்ளா காட்சி ஆகும்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவரது மனைவி மின்னல்கொடி (40). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அண்ணாமலை சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். 2 குழந்தைகளும் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதனால் மின்னல்கொடி (40) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மின்னல்கொடி பிணமாக மிதந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஜம்னாமரத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மின்னல்கொடி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அண்ணாமலையின் தம்பி சவுந்தரராஜன் (30) என்பவருக்கும் மின்னல்கொடிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுந்தரராஜனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்தது.
இதில் ஆத்திரமடைந்த சவுந்திரராஜனின் மனைவி, கணவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி மின்னல்கொடியை எச்சரித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த மின்னல்கொடி கடந்த 6 மாதங்களாக கொழுந்தனுடனான ரகசிய தொடர்பை துண்டித்து கொண்டார்.
இதனால் வேதனையின் உச்சிக்கே சென்ற சவுந்தரராஜன், அடிக்கடி அண்ணி மின்னல்கொடியை சந்தித்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். மின்னல்கொடி மறுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சவுந்திரராஜன் மின்னல்கொடியை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தார். சவுந்தரராஜன் தனது உறவினர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டார்.
அதன்படி, கடந்த 25-ந்தேதி இரவு 8 மணிக்கு கீழ்விளாமூச்சியில் நிலத்தின் அருகில் தனது உறவினருடன் சவுந்தரராஜன் காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்னல்கொடியை மடக்கி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார்.
அதற்கு அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன், மின்னல்கொடியின் முதுகில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி மின்னல்கொடியை கொலை செய்தார்.
இதையடுத்து சவுந்திரராஜனை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜனுக்கு உடந்தையாக செயல்பட்ட உறவினர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் ஜவ்வாதுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 8வது பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு கல்லூரி தலைவர் அக்ரி வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார் செல்வ நாராயண ரெட்டியார் கல்வி அரக்கட்டளை உறுப்பினர்கள் அம்பிகாபதி திலகவதி ரவிக்குமார் ரேவதி சுந்தரமூர்த்தி ஐஸ்வர்யா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரமிளா ஜெயந்தி வரவேற்று பேசினார் விழாவை சிறப்பு அழைப்பாளராக சென்னை மற்றும் பெரம்பலுர் தனலட்சுமி சீனுவாசன் கல்வி குழும தலைவர் எ.சீனுவாசன் கலந்துகொண்டு 194 மாணவர்களுக்கு பட்டயமும் மாநில அளவில் வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண்பெற்ற 33 மாணவர்களுக்கு ரூ.2லட்சத்து 22ஆயிரம் ரொக்க பரிசுகளும் பேராசிரியர்களுக்கு ரூ.75ஆயிரம் ஊக்கப் பரிசுகளும் வழங்கி பேசினார். அப்போது இந்த கல்லூரியில் 8ஆம் பட்டயம் அளிப்பு விழாவில் கலந்துகொள்வது மகிழ்;ச்சி அளிக்கிறது நான் என் பெற்றோருக்கு 8வது குழந்தையாகும் பிறந்த 10 மாதத்தில் தாயையும் 12மாதத்தில் தந்தையையும் இழந்து பாட்டியால் வளர்க்கப்பட்டேன் இன்று 23 கல்வி நிருவனங்கள் உருவாக்கி இருப்பது எனது திறமையால் அல்ல இறைவன் அருள் பெற்றோர் ஆசி ஆகும் பாலிடெக்னிக் படிக்கிரோம் என்று மாணவர்கள் தாழ்வாக நினைக்க கூடாது பொறியியல், பி.எச்.டி படித்தவர்களை விட அதிகம் பாலிடெக்னிக் படித்தவர்கள் சம்பாதிக்கிறார்கள் ஒரு ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எ.எஸ் படிக்கிற மனோநிலை தன்னம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கவேண்டும் தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தாய்தந்தையின் வாழ்த்து மற்றும் ஆசியை மாணவர்கள் பெறவேண்டும் நன்கு படித்து முன்னேறி பெற்றோருக்கும் கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என பேசினார் கல்லூரியில் சூரிய மித்ரா மத்திய அரசு சான்றிதழ் திட்டத்தின்கீழ் 3மாத இலவச பயிற்சி பெற்ற 90 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கடலூர் கிருஷ்ணசாமி கல்வி குழும செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் பேசினார். ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் விழாவினை தொகுத்து வழங்கி பேசினார். முடிவில் ஆங்கில விரிவுறையாளர் அலெக்ஸ்சாண்டர் நன்றி கூறினார் விழாவில் தனலட்சுமி சீனுவாசன் கல்வி குழும செயலாளர் நீல்ராஜ் நிர்வாக அலுவலர் மௌலி புதுப்பாளையம் ஒன்றிய குழு துணைத்தலைவர் சசிகலா உதயசேகரன் கெங்கம்பட்டு ஊராட்சிமன்ற தலைவர் உதயசேகர் மல்லவாடி சாய் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சோமசுந்தரம் மணிகண்டன் திருவண்ணாமலை மகாதீபம் குணசீலன் ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் ரவிச்சந்திரன் ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் பேராசரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் சாயும் நிலையில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
by mohan
written by mohan
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின்ரோடு எம்.கே.புரத்தில், (ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் எதிரில்) உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் இரும்புத்தூண் அடிப்பாகம் அரித்து பழுதடைந்து சாயும் நிலையில் உள்ளதால் அதை அகற்றி புதிய இரும்புத்தூண் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மதுரை மதிமுக பொதுக்குழு உறுப்பினர் பி.எஸ்.சேகர் மற்றும் மதிமுக மாணவர் அணி மாவட்ட செயலாளர் புகழ் முருகன் ஆகியோர் கூறியதாவது :- ஜெய்ஹிந்த்புரம் புதிய காவல் நிலையம் எதிரில், வில்லாபுரம் உப மின் நிலையத்திலிருந்து சுப்பிரமணியம் உப மின் நிலையம் செல்லும் உயரழுத்த மின் தடம் மேற்படி எனது வீட்டின் அருகில் செல்கிறது. இந்த உயர்அழுத்த மின்சாரம் செல்லும் இரும்பு கம்பம் சாயும் நிலையில் உள்ளது. வளைந்தும், துருப்பிடித்தும், எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதேபோல் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனுக்கு வரும் 11கே.வி.ஏ சுப்பிரமணியபுரம் உப மின் நிலையத்திலிருந்து ஜெயவிலாஸ் பாலம் வரை செல்லும் மின் வழித்தட இரும்பு கம்பமும்,அதன் கிழக்கே உள்ள ஒரு மின்கம்பமும் லாரி மோதியதால் வளைந்து விழும் நிலையில் உள்ளது. மேற்படி எம்.கே புரம், ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் மெயின் ரோடாக இருப்பதினால் அதிகமான போக்குவரத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்துகின்ற சாலையாக உள்ளது. இந்த மின் கம்பம் சாய்ந்தால் இந்த சாலையின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மேல் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்த மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக அதை மாற்றி அமைத்து, உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நவீன இந்திய தொழில்துறையின் தந்தை ஜாம்செட்ஜி டாடா பிறந்த நாள் இன்று (மார்ச் 3, 1839)
by mohan
written by mohan
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி ஜொரோஸ்டிரியன் புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.
தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜம்சேத்ஜீ டாடா எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற்கு இணையான ‘க்ரீன் ஸ்காலர்’ -ஆக படிப்பை முடித்தார். அவர் மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு என்ற பெண்ணை மணந்தார். 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற அவர் தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அச்சமயம் 1857 -ன் இந்திய புரட்சிக்காரர்களாக கருதப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடக்கப்பட்ட கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது.
1868ம் ஆண்டு பிரிட்டன் ஆட்சி காலத்தில் ஜாம்ஷெட்ஜி டாடாவால் டாடா குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. ஜாம்ஷெட்ஜி விதைத்த விதையால் வளர்ந்து ஆலமரமாகி 150 நாடுகளில் கிளை பரப்பி டாடா குழுமம் தற்போது செயல்பட்டு வருகிறது.. டாடா குழுமத்தை கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் டாடா சன்ஸ் போர்டுக்கு இருக்கிறது.
டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடா கடந்த 1868ம் ஆண்டு முதல் 1904ம் ஆண்டு வரை தலைவராக இருந்தார். அடுத்து டோரப் டாடா, நவ்ரோஜி சக்லத்வாலா, ஜஹாங்கிர் ரத்தோஜி டாடா ஆகியோருக்கு பிறகு ரத்தன் டாடா பொறுப்பேற்றார்.தொழில் நடத்துவது என்பதைத் தாண்டி பல சமூகக் கண்ணோட்டங்கள் அவருக்கு இருந்தன. அதில் பிரதானமானது கல்வி வளர்ச்சிக்கு உதவுவது. இதனால் தொழில் தொடங்கி லாபம் வரத் தொடங்கிய பின்னர் 1886ஆம் ஆண்டே ஒரு பள்ளியையும் அவர் தொடங்கினார். டாடா நிறுவனம் அடுத்தது 1903 ஆம் ஆண்டில் நட்சத்திர ஹோட்டல்களையும் தொடங்கியது.இரண்டாம் உலகப் போர், இந்திய விடுதலைப் போராட்டம், இந்தியாவின் மாபெரும் பிளவு, சுதந்திர இந்தியாவின் சவால்கள், தேவைகள் – ஆகிய அனைத்தையும் நின்று சமாளித்து தனது குழுமத்தை இவர் வழி நடத்தினார். இந்திய நாட்டின் கனவுகளில் டாடா குழுமமும் பங்கேற்பதை இவர் உறுதி செய்தார். இந்தியாவின் முதல் அணு மின்சக்தி திட்டம் உருவாக ஹோமி பாபாவுக்குப் பெரிதும் துணை நின்ற பெருமை இவருக்கு உண்டு.
ஜே.ஆர்.டி டாட்டாவின் முயற்சியால் 1939ஆம் ஆண்டு டாட்டா கெமிக்கல்ஸ், 1945ஆம் ஆண்டு டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாட்டா இண்டஸ்ட்ரீஸ், 1954ஆம் ஆண்டு வோல்டாஸ் 1962 ஆம் ஆண்டு டாட்டா டீ,1968ஆம் ஆண்டு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், 1984ஆம் ஆண்டு டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என பல்வேறு தொழில்களில் டாடா குழுமம் கால்பதித்தது.இந்தியாவிலேயே மிகப் பெரிய தொழில் குழுமம். உப்பு முதல் இரும்பு வரை தயாரிக்கும் நிறுவனங்களைக் கொண்டது டாடா குழுமம். பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாகுவார் கார் நிறுவனம் கூட இப்போது டாடா குழுமத்தின் கையில்தான். 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புக் கொண்ட பாரம்பரியமிக்க தொழில் செழுமை கொண்ட டாடா குழுமம். மும்பையில் உள்ள’பாம்பே ஹவுஸ்’ தான் டாடா குழுமத்தின் தலைமையகம். உலகம் முழுக்க 6 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் டாடா குழும நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
டாடா குழுமம் கைவைக்காதத் துறையே இல்லை எனலாம். உப்பு, ஹோட்டல், வாட்சுகள், கார் தயாரிப்பு என எல்லாவற்றிலும் ஈடுபடுகிறது. பிரபல தாஜ் ஹோட்டல்கள் கூட டாடா குழுமத்துக்கு சொந்தமானதுதான்.டாடா குழுமத்தில் 6 நிறுவனங்கள் மிகவும் பெரியவையும் பாப்புலருமானவை. டாடா மோட்டார்ஸ். ஐடி என்று எடுத்துக் கொண்டால் டாடா கன்சல்ட்டிங் சர்வீசஸ். இந்தியாவின் முன்னணி தெகவல் தொழில் நுட்ப நிறுவனம். லட்சக்கணக்கான சாப்ட்வேர் என்ஜீனியர்களின் கனவு நிறுவனமும் கூட. அதே போல் டாடா ஸ்டீல், டாடா டீ மற்றும் டாடா கெமிக்கல்ஸ் , டாடா டெலிவிஸ்டர்ஸ் ஆகியவை மிக முக்கியமானவை.கடந்த 2000ம் ஆண்டில் இருந்து டாடா குழுமம் வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து வாங்கத் தொடங்கியது. லேண்ட் ரோவர் கார் தயாரிக்கும் ஜாகுவார் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டாடா குழுமம் வாங்கியது. கடந்த 2007ம் ஆண்டு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கூட்டு நிறுவனமான ‘கோரஸ் ‘ எக்கு நிறுவனத்தையும் வாங்கியது. அடுத்து பிரிட்டனின் புகழ்பெற்ற டெட்லீ டீ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. கடந்த 16 ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமாக 23 வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது.
வேகமாய் ஓடும் நதிகளைப்போல நாடெங்கும் வேகமாய் கால் பதிக்க துடித்தார் ஷாம்ஷட்ஜி நஸ்ஸர்வன்ஜி டாட்டா. ஆனால் விதி ஒத்துழைக்காத நிலையில், மே 19, 1904ல் உடல்நலக்குறைவு காரணமாக தனது 65 வது அகவையில் காலமானார். ஜாம்ஷெட்ஜி டாடா தனது முயற்சிகளால் ‘நவீன இந்தியத் தொழிற்துறையின் தந்தை’ என்று இன்றும் புகழப்படுகிறார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
You must be logged in to post a comment.