Home செய்திகள் இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

by mohan

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) சார்பில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாநிலத் தலைவர் பணி ஓய்வை ஏற்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளில் அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் அரசு முடிவை கைவிட வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள், குற்றச்சாட்டுகளை திரும்ப பெற வேண்டும். கோவை அலுவலர்களின் மாவட்ட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த மாவட்ட பொருளாளர் ஆர்.விஜயகுமார் பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜப்பார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா லூர்துமேரி, சத்தியகிரி, நந்திதா, நடராஜன், முத்துகிருஷ்னன், மற்றும் அனைத்து ஊழியர்களும் பங்கெடுத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!