விருது நகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்.. “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்!
இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத் தலைவர் அ.ஜெ. சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது!
விருதுநகர் மாவட்ட செய்தியாளர் (குமுதம் ரிப்போர்ட்டர்) கார்த்தி இன்று வெளியான இதழில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் உட்கட்சி பூசல் என செய்தி ஒன்றை வெளியிட்ட நிலையில். சிவகாசியில் செய்தியாளர் கார்த்தியை மர்ம நபர்கள் சிலர் கொலை வெறியோடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கடும் தாக்குதலுக்கு ஆளான கார்த்தி மிகவும் கடுமையான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.உண்மகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது தான் பத்திரிகை தர்மம், அதை சட்ட ரீதியாக அதை எதிர்கொள்ள முடியாத கோழைகள் தான் இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கார்த்தி மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக அரசு நடவடிக்கைகள் எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.பெரும் பாதிப்புக்குள்ளான செய்தியாளர் கார்த்தி அவர்களுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும், இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்!
இவன்:
ஜெ.அஸ்கர்
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்!
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்.
You must be logged in to post a comment.