இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இருக்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்.
கொரோனா ஊரடங்கு முன்னிட்டு பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இருக்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்.
கொரோனா ஊரடங்கு முன்னிட்டு பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் தொடர்ந்து கீழக்கரை இளைஞர்கள் ரத்ததானம் செய்து வருகிறார்கள். இதை ஒரு குறிப்பிட்ட சிறப்பு திகழ்வாக இல்லாமல் தொடர் நிகழ்வாக கடந்த மூன்று மாதங்களாக தொடங்கபட்டு, இதுவரை 70நபர்களுக்கு மேலாக ரத்தம் கொடுத்துள்ளனர்.
கபிர், அக்பர் அலி ஆகியோர் இதன் முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். உடனடி ரத்த தேவையுடையவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கபிர் -9344430817
அக்பர் -6385660100
பாசித் -9566686525
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளர் திலகா குழந்தை வளர்ச்சி அலுவலர்கள் ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செங்கம் மற்றும் கலசபாக்கம் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கலசபாக்கம் வட்டார மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன்குமார் உத்தரவின்பேரில் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் . ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி , மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெறுகின்ற வைரஸ் நோய் தடுப்பு முகாமை பொதுமக்கள் இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத் தவற விட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அலைய வேண்டி நேரிடும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். இம்முகாமில்வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாந்த்மருத்துவ குழு சார்பில் மருத்துவ ஆய்வாளர் விஜயகுமார் உடன் , கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத், புதுப்பாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், சீனிவாசன் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் ஊராட்சி செயலாளர் அருணகிரி ஊராட்சி துணைத்தலைவர் புனிதவள்ளி சிப்பந்தி சம்பத் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
கரோனா காரணமாக நிகழ்ந்துவரும் தொடர் உயிரிழப்புகளுக்கு பின்னரும் கூட தமிழக அரசு மெத்தனமாக உள்ளது வருத்தத்திற்குரியது என்று தமிழக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கரோனா முதல் அலையில் மிகத் தீவிரமாக இயங்கி மக்களை காப்பாற்றியது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிந்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர் சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி கரோனிவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.அதேபோன்று ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான காய்கறி பழவகைகளை வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கியது. மதுரையை பொருத்தவரை ஒவ்வொரு வார்டிலும் இதற்காகவே 4 வாகனங்கள் இயங்கின.ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசு இத்தனை உயிர் பலிகளுக்கும் பிறகு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த முறை நாங்கள் ஊரடங்கு அறிவித்த போது , மக்கள் இதன் பொருளாதாரச் சுமையை எப்படி தங்குவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்.பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும் கரோனா தொற்றிலிருந்தும் மக்களை மீட்க வேண்டும். மக்களும் மிக எச்சரிக்கையாக கவனத்தோடு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் திருநகர் 5 வது பேரூந்து நிறுத்தம் அருகில் வந்தேமாதரம் நடன பள்ளி மற்றும் என் மக்கள் சமூக நல அறக்கட்டளையு டன் இணைந்து மதுரை இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்ட தலைவர்குணா தலைமையிலும் மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையிலும் கொரோனா ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் கொரோனாவில் இருந்து எப்படி நம்மளை காப்பாற்றி கொள்வது என்ற விழிப்புணர்வை எடுத்து சொன்ன பின்னரே கபசுர குடிநீர் , மாஸ்க் , உணவு பொட்டலம் தண்ணீர் பாட்டில்களும் சமூக இடைவெளி விட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் அகில பாரத அனுமன் சேனை மாநில முதன்மை பொதுச் செயலாளர் A.P. ராமலிங்கம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி செயலாளர் குமார் , திருப்பரங்குன்றம் ராக்கெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏழைகள் அனைவரும் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் (Sir John Douglas Cockcroft) மே 27, 1897ல் யோர்க்சயர், இங்கிலாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இராணுவத்தில் மேற்கு முனையில் பங்காற்றினார். கொக்ரொஃப்ட் மான்செஸ்டர் நொழிநுட்பக் கல்லூரியில் மின்பொறியியல் படித்தார். பின்னர் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிட்ச் சென் ஜோன்சு கல்லூரியில் படித்தார். 1924 ல் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு தனது கவென்டிசு ஆய்வுகூடத்தில் கொக்ரொஃப்டை ஆய்வு மாணவராகச் சேர்த்துக் கொண்டார். 1928ல் ரூதர்போர்டின் மேற்பார்வையில் கொக்ரொஃப்ட் தனது முனைவர் ஆய்வை முடித்தார். இக்காலகட்டத்தில் இவர் உருசிய இயற்பியலாளர் பீட்டர் காப்பித்சாவின் உதவியாளராகப் பணியாற்றினார். காப்பித்சா மிகக் குறைந்த வெப்பநிலைகளில் காந்தப் புலங்களின் இயற்பியல் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். கொக்க்ரொஃப்ட் இவருக்கு ஈலியம் திரவமாக்கிகளை உருவாக்க உதவி புரிந்தார்.
கொக்ரொஃப்ட் புரோத்தன்கள் 300,000 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலுடன் போரான் அணுக்கருவை ஊடுருவ வல்லது எனக் கண்டுபிடித்தார். கொக்ரொஃப்டும் வால்ட்டனும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமது வேகமுடுக்கியை உருவாக்குவதற்கு உழைத்தனர். இதற்கென ஒரு மின்மாற்றி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 1932ல் இருவரும் தமது முடுக்கியைப் பயன்படுத்தி இலித்தியம், பெரிலியம் ஆகியவற்றை அதிக-ஆற்றல் கொண்ட புபுரோட்டான்களால் மோதச் செய்தனர். இதன் விளைவாக காமா கதிர்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அவதானித்தது நொதுமிகள் என ஜேம்ஸ் சாட்விக் காட்சிப்படுத்தினார். கொக்குரொஃப்டும் வால்ட்டனும் பின்னர் ஆல்ஃபா துகள்களைப் பெற நினைத்தார்கள். 1932 ஏப்ரல் 14ல், ஆல்ஃபா துகள்களை அவர்கள் கண்டுபிடித்தனர். நேச்சர் இதழில் அவர்கள் முதன் முறையாக செயற்கை முறை அணுக்கரு சிதைவை அறிவித்தார்கள்.
3Li + p → 24
2He + 17.2 MeV
எர்னெஸ்ட் வால்ட்டன், ப்மார்க் ஒலிபாண்ட் ஆகியோருடன் இணைந்து கொக்ரொஃப்ட்–வால்ட்டன் முடுக்கியை உருவாக்கினார். கொக்ரொஃப்ட்டும் வால்ட்டனும் இணைந்து இக்கருவி மூலம் அணுக்கருவை செயற்கையாகப் பிளக்கும் முறையைக் கண்டுபிடித்தனர். இது அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது. அணுவைப் பிளத்தல் என அழைக்கப்பட்ட இக்கண்டுபிடிப்புக்காக 1938ல் இயூசு விருதும், 1951ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இவர் 1951 ஆம் ஆண்டில் அணுக்கருப் பிளவில் நடத்திய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை எர்னஸ்டு வால்ட்டனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இவர் அணுக்கரு ஆற்றலை உருவாக்குயதில் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கொக்ரொஃப்ட் அறிவியல் ஆய்வு மையத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ரேடார் பற்றி ஆய்வு நடத்தினார். அணுக்கரு ஆயுதங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்களை ஆராய்ந்தார். 1940ல், டிசார்ட் திட்டத்தின் கீழ் பிரித்தானியத் தொழில்நுட்பங்களை அமெரிக்க சகாக்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்திட்டத்தின் விளைவாக போரின் பிற்பகுதியில், வி-1 பறக்கும் வெடிகுண்டுகளைத் தாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்குத் தரப்பட்டன. 1944 மே மாதத்தில் மொண்ட்ரியால் ஆய்வுகூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். போரின் பின், கொக்ரொஃப்ட் அணுவாற்றல் ஆய்வு நிறுவனத்தின் (AERE) இயக்குநராக நியமிக்கப்பட்டார். இங்கு கிளீப் (GLEEP) என்ற மேற்கு ஐரோப்பாவின் முதலாவது அணுக்கரு உலை 1947 ஆகஸ்ட் 15ல் ஆரம்பிக்கப்பட்டது. 1959 முதல் 1967 வரை கேம்பிரிட்ச் சர்ச்சில் கல்லூரியின் முதல் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை கான்பரா ஆஸ்ட்ரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.
அணுக்கரு பிளவு ஆற்றலை உருவாக்குய சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் செப்டம்பர் 18, 1967ல் தனது 70வது அகவையில் கேம்பிரிட்ஜில் உள்ள சர்ச்சில் கல்லூரியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கேம்பிரிட்ஜில் உள்ள அசென்ஷன் புரியல் மைதானத்தின் பாரிஷில், அவரது மகன் தீமோத்தேயின் அதே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அக்டோபர் 17, 1967 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ஒரு நினைவு சேவை நடைபெற்றது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி
மதுரை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம், திருநகர், ஆகிய காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் மற்றும் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவலர்கள் ஆகியோருக்கும், இதேபோல் இப்பகுதியில் உள்ள மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரானா தொற்றில் இருந்து காக்கும் விதமாக முகத்தை முழுவதும் பாதுக்காக்கும் பிளாஸ்டிக் முககவசம் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுந்தரியிடமும், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் மாநகராட்சி பணியாளர்களை தனித்தனியாக சந்தித்தும் கழிவு பஞ்சு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சர்வேஸ்வரன் மற்றும் வைரவராஜன் வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் 36பஞ்சாயத்துகள் உள்ளன இதில் தற்போது 32 பஞ்சாயத்துக்களில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணிபாற்றிவருகின்றனர் .இன் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ஊராட்சி மன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி ஒத்துழாமையா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இவர்கள் எந்த ஒரு தகவல்களும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிவிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்போது உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள இந்த நிலையில் எந்த பணிகளும் செய்ய முடியாமல் ஊராட்சிமன்ற தலைவர்கள் முடங்கி கிடப்பதாகவும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர்.அப்பொழுது ஊராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரி இவர்களை உள்ளே விடாமல் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த 15-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து உடன்பாடு ஏற்பட்டது இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.புகார் தெரிவிக்க வந்த எங்களை உள்ளே அனுப்பாத அதிகாரிகள் செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர்.
.செய்தியாளர் வி காளமேகம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அடுத்து ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 மாவட்ட எல்லைகள் பகுதியில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது இது போக 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர் இதைத் தொடர்ந்து இன்று ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் நில ஆக்கிரமிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் ஆறு ஆய்வாளர்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் போன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் தீவிரமாக செய்யப்படும் எனத் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார் தற்போதுவரை 850 வாகனங்கள் தேவை இன்றி வெளியே சுற்றிய அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 1500 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார் பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள பல வருடங்கள் தவறாக பயன்படுத்தாமல் தங்களது வீட்டில் இருந்து நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வரும் மற்றவர்களை பாதுகாக்க வீட்டில் இருக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தி எச்சரித்து அனுப்பினார் இதுபோன்று மீறி வீதிகளில் சுற்றினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது
.செய்தியாளர் வி காளமேகம்
மதுரை ஸ்ரீகாமகோடி மடத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் முத்தாய்ப்பாக எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் குரு மகிமை என்கிற தலைப்பின்கீழ் முகநூல் வாயிலாக சொற்பொழிவாற்றினார்..மகாபெரியவர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ள விடம் தீர்த்த பதிகத்திற்கு பொருள் கூறியுள்ளார். அந்தவகையில் ஒன்று இரண்டு மூன்று என்று பத்துவரையிலான எண்களை பட்டியலிட்டு, அந்த எண்களுக்கும் சிவபெருமானுக்குமான தொடர்பை அவர் விவரித்த விதம் அசாதாரணமானதாகும். இந்த பதிகத்தை வாசித்தால் விஷக்காய்ச்சலால் மற்றும் விஷப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்தாகவும் விளங்குகிறது என்பதையும் பெரியவர் விளக்கியுள்ளார். பெரியவரின் பாதுகைகள் இன்றும் நூற்றுக்கணக்கானோர் இல்லங்களில் இருந்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகைகள் பக்தர்கள் சிலருக்கு கிடைத்த விதங்கள் மெய்சிலிர்ப்பூட்டக்கூடிய ஒன்றாகும். பெரியவரின் பாதுகை ஒருவர் வீட்டில் இருப்பது என்பது அவரே நமக்கு துணையாக நம்மோடு வசிப்பது போன்றதாகும். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினர். அனுஷத்தின் நிமித்தம் காஞ்சிமடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விரைவில் நாடு முழுவதும் கொரோனா ஒழிந்து மக்கள்நலம் பெற்றிட பிரார்த்தனையும் செய்யப்பட்டது நிகழ்வுகள் அனைத்தும் முகநூல் மற்றும் யூ டியூப் வழியாக நேரலை செய்யப்பட்டது
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை திமுக இளைஞரணி சார்பாக வழக்கறிஞர் அன்புநிதி மதுரை ரயில்வே நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரசி மளிகை சாமான்கள் போன்ற உதவிகளை வழங்கினார்.கொரோனா இரண்டாம் அலை தொற்று தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அதன் முக்கிய பகுதியாகஎந்தவித தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது..இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைகளான இழப்பு மற்றும் மருத்துவ உதவி களுக்கு மட்டுமே வர வேண்டும் என்றும் வீடுகளுக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்களை வீடுதேடி அரசே விற்பனை செய்து வருகிறது..இந்நிலையில் இந்த தொற்று காலத்தில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வீட்டில் இருக்கக்கூடிய நபர்களுக்கு தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.மதுரை திமுக இளைஞரணி பிரிவின் சார்பாக வழக்கறிஞர் அன்பு நிதிமதுரை ரயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 500 நபர்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அரிசி பருப்பு மளிகை சாமான்கள் அடங்கிய உதவிகள் வழங்கப்பட்டது..வழக்கறிஞர் அன்பு நிதி தொடர்ந்து கொரோனா தொற்று பதிப்பின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என தற்போது வரை 25 ஆயிரம் நபர்களுக்கு மேல் தனது சொந்த முயற்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தில் நள்ளிரவில் முன்விரோதம் காரணமாக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி நீலாதேவி (42). மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி(23) ஆகியோர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் நீலாதேவி மற்றும் அகிலாண்டேஸ்வரியே சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.இதனை அடுத்து சம்பவம் அறிந்து வந்த மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். முத்துகிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து தற்போது தான் ஊருக்கு வந்துள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக கருத்தில் கொண்டு அவர்களுக்கும், கொரானா தடுப்பூசியை வலையங்குளம் ஆரம்ப சுகாதாரத்தில் பணியாற்றும் மருத்துவரை கொண்டு மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் மூலம் கரோன தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.அரசு மற்றும் தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு, விரைவாக கொரானா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து விமான நிலைய ஊழியர்கள், சுங்க லாகா நுண்ணறிவு பிரிவினர், தீயணைப்பு துறை மற்றும் இமிகரேஷன் துறையைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோவிட் ஷில்ட்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களிடம் செவிலியர்கள் உடல் உபாதை ஏற்பட்டால் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமல் மாத்திரை மட்டுமே சாப்பிட வேண்டும், வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாத்திரைகள் எதுவும் சாப்பிடக் கூடாது, என்றும் குறைந்தபட்சம் 2 நாட்கள் புகைபிடிக்ககூடாது, 5 நாட்களுக்குள் மது அருந்தக்கூடாது கூடாது என அறிவுறுத்தினர்.மேலும் பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து அதன் மூலம் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டாவது தவணை தடுப்பூசி என்பது 85 முதல் 112 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்,இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.வெளிமாநிலங்களில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளிடமிருந்து விமானநிலைய ஊழியர்களுக்கு கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனவும்,இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா முதல் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளதாக கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறவர் இன மக்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் அந்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் ஏற்பாட்டின் பேரில், அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான முனைவர் நடராஜன், கார்த்திக், அன்புராஜா, பிரபு உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். தமிழம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் அன்பு அறக்கட்டளைக்கு உதவு செய்ய விரும்புவோர் 8939667467 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தாங்களும் ஒரு சேவை நிர்வாகியாக பங்கெடுக்கலாம்.
மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் N 95 முகக்கவசம் மற்றும் சேனிடைசர் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நலத்திட்ட பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றன . அந்த வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்று (26/05/2021) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் இருந்த காவல்துறையினருக்கு மாஸ்க்குகளும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மசாலாத்தூள், கிருமி நாசினி, மற்றும் முகக்கவசம் சுமார் 900 குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.
அதனை கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துவக்கி வைத்தார்.
கடையை கொள்ளையடிப்பதில் பலரகம் உண்டு.ஆனால் எதுமாறியும் இல்லாத புது ரகமாய் பூட்டை உடைத்து கடையில் கொள்ளையடித்து விட்டு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புது பூட்டை வைத்து கடையைப் பூட்டி விட்டுச் சென்ற ருசிகர சம்பவம் உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் அசோக்ராஜா(35).இவர் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் பழைய தாலுகா ஆபிஸ் எதிரில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் சிங்கப்பூர் ஷாப்பிங் என்ற பெயரில் குறைந்த விலையில் செல்போன் உள்பட வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்கள் வீட்டு உபயோகப்பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கடைக்கு இரண்டு பக்கம் கதவு உள்ளது.இந்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடையை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.இக்கடையில் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் உசிலம்பட்டி அருகே நல்லபெருமாள்பட்டிளைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி(28)
.கொரோனா ஊரடங்கால் கடையை மூடிவிட்டு வீட்டிலிருந்தவர் இன்று சில மருந்துகள் வாங்குவதற்காக உசிலம்பட்டிக்கு வந்தவர் தனது கடையையும் பார்த்து விட்டுச் செல்லலாமே என கடைக்குத் தெருவுக்கு வந்துள்ளார்.அப்பொழுது தான் ஊரடங்கிற்கு முன் பூட்டிய பூட்டு இல்லாமல் வேறு பூட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டு தன்னுடைய ஓனருக்கு போன் செய்து இதுபற்றிக் கேட்டுள்ளார்.நான் பூட்டை மாற்றவில்லையே எனக் கூறிய உரிமையாளர் அசோக்குமார் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி உசிலம்பட்டிக்கு வந்துள்ளார்.கடையில் பூட்டு மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலிசார் கடையின் மற்றொரு பக்க ஷட்;டரை திறந்து சோதனை செய்ததில் கடையிலிருந்த செல்போன் உள்பட முக்கிய அழகுசாதனப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதன் மதிப்பு ரூ1.30லட்சம் (1லட்சத்து 30ஆயிரம்) ஆகும்.மேலும் பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் திருடியபின் வெளியில் யாருக்கும் சந்தேகம் வராமலிருக்க கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூட்டை எடுத்து பூட்டி விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.இதைப் பார்த்த கடைக்காரருக்கும் மட்டுமல்ல அங்கிருந்த போலிசாருக்கும் லேசாக மயக்கம்தான் வந்தது.முழு ஊரடங்கு சமயத்தில் பூட்டை உடைத்து திருடியது மட்டுமல்லாமல் விவரமாக பூட்டையும் மாற்;றிச் சென்ற விவ(கா)ரமான திருடன் குறித்து உசிலம்பட்டி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலைசிந்தனியா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு நீர்த்தேக்க தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹிந்தியா ஸ் (17) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயரிழந்தார். தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி உடலை மீட்டனர்.
கே.எம். வாரியார்
வேலூர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போலீஸ் நிலையம் மற்றும் விளாம்பட்டி காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு நேற்று திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி திடீரென ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அன்றாட பணிகள் மற்றும செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் பெண்கள் மற்றும் காவலர்களுக்கு கபசுப குடிநீர் வழங்கி கொரானா தொற்றுநோய் மிக தீவிரமாக இருப்பதால் காவலர் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் ,குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இரு கரம் கூப்பி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் உள்ளனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் நேற்று முன்தினம் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கொரானா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கிராமம் முழுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியராஜன் தலைமையில் கிராமம் முழுக்க கபசுரக் குடிநீர் உரிய கிருமினாசினியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா, மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.