மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தில் நள்ளிரவில் முன்விரோதம் காரணமாக தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி நீலாதேவி (42). மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி(23) ஆகியோர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் நீலாதேவி மற்றும் அகிலாண்டேஸ்வரியே சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார்.இதனை அடுத்து சம்பவம் அறிந்து வந்த மேலூர் போலீசார் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். முத்துகிருஷ்ணன் வெளிநாட்டில் இருந்து தற்போது தான் ஊருக்கு வந்துள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.