35
மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் N 95 முகக்கவசம் மற்றும் சேனிடைசர் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நலத்திட்ட பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றன . அந்த வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்று (26/05/2021) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் இருந்த காவல்துறையினருக்கு மாஸ்க்குகளும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.