Home செய்திகள் விளாம்பட்டி போலீஸ் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு

விளாம்பட்டி போலீஸ் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போலீஸ் நிலையம் மற்றும் விளாம்பட்டி காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு நேற்று திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி திடீரென ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அன்றாட பணிகள் மற்றும செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் பெண்கள் மற்றும் காவலர்களுக்கு கபசுப குடிநீர் வழங்கி கொரானா தொற்றுநோய் மிக தீவிரமாக இருப்பதால்  காவலர் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் ,குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இரு கரம் கூப்பி கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மற்றும் போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் உள்ளனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!