கீழக்கரையில் இன்று (08-05-2017) காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயிலையும், வெப்பத்தையும் சந்தித்த கீழை வாழ் மக்களுக்கு மன நிம்மதியை தந்துள்ளது.
Category:
செய்திகள்
சரித்திரம் திரும்ப வேண்டாம்.. வண்ணாங்குண்டு ஊராட்சியில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர் பகுதியில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர்கள் மீன் பண்ணை துவங்க ஆரம்பகட்ட வேலை நடைபெற்று வருகிறது.
இதில் மரைக்காயர் நகர் பகுதியை சுற்றி பெரியபட்டினம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியபட்டினம், குருத்தமண்குண்டு, தெற்கு புதுகுடியிருப்பு, கரிச்சான் குண்டு என்ற காந்தி நகர், வடக்கு புதுகுடியிருப்பு, முத்தரையர் நகர், மங்கம்மா நகர், வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர், மதினா நகர், கிருஷ்ணாபுரம், இலங்காமணி, கல்லுக்காடு, கும்மிட்டான் பள்ளி, களிமண்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட தோப்பு வலசை ஆகிய குக்கிராமங்கள் அமைந்துள்ளது
இப்பகுதியில் சுமார் 3000 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள் இக்குடும்பங்களில் சுமார் 40000 க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மீன்பண்ணை அமைந்தால் மேற்கண்ட குக்கிராமங்களின் நிலத்தடிநீர் ஆதாரம் மாசுபட்டு குடிநீர்ருக்கு தின்டாடும் நிலை ஏற்படுவதோடு நிலத்தடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டால் மேற்கண்ட குக்கிராமங்களில் உள்ள நிளம், மரம், செடி, கொடிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உறுவாகும். இதனால் கால்நடைகளும் பாதிப்புகளுக்குள்ளாகும்.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் இறால் பண்ணை ஆரம்பிக்கப்பட்டு இப்பகுதி பாலைவனம்மாகி சட்டபோராட்டத்திற்கு பின்பு அந்த இறால்பண்ணைகள் காலி செய்யப்பட்டு அந்த இறால் பண்ணையால் பாதிப்புக்குள்ளான அப்பகுதி நில உரிமையாளர்களுக்கு இறால் பண்ணை உரிமையாளர்களிடம்மிருந்து நஷ்டஈடு பெறப்பட்டது. எனவே பெரியபட்டினத்திற்க்கு அருகில் உள்ள வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர் பகுதியில் தனிநபர்ரால் அமைக்க உள்ள மீன் பண்ணை அமைக்க இராமநாதபுரம் மீன்துறை அலுவலகத்தில் இருந்தோ அல்லது மாசு கட்டுபாடு மற்றும் சுற்றுச் சூழல் வாரிய அலுவலகத்தில் இருந்தோ மீன் பண்ணை அமைக்க எந்த அனுமதியும் வழங்ககூடாது.
மேலும் யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் இப்பகுதியில் மீன் பண்ணை ஆரம்பித்தால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேற்கண்ட குக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று 07-05-2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் புது கிழக்கு தெரு குட்லக் ஸ்டோர் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை கீழக்கரை காவல்நிலையம் உதவி ஆய்வாளர் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI கிழக்கு கிளை மற்றும் தெற்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. ஆனாலும் நாம் விரும்புவதை நேரில் பார்த்து, உணர்ந்து வாங்குவது போல் திருப்தி கிடைப்பது கிடையாது. அதுவும் குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்களாக இருந்தால் நாம் அதிக கவனம் செலுத்துவோம்.
அக்குறையை நீக்க தற்சமயம் கீழைநகரில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்காகவே உருவாகியுள்ளது HSF TOY STORE. இக்கடையில் வெளிநாட்டு விளையாட்டு பொருட்களும், வெளிநாட்டு தரத்தில் உள்நாட்டு பொருட்களும் நியாயமான விலைகளில் விற்கப்படுகிறது.
இக்கடையில் வெறும் பொம்மைகளுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், பொருள் வாங்க வரும் குழந்தைகளின் மனம் கவரும் வகையில் தரமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாக்லேட் மற்றும் பிஸ்கட் வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கடை எல்லோரும் எளிதில் அணுகும் வகையில் வள்ளல் சீதக்காதி சாலையில் ( ஜும்மா பள்ளி மற்றும் மூர் டிராவல்ஸ் எதிர்புறம்) திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கீழைநகருக்கு புதிய முயற்சியாக இருந்தாலும், மக்கள் மனதை கவரும் என்பதில் ஐயமில்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (07-05-2017) ராமேஸ்வரம் சுற்றுலாவந்த வேன் நிலைதடுமாறி பாம்பன் பாலத்தின் மோதியது. மோதிய வேன் தடுப்புசுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. ஆனால் அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 14பேர் உயிர்தப்பினர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டது. இது சம்பந்தமாக அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற விபத்து நடைபெறுவதற்கு முக்கிய காரணம், சுற்றுலா வரும் பயணிகள் வாகனம் செல்லும் வழியை அடைக்கும் விதமாக நிறுத்தி பாலத்தை சுற்றி பார்ப்பதுதான். சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் இது போன்ற விபத்தை தடுக்கலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிரந்தர சுகாதார தீர்வுக்காக காத்திருக்கும் கீழக்கரை ஜும்மா பள்ளிவாசல் சாலை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் மிகவும் பழமையான மற்றும் முக்கியஸ்தர்கள் முதல் வெளியூர் பயணிகள் வரை காண விரும்பும் இடம் மன்னர் காலத்தில் கலை அம்சத்துடன் கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஆகும். ஆனால் இன்றைய ஆட்சியளர்களுக்கும், நகராட்சியாளர்களுக்கும் அதனுடைய பெருமை தெரியாத காரணத்தினாலோ என்னவோ அதனுடைய சுற்றுப்புற சுகாதாரம் எப்பொழுதும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. அவ்வப்போது அவ்வழியில் செல்வோர்கள் எல்லாம் முகம் சுழிக்கும் அளவுக்கு தெருவில் வெள்ளமாக ஊற்றெடுத்து ஓடும் கழிவு நீர், பின்னர் மக்களின் புகாருக்கு பிறகு தற்காலிகமாக சுத்தம் செய்தல், இதுதான் வாடிக்கை, கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இன்றைய காலை நிலவரம்.
இது சம்பந்தமாக பலமுறை, அதுவும் சமீபத்திலும் நிரந்த தீர்வு கோரி செய்தி வெளியட்டிருந்தோம். ஆனால் கழிவு நீர் பிரச்சினை எந்த நிரந்தர தீர்வும் இல்லாமல் தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் செல்கின்றது.
http://keelainews.com/2017/04/15/kutba-palli-street/
http://keelainews.com/2017/03/05/sewage-water-stagnation-municipality-laziness-klk-050317-02/
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் 05-05-2017 அன்று SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் SDPI கட்சி அலுவலகம் முன்பு சர்பத் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் கீழக்கரை தாலுகா அலுவலகம் தாசில்தார் K.M.தமிம் ராஜா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு. சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளார் பி.அப்துல் ஹமீது கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் கிருஷ்ண மூர்த்தீ மற்றும் ராமநாதபுர ஜமாலியா ஜூவல்லர்ஸ் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பை SDPI தெற்க்கு கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து கிளை SDPI நிர்வாகிகளுடன் SDTU தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இத்திறப்பு விழாவில் 350க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் மே மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வணிக வளாகத்தில் “arogya” “ஆரோக்யா” எனும் இயற்கை மருத்துவ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
இக்கண்காட்சியில் இயற்கை மருத்துவமான ஹோமியோபதி, யுனானி, சித்த மருத்துவம், யோகா மற்றும் இயற்கை சார்ந்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ ஆலோசனைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மேலும் இக்கண்காட்சியில் ஆயுஸ் ஆயுர்வேத மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சியை Department of Indian Medicine & Homeopathy Department of Tamilnadu மற்றும் Ministry of AYUSH, Government of India ஆகிய அமைச்சக துறைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது சிறப்புரையும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் எம்.முஹம்மது இஸ்மாயில் என்ன படிக்கலாம் மற்றும் எது நம் இலக்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு தரும் உரையும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சேர்க்கைக்கு இலவச ஆன் லைன் வசதி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கு இலவச இணையதள வசதி விண்ணப்பம் பூர்த்தி செய்வதகு உதவி செய்ய ஏற்பாடு துவக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச சேவையை கல்லூரி சேர்மன் SM. முஹம்மது யூசுப் துவக்கி வைத்தார். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் http://www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
http://www.annauniv.edu
இது பற்றி அறக்கட்டளை இயக்குநர். ஹாமீது இபுராஹிம் மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். அப்பாஸ் மைதீன் கூறுகையில் மாணவர்கள் பிழையின்றி விண்ணப்பிக்க எங்களது கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்ட உள்ளனர். மேலும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு கல்லூரி பேருந்துகள் இராமநாதபுரம் புதிய பேருந்து மற்றும் இரயில்வே கேட்டிலிருந்து; மே 5 முதல மே 30 வரை காலை 8.20 மணிக்கு புறப்படும். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றனர்.
பதிவு செய்ய வரும் மாணவர்கள் பெற்றோரின் வருமான சான்று, ஜாதிச்சான்று மற்றும் முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று கொண்டு வர வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் இன்று (04-05-2017) PAD தொண்டு நிறுவனம் சார்பாக வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் PAD தொண்டு நிறுவனத்தின் இளைஞர் வளர்ச்சி அலுவலர் தேவ் ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியின் நோக்கத்தை அந்நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மன்னார்மன்னனும், ஊக்க உரையை நிறுவனத்தின் செயலாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்புரையை சதக் கல்லூரியின் டீன் முனைவர் முகமது சஹபர் மற்றும் செய்யது ஹமீதா அறிவியல் மற்றும் கலை கல்லூரியின் முதல்வர் முனைவர் ரஜபுதீன் ஆகியோர் வழங்கினர். மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டேனிங் பாயின்ட் நிறுவனத்தைச் சார்ந்த அண்டோ சேவியர் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வியில் உள்ள பாடப் பிரிவுகள் மற்றும் என்ன படிக்கலாம் என்று விளக்கினார். அதைத் தொடர்ந்து அவினாசி CSED நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லீஸ்வரன் வளரிளம் பெண் குழந்தைகளின் தொடர் கல்வியின் அவசியம் பற்றி விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக PAD தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முனியராஜ் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (4-5-17 )கீழக்கரை நகர் SDPI கட்சியின் சார்பாக நகர் தலைவர் குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர் அஷ்ரப் தலைமையில் சர்பத் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு இருந்தது. இந்த நிகழ்ச்சியை காவல் துறை ஆய்வாளர் புவனேஸ்வரி தொடங்கி வைத்தார், அவருடன் துணை ஆய்வாளர் பாண்டிசெல்வி கலந்து கொண்டார்.
இந்த மோர் பந்தல் ஒருங்கிணைப்பு மேற்கு கிளை நிர்வாகிகள் அம்ஜத், சைய்து ஹசன் மற்றும் பாசித் மற்றும் தெற்கு கிளை செயலாளர் காதர் மற்றும் தொகுதி இ.செயலாளர் சித்திக் ஆகியோர் செய்தனர்.
மோர் பந்தல் நிகழ்ச்சியில் து.தலைவர் மற்றும் இ.செயலாளர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயர்வீரர்களும் SDPI கட்சியின் வடக்கு,கிழக்கு,தெற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் 210 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பயணடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சிக்கு புதிய ஆணையராக வசந்தி நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டார். இவர் முன்னர் கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
இதற்கு முன்னர் அரசியல்வாதிகளின் பணிக்காலம் முடிந்த பின்னர் சந்திரசேகர் பொறுப்பு ஆணையராக பணியாற்றி மக்கள் எளிதாக அணுகக்கூடியவராகவும், மக்களின் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க கூடியவராகவும் இருந்தார். அவர் ஆற்றிய பணிக்கு இத்தருணத்தில் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நிலத்தை தானமாக வழங்கிய செல்வந்தர்..
மறைந்தும் கொடை கொடுத்த வள்ளல் சீதக்காதி வாழ்ந்த ஊர் என்று பெயர் பெற்ற ஊர் கீழக்கரை. தற்சமயம் கீழக்கரையில் பயன்பாட்டில் இருக்கும் இராமநாதபுரம்-கீழக்கரை நெடுஞ்சாலையில் இருந்து, நகராட்சி அலுவலகம், முக்கிய தபால் நிலையங்கள் போன்ற அனைத்து அரசாங்கம் செயல்பாடுகளுக்கும் நிச்சயமாக கீழக்கரையில் உள்ள முக்கிய தன்வந்தர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.
அதுபோல் கீழக்கரையும் இன்று உலகளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் ஊராக விளங்க முக்கிய காரணம் தன்வந்தர்கள்தான். அக்கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்வது மட்டுமல்லாமல் தேவை உடையவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருவதும் செல்வந்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளும், கல்லூரிகளும்தான் என்றால் மிகையாகாது.
அந்த வரிசையில் இன்று கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு தனி அலுவலகம் அமைக்க ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாஹுதீன் கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் முனியசாமி கோயிலுக்கு எதிர்புறமாக தோட்டப்பகுதியில் உட்புறமாக பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை கீழக்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக கவர்னர் பெயருக்கு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
மீண்டும் கீழக்கரை ஊரின் தேவைகளைய நிவர்த்தி செய்து கொள்ளும் அரசாங்கத்தை முழுமையாக எதிர்பார்க்காத தன்னிறைவு பெற்ற ஊராக தலை நிமிர்ந்து நிற்கிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
100 கிராம் அமுல் தயிரின் கொள்முதல் விலை ரூபாய் 972/-மட்டுமே-தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை ரயில்வே கேன்டீன் ஊழல் அம்பலம்…
by Mohamed
written by Mohamed
மும்பையை சார்ந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே சமையல் பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட்ட தயிர், உப்பு, பருப்பு போன்ற பொருட்களின் விலையை அறியும் நோக்கில் தாக்கல் செய்த மனுவின் மூலம் மெகா ஊழல் அம்பலமாகியுள்ளது.
கடந்த வருடம் ஜூலை 2016 ல் அஜய் போஸ் செய்த மனுவுக்கு ரயில்வே கேன்டீன் அதிகாரிகள் எந்த வித பதில் அளிக்காத நிலையில் மேல் முறையீடு செய்தார். அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என மேல் முறையீட்டு அதிகாரி ரயில்வே நிர்வாகத்துக்கு ஆணையிட்டு பல மாதங்கள் ஆகியும் கூட பதில் வராததால் அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதனை சரி செய்ய மத்திய ரயில்வே நிர்வாகம் கால தாமதம் செய்வதாக உணர்ந்த அஜய் போஸ் மீண்டும் ஒரு மனுவை தொடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்மை நகரத்தின் மத்திய ரயில்வே உணவகம் நஷ்ட கணக்கை அதிகமாக காட்டியதை அறிந்த சமூக ஆர்வலர் அஜய் போஸ் கேள்வி கணைகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தொடுத்ததனால் உண்மை நிலவரமும், பொது நிதிகள் முறைகேடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது..
மேல் முறையீடு மனுவுக்கு மத்திய ரயில்வேயின் பொது தகவல் அலுவலர் அளித்த பதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. ஏனேன்றால் ஒரு லிட்டர் அமுல் தயிர் ரூபாய்.9720/-க்கும், சமையல் எண்ணை ஒரு லிட்டர் ரூபாய்.1,241/-க்கும் கொள்முதல் செய்ததாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சாதரணமாக 25/-க்கு வாங்க வேண்டிய 100 கிராம் அமுல் தயிரை ரூபாய் 972/- விலை கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டியதன் மூலம் மெகா ஊழல் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. அதனால் இலாபகரமாக செயல்பட வேண்டிய மத்திய ரயில்வே கேண்டீன் அதிக நஷ்டத்தை சந்திக்க நேரிட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் 2016ல் நடந்த கொள்முதல் படி ஒரு பாக்கெட் டாட்டா உப்புவின் விலை ₹.49/- க்கு, அதாவது 3மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் வெங்காயம், உருளை போன்ற பொருட்களின் விலை மட்டுமே அப்போதய சந்தையின் விலைக்கு ஒத்து போவதாக தகவல் அறியப்படுகிறது.
கொள்முதல் விலையில் செய்த முறைகேட்டை மறைக்க சரியான அளவிற்கு பதிலாக உணவு தயரிக்க அதிகமான பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தவறான கணக்கும் காட்டபட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது:
இதுகுறித்துப் கூறிய ரெயில்வே கோட்ட மேலாளர் ரவிந்திர கோயல், ”இது தட்டச்சுப் பிழையாகத்தான் இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.
விலை உயர்வு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ரெயில்வே அதிகாரி கூறும்போது, ரெயில்வே நஷ்டத்தில் இயங்குவதற்கு இத்தகைய ஊழல்களே காரணம். இத்தகைய சம்பவங்கள் உரிய முறையில், தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மக்களுக்கான சட்டமாகவும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்ட உறுதுணையாக இருக்கும் என்பதால் அதன் மூலம் உண்மையை கண்டறிந்து ஊழலை ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
கீழக்கரையிலும் சட்டப்போராளிகள் என்று இளைஞர்கள் குழுவாக இணைந்து ஊரில் போடப்பட்டுள்ள சாலைகள், கால்வாய் மூடிகள் மற்றும் பல அரசாங்க பணிகளில் சில குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பல கோடி கணக்கில் லாபம் அடைந்துள்ளதை சமீபத்தில் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது, நமக்கு கண் முன் நடந்த உண்மை உதாரணமாகும். இதுபோல் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விளக்கங்களை பெற்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் ஊழல் செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கும் மனதில் ஒரு பயம் உண்டாகும். கேள்வி கேட்கும் சமுதாயமே சிறந்த சமுதாயம் என்ற வாக்கும் உண்மையாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை ஏர்வாடியில் தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுகாரப் பணிகள் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலான விசயமாகும்.
தற்சமயம் பரவி வரும் டெங்கு காய்ச்சல், கிருமி காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்று நோய்களைத் தடுக்கும் விதமாக, இன்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொசு மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், குடிநீருக்கு க்ளோரின் சேர்த்தல், ஆங்காங்கே பரவி கிடந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து மருத்துவ ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் கடலாடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் மணிமேகலை,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகள் சில நாட்களில் நடக்கும் சிறப்பு பணியாக நிறுத்தி விடாமல் அன்றாடம் மேற்கொண்டால் மக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மே 3ம் தேதி உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மே3 ம் தேதி 1993ம் ஆண்டு ஐக்கிய சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த பிரகடனம் 1991ம் ஆண்டு ஆப்பிரிக்க பத்திரிகையார்களால் சமர்ப்பிக்கப்பட்ட Windhoek Declaration அறிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது. ஆக உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தின் பிறப்பிடம் பல்லாண்டு காலம் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பூமியான ஆப்ரிக்கா என்றே கூறலாம்.
உலக சுதந்திர தினத்திற்காக சமர்ப்பிக்க பட்ட அறிக்கையின் அடிப்படை நோக்கம், பத்திரிக்கை வெளிப்படைத்தன்மை, அடிப்படை மனித உரிமை, பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டதாகும். மேலும் எந்த நாட்டில் முழுமையான பத்திரிகை சுதந்திரம் உள்ளதோ அந்நாட்டில் முழுமையான மக்களாட்சிக்கு இருக்கும் என்ற கருத்தை வலியுருத்த கூடியதாகவும் இருந்தது. ஆப்ரிக்காவில் உருவான Windhoek Declaration அறிவிப்பைத் தொடர்ந்து அதனை ஆதரிக்கும் வண்ணம் மத்திய ஆசிய நாடுகளில் Alma-Ata அறிவிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் Alma-Ata அறிவிப்பு, கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் Santiago அறிவிப்புகள் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்திற்கு வலுவூட்டின.
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் சார்ந்த மொழிகளில் எங்கிருந்தாலும் அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளக் கூடிய நவீன வசதியும் இன்றைய கால கட்டத்தில் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு அளவிடற்கரியது. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது என்பது பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தனிச்சிறப்பு.
மிக முக்கியமாக பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பம். அதனை நிலைநாட்டும் வகையில் பத்திரிகைத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே பத்திரிகையின் தரம் உயர்ந்து கொண்டே போக வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பத்திரிகையும், ஊடகமும் நியாயமாக, அநீதிக்கு இடம் கொடுக்காமல், வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு அதன் மூலம் சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற வேண்டும்.
பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தர்மம் வளர, வளர நாட்டின் வளர்ச்சியும், வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை ஏர்வாடியில் நாகப்பட்டினத்தைச் சார்நத இளைஞர் ஒருவர் நண்பரை காண வந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் நாகபட்டினத்தை சேர்ந்த இளங்கோவன் (25) மாரியூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக டூவிலரில் வந்து கொண்டிருந்த போது ஏர்வாடி போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
நெடுஞ்சாலைகள் பல எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்தாலும், அதிவேகத்தினாலும், கவனக் குறைவினாலும் அதிகமான விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. நெடுஞ்சாலைகளில் இருசக்கர வானங்களில் பயணம் செய்பவர்கள் அதி கவனத்துடன் செல்வது மிக அவசியமாகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிலந்தி மனிதன் (Spider Man) போன்ற கார்டூன் படங்கள் குழந்தைகள் முதல் பெறியவர் வரை அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. சில குழந்தைகள் அதை உண்மை என்று நம்பி சிலந்தி மனிதன் ( Spider Man) போல சாகசங்கள் செய்ய தூண்டப்பட்டு அந்த குழந்தைகள் விபரீதங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் குறும்புகளை சமாளிக்கவும், வீட்டு வேலையை குழந்தைகளின் இடையூறு இல்லாமல் தொடர குழந்தைகளுக்கு கார்டூன் படங்களை பார்க்க அனுபதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கார்டூன் கேம்ஸ் அடங்கிய டேப்லட் போன்ற சாதனங்களையும் குழந்தைகளுக்கு கொடுத்து விளையாட அனுமதிக்கிறார்கள்.
கார்டூனில் வரும் கதாபாத்திரங்களை உண்மையென்று நம்பி சில குழந்தைகள் அது போலவே முயற்சி செய்வதால் அச்செயல் பல விபரீதங்களுக்கு வித்திடுகின்றன.
சமீபத்தில் கிழக்கு சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் சுஹோ என்ற 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஒரு குடியிருப்பின் 10 வது மாடியில் வசித்து வந்தான். சம்பவத்தன்று டிவியில் கார்டூன் படம் ஒன்று பார்த்து கொண்டு இருந்தவன், அதில் வரும் ஹீரோ செய்யும் சாகசத்தை பார்த்த சிறுவனும் ஒரு குடையை பாராசூட் போல் நினைத்து 10 வது மாடியில் இருந்து குதித்து விட்டான். ஆனால் தரையில் விழ்ந்த சிறுவனை பலத்த காயத்துடன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து உறவினர் ஒருவர் கூறும் போது சிறுவன் டிவியில் கார்ட்டூன் படம் பார்த்து உள்ளான். அதில் வரும் ஹீரோவை பார்த்து குடையை பாராசூட்டாக பயன்படுத்தலாம் என கற்பனை செய்து இந்த காரியத்தை செய்து உள்ளான். நல்ல வேளை சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவர் கூறினார்.
ஆகையால் கார்டூன் போன்ற படங்கள் பார்க்க அனுமதிப்பதை தவிர்த்து நிஜமான வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள் அடங்கிய விலங்குகள், அறிவியல், இயற்கை தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிப்பதே சிறந்தது என மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோடை வெயில் கடந்த வருடத்தை காட்டிலும் மிகவும் உக்கிரமாக உள்ளது. கீழக்கரையில் பல சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைவரும் மக்கள் தாகம் தீர்க்க நீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கி வருகிறார்கள்.
நேற்று (02-05-2017) திமுக கட்சி சார்பாக பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், ரோஸ்மில்க் போன்ற நீர் ஆகாரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் தோழமைக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், மமக மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.