வேலூர் அடுத்த காட்பாடியில் திடீரென்று மழை பெய்தது. காலை முதல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மழை பெய்தது.
கே.எம்.வாரியார்
வேலூர் அடுத்த காட்பாடியில் திடீரென்று மழை பெய்தது. காலை முதல் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு மழை பெய்தது.
கே.எம்.வாரியார்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று (24-ம் தேதி) மாம்பழ நிற பட்டாடையில் அத்தி வரதர் காட்சியளித்து வருகின்றார்.கடந்த 23 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேலான Uக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து உள்ளனர்.
கே.எம்.வாரியார்
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை சுங்கச்சாவடி அருகே சந்திரசேகர் என்பவர் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வந்த ரூ.3,80,000 பணம் பறிமுதல் – வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.
கே.எம்.வாரியார்
கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அழகுமுத்து ரோந்து பணியில் இருந்தபோது பாலமேடு மிளகரணை சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கூடல்நகர் காலனியை சேர்ந்த அபிஷேக் சிங் மற்றும் கூடல்நகர், அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்டி ரூட்ஸ் ஆகியோர் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.250 கி.கி கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த அனந்தபுரி விரைவு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த பூர்ணிமா மற்றும் இரண்டு மகன்கள் இன்று அதிகாலை 4. 50 மணிக்கு மதுரையில் நிலையத்துக்கு வந்தது மதுரை இறங்கவேண்டிய பூர்ணிமா அயர்ந்து தூங்கியதால் ரயில் புறப்படும் சில வினாடிக்கு முன் விழித்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்க முற்பட்டார் அவசரமாக இறங்கும் பொழுது ரயில் நடைமேடை க்கும் ரயிலுக்கும் இடையில் அடியில் சிக்கிய பெண் பயணிகள் கவனித்ததால் உடனடியாக ரயிலை நிறுத்திய ரயில்வே காவல்துறையினர் அவரை வெளியே எடுக்க முற்பட்டனர் உடல் சற்று பருமனாக இருந்தால் அவரை எடுக்க முடியவில்லை உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிளாட்பாரத்தை உடைத்து சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரயில்வே காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் துரிதமாக செயல்பட்டதால் பெண் பயணி காப்பாற்றப்பட்டா.இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது
பயணி ஒருவர் கூறும்போது. அதிகாலை மற்றும் இரவு நேர ரயில்களில் ரயில் நிலையம் வரும் முன் 15 நிமிடத்திற்கு முன்பாக அறிவிப்பு செய்யும்படி இருந்தால் இது போன்ற விவரங்களை தவிர்க்கலாம் என ரயில் பயணி ஒருவர் தெரிவித்தார் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்ற நிகழ்வு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதில் பயணித்த பயணி ஒருவர் மதுரையில் இறங்க வேண்டியவர் அயர்ந்து தூங்கிய திருமங்கலத்தில் இறங்கி விடலாம் என்று நினைத்து ஓடும் ரயிலில் இறங்கியுள்ளார் இதனால் அவர் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டது இதனைப் போக்க ரயில் நிலையம் வரும் 15 நிமிடத்திற்கு முன்பாகவே அறிவிப்பும் ஒலிபெருக்கி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியில் உள்ள கிணற்றில் காட்ராம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுப்பிரமணி (23)என்பவர் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் சடலம் கண்டெடுப்பு கொண்டபாளயம் போலீசார் விசாரணை
Dr.A.P.J.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.08.2019 அன்று மாலை 3.00 மணியளவில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் மாணவி S.நிவேதிதா Dr.A.P.J.அப்துல்கலாமின் உருவப்படத்தை வரைந்து காட்டினார். அந்த மாணவியையும், கட்டுரைப் போட்டியில் பங்குப் பெற்ற மாணவிகள், ஆசிரியர்களை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வெகுவாக பாராட்டி ஊக்குவித்தார்.
இந்நிகழ்வை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கூடுதல் கல்விசார் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் S.துர்கா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எக்ககுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
எக்ககுடி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் கண்மாய் கரையை பலப்படுத்துதல், 4-வது மடையை மீளக்கட்டுதல் மற்றும் கலுங்குகளை பராமரித்தல்,
சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்மாய் மூலம் 104.41 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர்.ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது தமிழ்த முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ்,ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின்
கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல்,
நீர் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல்,புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், வருவாய்த்துறை
அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையை குறியீடு செய்திடவும்.ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் பி.ராஜேந்திரன், பி.ஆனந்த்பாபுஜி உட்பட அரசு அலுவலர்கள்S எக்ககுடி கண்மாய் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.
.
ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் 34 ஆம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் பூக்குழி உற்சவம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதனையொட்டி ஜூலை 23, 24, 25 தேதி இரவு அக்னி சட்டி கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு ஊர்வலம் செல்கிறது.
ஜூலை 26 இரவு மாவிளக்கு பூஜை, ஜூலை 27 சிறப்பு அபிஷேகம், ஜூலை 28 இரவு பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஜூலை 31 இரவு பூக்குளி உற்சவம் நடைபெறுகிறது. ஆக.1 இரவு வாண வேடிக்கைகளுடன் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆக 29, 30 தேதிகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அறங்காவலர் வி.கருணாகரன் மற்றும் கே.பாலசுப்ரமணியன், கே.கவுதம் ஆகியோர் உள்ளட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர், விவசாயம் மட்டுமில்லாமல் பைனான்ஸ் தொழிலுடன் தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தப்பணி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பல தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். தி.மு.கவின் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் கூட.தூத்துக்குடி மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்களை பதிக்கும் பணியை துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கருணாகரன் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும் கருணாகரனுக்கும் அவ்வப்போது மோதலும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குலையன்கரிசல் கிராமத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தைப் பூட்டி, கருணாகரன் சாவியை எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை குலையன்கரிசல் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்து காரில் வீடு திரும்பினார் கருணாகரன். தோட்டத்தின் வாசல் பகுதியில் சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த கும்பல்,காரை வழி மறித்தனர். காரில் இருந்து இறங்கிய கருணாகரனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடினர்.இதில், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்த கருணாகரன்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளரான பெரியசாமியின் தீவிர ஆதரவாராக இருந்த போது, தூத்துக்குடி யூனியன் சேர்மனாக பதவி வகித்தார் கருணாகரன். பெரியசாமியின் மறைவிற்குப் பிறகு, தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணப்பாட்டுவாடா தொடர்பானவற்றை கருணாகரன் கவனித்து வந்ததாகவும் இதில், சில பிரச்னைகள் எழுந்ததால் இவரை அனிதா ராதாகிருஷ்ணன் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, கருணாகரனும் அனிதா ராதாகிருஷ்ணனை விட்டுவிலகி, தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏவான சண்முகையாவுடன் கைகோர்த்து செயல்பட்டு வந்துள்ளார்.கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்தையாபுரத்தில், கருணாகரனுக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தை காலி செய்துவிட்டு, தனது சொந்த ஊரான தண்டுபத்துவிற்கு மாற்றிவிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களில் ஒருவரான பில்லா ஜெகன், ஏற்கெனவே கொலை வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள நிலையில், தற்போது அனிதாவின் மற்றொரு ஆதரவாளரான கருணாகரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 0 முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் பதிவு செய்யும் பகுதி, முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை வழங்கும் பகுதி, மனநல மருத்துவ பகுதி, உடல் பரிசோதனை செய்யும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது. இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள், ஆதார் அட்டை வழங்குதல், காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூளை முடக்கவாத குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி, பராமரிப்பு உதவித் தொகை, பேருந்து மற்றும் ரயில் பயண சலுகை அட்டை,அடையாள அட்டை பெறுதல், புதிய அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் எளிதில் பங்கேற்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றிய பகுதிகளிலும் முகாம் நடத்தப்படுகிறது. 23.07.2019 அன்று சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு கொம்மடிக் கோட்டை,சந்தோஸ்நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,24.07.2019 அன்று புதூர் ஒன்றியத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,25.07.2019 அன்று கோவில்பட்டி ஒன்றியத்திற்கு V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,26.07.2019 அன்று ஆழ்வார் திருநகரி ஒன்றியத்திற்கு மாவடிபண்ணை வட்டார வளமையம், அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,29.07.2019 அன்று கருங்குளம் ஒன்றியத்திற்கு செய்துங்கநல்லூர் RC நடுநிலைப் பள்ளியிலும்,31.07.2019 அன்று உடன்குடி ஒன்றியத்திற்கு கிறிஸ்தியா நகரம் தூ.நா.அ.தி.க. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,01.08.2019 அன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட V.O.C. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,02.08.2019 அன்று விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,06.08.2019 அன்று திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு அருள்மிகு திருச்செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,07.08.2019 அன்று கயத்தார் ஒன்றியத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,08.08.2019 அன்று திருவைகுண்டம் ஒன்றியத்திற்கு KGS தொடக்கப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனுடையோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 6,குடும்ப அட்டை நகல், வருமான சான்றிதழ் நகல் (இருப்பின்), தேசிய அடையாள அட்டை நகல் (இருப்பின்), ஆதார் அடையாள அட்டை நகல் (இருப்பின்) மற்றும் பிற மருத்துவ சான்றுகள் (இருப்பின்) கொண்டு வரவேண்டும்.எனவே 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த ஒன்றியங்களில் நடை பெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகர்சாமி (74) மற்றும் அவரது மனைவி சகுந்தலா (70) ஆகியோர், தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தனர்.அதில், ‘பாண்டியன் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடு, 90 பவுன் நகைகள் மற்றும் காரை தனது மகள்கள் கிருத்திகா, சியாமளா ஆகியோர் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் இணைந்து அபகரித்துக் கொண்டனர். அத்துடன், எங்கள் இருவரையும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு சென்றுவிட்டனர். தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்’ என கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன், முதியவர்கள் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தினார். அதேபோல், சொத்துக்களை கைப்பற்றி வைத்திருக்கும் மகள் கிருத்திகா, சியாமளா மற்றும் அவருக்கு உதவிய கணேசனையும் அழைத்து விசாரணை நடத்தினார்.அப்போது, சொத்துக்களைப் பறித்துக் கொண்டு பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டு இருப்பது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, மகள்கள் அனுபவித்து வந்த திருநகர் பாண்டியன் நகரில் உள்ள 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டின் பதிவுகளை ரத்து செய்த கோட்டாட்சியர் முருகேசன், அந்த வீட்டை மீண்டும் அழகர்சாமி – சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.மேலும், அவர்களுக்கு சொந்தமான 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டுக் கொடுக்க திருநகர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தாமிரபரணி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரிகுளம், நல்லூர் கீழகுளம், சீனிமாவடிகுளம் ஆகிய கண்மாய்கள் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தாமிரபரணி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரிகுளம், நல்லூர் கீழகுளம், சீனிமாவடிகுளம் ஆகிய கண்மாய்கள் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, (22.7.19)துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள37 கண்மாய்கள் ரூ.13.15 கோடி மதிப்பிட்டில் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இத்திட்டத்தின்கீழ் ஆயக்கட்டு விவசாயிகள் பயண்பெறும் வகையில் கண்மாய்களை சீரமைப்பு செய்தல்,மதகுகளை பழுதுபார்தல், மிகை நீர்வழித்தோடிகளை பழுதுபார்த்தல், வரத்துக் கால்வாய், மிகைநீர் வழித்தோடி கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.கண்மாய் புனரமைப்பு பணிகள் அந்தந்த பகுதி ஆயக்கட்டு விவசாய சங்கங்களின் பங்களிப்பு 10சதவிதத்துடன், அச்சங்கங்கள் மூலமே பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகநேரிகுளம் கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.28.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 74.55 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும்.நல்லூர் கீழகுளம் கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.29.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 201.74 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், சீனிமாவடிகுளம்; கண்மாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மூலமாக ரூ.29.00 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 516.87 ஹெக்டேர் ஆயக்கட்டு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கண்மாய்களின் மடை பழுதுபார்த்தல், மடை மறுகட்டுமானம், கரைப்பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பெருநிறுவனங்களில் சமுக பொறுப்பு நிதியின் மூலமும் சிறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்படுகிறது. இப்பணிகள் மழை காலத்திற்கு முன்னதாகவே இரண்டு மாத காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, தாமிரபரணி வடிநில கோட்ட பொது பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை,திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, இளநிலை பொறியாளர் ரகுநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இசக்கியப்பன், சுடலை, ஆறுமுகநேரிகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பாலவிநாயகம், நல்லூர் கீழகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாஸ்கரன்,சீனிமாவடிகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் சுந்தர்,பொருளாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயத்திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது, தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் கொடியேற்று விழாவை தொடங்கி வைக்கிறார்”: பங்குத்தந்தை குமார் ராஜா பேட்டி:தூய பனிமய அன்னையின் 427 ஆம் ஆண்டு பெருவிழா வானது ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்டு 5 திங்கட் கிழமை வரை நடைபெற உள்ளது.ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் கொடியேற்று விழாவை தொடங்கி வைக்கிறார்
இவரோடு இணைந்து பெருவிழா நாட்களை திருச்சி முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா கோட்டாறு ஆயர் நசரேன் தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆகியோர் கலந்து உண்டு சிறப்பிக்கிறார்கள்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்டு 5 ஆம் தேதி அன்னையில் திருவுருவப்பவனி நடைபெற உள்ளது.இந்த ஆண்டு தூயபனிமய மாதா பேராலயத்திருவிழா பிளாஸ்டிக் இல்லாத, பாதுகாப்பான திருவிழாவாக இருக்கும்.திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை, குமார்ராஜா,துணை பங்குத்தந்தை கிங்ஸ்டன், ஜேசுராஜா, சகோ மைக்கேல் மற்றும் பங்கு மேய்ப்புப் பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர். இந்த திருவிழாவை காண வரும் பக்தர்களை அன்புடன் அழைக்கப்படுகின்றனர் “எனக் கூறினார்
தூத்துக்குடியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் பங்கு பெறும் ” BUYER – SELLER MEET ,வரும் 25-ம் தேதி நடைபெறும் ” துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், தகவல்.இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், செயலாளர் ராஜ் செல்வின், ஆகியோர் கூறுகையில்:-
துடிசியாவின் வாங்குவோர் – விற்போர் சந்திப்பு இம்மாதம் 25-ஆம் தேதி தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் S.நாகராஜன் I.A.S., முன்னிலையிலும், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை தலைவர் T.K. ராமசந்திரன் IAS., தலைமையில் நடைபெறுகிறது.தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கமானது ஒர் பதிவு செய்யப்பட்ட, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்த சங்கமானது 1991 முதல் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது இந்த சங்கத்தில் 450 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து உறுப்பினராய் உள்ளனர்.குறிப்பாக உப்பு உற்பத்தி, உணவு உற்பத்தி, கனரக தளவாட உற்பத்தி, அச்சுத் தொழில் இரசாயனம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் பதிவு செய்து உள்ளன.துடிசியா’ என்னும் இந்த அமைப்பானது தொழிற்துறைகளின் தேவைகள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது மாவட்டத்தில் சிறு தொழில் வலுப்பெற உதவி புரிந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் உள்ள தொழில் முனைகள் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நமது மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை அடையாளம் காணுதல்,பயிற்சி அளித்தல் மேலும் அவர்கள் தொழில் தொடங்கி சிறப்புற நடத்திட தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்கிறது.
எங்களது துடிசியா சங்கத்தின் மணி மகுடமாக பெரும் நிறுவனம் / பொது நிறுவனம் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் பங்கு பெறும் ” BUYER SELLER MEET , DSF GRAND PLAZA-ல்25/072019-ம் தேதி நடைபெறஉள்ளது.இந்த சந்திப்பின் நோக்கமானது பெரும் நிறுவனங்களின் தேவைகள், பொருட்கள் வழங்கல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செய்ய கூடிய வேலைகள். பற்றிய விவரங்களை எடுத்துரைப்பர்.இதில் பங்குபெறும் நமது மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதின்படி புரிந்துணர்வு ஏற்படுத்தப்படும்.
இதில் நமது மாவட்டத்திற்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்குழு சந்திப்பின் ஏற்பாடுகள் துடிசியா அமைப்பின் தலைவர் திரு நேரு பிரகாஷ், செயலாளர் ராஜ் செல்வின் மற்றும் SKSC.N தர்மராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் செயல் திட்டத்தோடும் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்போடும் சீரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த தொழில் சங்க விழாவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குனர் S.நாகராஜன் I.A.S.,முன்னிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தலைவர் T.K. ராமசந்திரன் IAS., தலைமையில்,பாளையங்கோட்டை பெல் பின்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குனர் குணசிங் செல்லதுரை ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர்.இந்த சங்கமத்தில் ஸ்பிக், டாக், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம், என். டி பி எல். கோஸ்டல் எனர்ஜன், மகா சிமென்ட் இர்கோனியம் காம்பெளக்ஸ் வி வி டைட்டானியம். டி.சி.டபுள்யு, ஷிபா பிளவர்ஸ், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் போன்ற கனரக தொழிற் சாலைகள் பங்கேற்கின்றனர் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் இந்த தொழில் சங்க விழாவில் கலந்து கொண்டு பயனுற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறினார்
சந்திராயன்-2 செயற்கைக்கோள் செப்டம்பர் 7-ம்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் – மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேட்டிதூத்துக்குடி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ சமீபத்தில் சந்திராயன்-2செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த திட்ட பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
தொடர்ந்து விஞ்ஞானிக்கு மூக்கையா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சந்திராயன்-2செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 6 ஆயிரம் கிலோமீட்டர் அதிகமான தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஏற்கனவே திட்டமிட்டிருந்த நேரத்தில் கடைசி கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு சந்திராயன்-2 செயற்கைக்கோள் மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-2 செயற்கைக் கோளானது மூன்று நிலைகளில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் முதல் நிலையான ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் எனும் நிலை தனியே பிரிந்து நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 2.43 மணிக்கு தரையிறங்கும்.அதனைத் தொடர்ந்து அதிலிருந்து ரோவரானது தனியே பிரிந்து நிலவில் 500 மீட்டர் பரப்பளவில் ஆய்வினை மேற்கொள்ளும். லேண்டர் பகுதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதும் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு சமிக்கை அனுப்பும். அதனைத் தொடர்ந்து நிலவின் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருள் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. வருங்கால திட்டங்களுக்கும் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி,ஜிஎஸ்எல்வி மார்க்-3 உள்ளிட்ட மூன்று எஞ்சின்களை கொண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்.அடுத்த கட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான “ககன்யான்” திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட உள்ளது என்றார்.பேட்டியின் போது அவருடன் இஸ்ரோ குழும இயக்குனர் (குரூப் டைரக்டர்) D.P. சுதாகர், இஸ்ரோ தலைமை அதிகாரி (பொது நிர்வாகம்) தங்க மாரியப்பன், இஸ்ரோ எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவர் கணேசன், செயலாளர் தனபாலன் ஆகியோர் உடனிருந்னர்
A.p.j.அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி ரங்கோலி போட்டி வினாடி வினா போன்றபல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் சந்திராயன் 2 வெற்றியை பறைசாற்றும் விதமாக 5ஆம் வகுப்பு மாணவி ரக்சிகா சந்திராயன் 2 கோல மாவு மூலமாக சந்திராயன் வின்கலத்தை வரைந்து காட்டினார்
அந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதுஷா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர் மற்றும் முகைதீனீயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவித்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் .ஆங்கிலத்துறை தலைவர் செய்திருந்தனர்
யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட பயன்தரும் மரங்களை மீண்டும் உருவாக்கும் விதமாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் மாங்கன்று வழங்கிய நிகழ்வு, கலந்து கொண்டவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.பொதுவாக, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, திருமண வீட்டார் சார்பில் நன்றி தெரிவித்து தேங்காய், பழம் அடங்கிய தாம்பூல பை மற்றும் இனிப்புகள் வழங்குவது வழக்கம்.
ஆனால், இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், புது மணத் தம்பதியினரால் வழங்கப்பட்ட மாங்கன்றும், வழங்கி ய தற்கான காரணமும் திருமணத்தில் கலந்து கொண்டோரின் மனதை பெரிதும் கவர்ந்துள்ளது.இதுகுறித்த விவரம் வருமாறு; இலங்கையின் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த ரோஷன் வீரராஜன் – ரோஷாந்தி மாசிலா மணி ஆகியோரின் திருமண வைபவம், யாழ்ப்பாணத்திலுள்ள டில்கோ ஹோட்டலில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், உற வினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து நடைபெற்ற அறுசுவை விருந்து உபசரிப்பிற்கு பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மணமக்கள் மாங்கன்றுகளை பரிசாகவழங்கினர். இதுகுறித்து புதுமணத் தம்பதியினர் கூறுகையில், “கடந்த 30 வருட யுத்தத்தின்போது இலங்கையில் பல பயன்தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.தற்போதும், காடழித்தல் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகளால் பல்வேறு இடங்களில் ஏராள மான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், எமது சூழலின் சமநிலை பாதிக்கப்படுவதுடன் புவி வெப்பமயமாதல், மழைப் பொழிவு குறைவு போன்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டு வருகின்றது. மேலும், எங்களின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.
இவ்வாறான நிலைமைகளை கருத்தில்கொண்டு, எங்கள் திருமணத்தை முன்னிட்டு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதையடுத்து, மரக்கன்றுகளை வழங்கி னால் சிறப்பாக இருக்கும் என நினைத்து, எங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்று வழங்கினோம்.
குறிப்பாக இதில் மாங்கன்றுகளை வழங்கியதன் நோக்கம் என்னவென்றால், அனைவருடைய வாழ்வும் மாங்கனியைப் போன்று இனிமையாகவும் சுவையாகவும் மற்றவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையிலும் அமைய வேண்டும் என்பத ற்காகவே” என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். புதுமணத் தம்பதியரின் இந்தச் செயலும், அதற்கான காரணமும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வு சர்வ சாதார ணம் என்றபோதிலும், இலங்கையைப் பொருத்தவரை இது போன்ற மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு அரிதாகவே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்
கோவை அருகே, தோட்டத்தில் நுழைந்த பாம்பை வளர்ப்பு நாய்கள் ஆக்ரோஷமாக கடித்துக் குதறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபம் பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர், தனது குடும்பத்தினரோடு தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அத்துடன், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக மூன்று நாய்களையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி, தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் வெட்டும் பணி நடந்துள்ளது. சிவபிரகாஷின் தந்தை ராமலிங்கம் அந்த பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, மஞ்சள் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.இதை கவனித்த மூன்று நாய்களும் அந்த பாம்பை துரத்திச் சென்றுள்ளன. நாயிடமிருந்து தப்பிக்க நினைத்த பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்றுள்ளது. தொடர்ந்தும் அந்த பாம்பை விரட்டிய நாய்கள், புதருக்குள் புகுந்த பாம்பை வெளியே இழுத்து வந்தன. தொடர்ந்து அவைகள் ஆக்ரோஷமாக கடித்துக் குதறியதில், சாரைப்பாம்பு உயிரிழந்தது.இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் முத்தையா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்..
அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நிலக்கோட்டை ஒன்றியத்தில் நடக்கும் கிராம சபைகள் குறித்து கிராம மக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை என கூறியும், வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிராமசபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுவை கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உடனடியாக இந்த தண்டோரா மூலமாக இருக்கின்ற கிராம சபை கூட்டத்தை வைக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் குமார், ஒன்றிய நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம. ராஜா
You must be logged in to post a comment.