Home செய்திகள் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் எக்ககுடி கண்மாய் புனரமைப்பு பணி

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் எக்ககுடி கண்மாய் புனரமைப்பு பணி

by mohan

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எக்ககுடி கிராமத்தில் உள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.

எக்ககுடி கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் கண்மாய் கரையை பலப்படுத்துதல், 4-வது மடையை மீளக்கட்டுதல் மற்றும் கலுங்குகளை பராமரித்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கண்மாய் மூலம் 104.41 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவர்.ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது தமிழ்த முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ்,ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்பிடிப்பு பகுதிகளை தூர் வாருதல், நீர் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல்,புதிதாக கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து பயிற்சி அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையை குறியீடு செய்திடவும்.ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ஆம் மற்றும் 3-ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் பி.ராஜேந்திரன், பி.ஆனந்த்பாபுஜி உட்பட அரசு அலுவலர்கள்S எக்ககுடி கண்மாய் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் உடனிருந்தனர். .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!