16
ராமநாதபுரம் காயக்காரி அம்மன் கோயில் 34 ஆம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் பூக்குழி உற்சவம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதனையொட்டி ஜூலை 23, 24, 25 தேதி இரவு அக்னி சட்டி கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு ஊர்வலம் செல்கிறது.
ஜூலை 26 இரவு மாவிளக்கு பூஜை, ஜூலை 27 சிறப்பு அபிஷேகம், ஜூலை 28 இரவு பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஜூலை 31 இரவு பூக்குளி உற்சவம் நடைபெறுகிறது. ஆக.1 இரவு வாண வேடிக்கைகளுடன் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆக 29, 30 தேதிகளில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அறங்காவலர் வி.கருணாகரன் மற்றும் கே.பாலசுப்ரமணியன், கே.கவுதம் ஆகியோர் உள்ளட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
You must be logged in to post a comment.