வேலூர் பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீபலட்சுமி போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்
கே.எம்.வாரியார்
வேலூர் பாராளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீபலட்சுமி போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்
கே.எம்.வாரியார்
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கே.வி.குப்பத்தில் தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் ஏ, சி.சண்முகம் திறந்து வைத்தார்.
இதில் தொகுதி எம்எல்ஏ லோகநாதன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் .முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வி பாமக நிர்வாகிகள் சண்முகம், இளவழகன். எம் ஜி ஆர் மன்றம் எத்திராஜ்நாயுடு, மீனவர் அணி சேட்டு அவைத் தலைவர் தேவன், ஊராட்சி செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்கில் அமைந்துள்ள ஹாஜி கருத்தா ராவுத்தர் ஹௌதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளையின் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் B.B.A இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் பல்வேறுபட்ட திறன்களுக்காகபாராட்டுச்சான்றிதழ்பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் வில் மெடஸ்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி,முதன்மைச்செயலர் Dr.தஹ்மிதா பானு ,ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசு பேருந்து முதல் ஆட்டோ வரையில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம் கண்டுகொள்ளாத வட்டார போக்குவரத்து அலுவலர் இன்று காலை பைபாஸ் சாலையில் கள ஆய்வு மேற்கொண்டதில் பல அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் படியிலேயே தொங்கிய செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் ஆட்டோக்களில் பள்ளி மாணவ மாணவிகளை முன் இரு கைகளையும் மற்றும் ஒரு ஆட்டோக்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டு செல்லும் அவல நிலை ஏற்படுகிறது மேலும் அனுமதி இல்லாமல் இயங்கும் பள்ளி கல்லூரி வாகனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா என தெரியவில்லை இதற்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் பள்ளி நிர்வாகம் தனது மாணவ மாணவர்கள் எவ்வாறு வருகிறார்கள் அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் ஆட்டோவில் அல்லது வேன்களில் முறையாக அனுமதி உள்ளதா என தணிக்கை செய்து அதை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் இதுகுறித்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் நன்றி சிறப்பாக இருக்கும் என பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுக்கிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
ஜோலார்பேட்டை அருகே 1500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் அடுத்த புள்ளானேரி Uகுதியில் எரிசாராயம் Uதுக்கி வைத்து இருப்பதாக திருப்பத்தூர் மதுவிலக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் 42 கேன்களில் வைத்திருந்த 1470 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றினர். ஒருவன் தப்பி ஓடினான். மேற்கொண்டு போலீசார் எரிசாராயத்தை கைப் Uற்றி விசாராணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தங்கள் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி இவர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறார்காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகன் தனுஷ் ஆகியோருடன் காஞ்சிபுரம் சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே காளிமுத்து என்பவர் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக இளம்பரிதி சரஸ்வதி தனுஷ் வந்த இருசக்கர வாகனம் காளிமுத்து மீது மோதி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதிய விபத்துக்குள்ளானது இதில் பலத்த காயமடைந்த நால்வரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் கொண்டு செல்லும் வழியிலேயே இளம்பருதி தனுஷ் ஆகியோர் இறந்துவிட்டனர் மேலும் சரஸ்வதி காளிமுத்து ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கே.எம்.வாரியார்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முமீன்கான். மகன் முஹமது யூசுப், 13. எட்டாம் வகுப்பு படித்து வந்தார். வார விடுமுறை நாளான (07.7.2019) மாலை, பொன்குளம் கிராமத்தில் ஊரணியில் குளிக்கச் சென்றார். அப்போது ஊரணி சகதியில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூத்துக்குடி சவேரியா ர்புரத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவருக்கு பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே தனியார் சொகுசு பேரூந்து சாலையில் கவிழ்ந்து விபத்து, ஒரு பெண் உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் காயம். விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி.
ராஜா, நிலக்கோட்டை
ஆனித் திருமஞ்சன திருவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் துவங்கியது.ஸ்ரீநடராஜ மூர்த்தி சிவகாமசுந்தரி அம்மாள் தனித்தனி தேர்களில் வலம் வருகின்றனர். முதலில் வினாயகர் தேர், 2-வது சுப்பிரமணியர் தேர் இழுத்து செல்லப்படுகிறது.
கே.எம்.வாரியார்
ராமநாதபுரம் – மதுரை, கமுதி-மதுரை வழித்தடத்தில் தலா 2 , ஏர்வாடி – மதுரை, ராமேஸ்வரம் – திருச்சி, சாயல்குடி – மதுரை வழித்தடத்தில் தலா ஒரு பேருந்து, ராமேஸ்வரம் – மதுரை, பரமக்குடி – திருச்சி வழித்தடத்தில் தலா 4 என 15 பேருந்துகளின் இயக்கத்தை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன்,மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் தொடங்கி வைத்தார் .அமைச்சர் மணிகண்டன் கூறுகையில், சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி நடந்த விழாவில் அரசு போக்குவரத்து கழகத்தின் 500 பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்துகள் உள்பட 30 பேருந்துகள் காரைக்குடி மண்டலத்திற்ரு ஒதுக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு குறித்து மின் துறை அமைச்சர் தங்கமணியிடம் வலியுறுத்தினேன். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் மின் பாதை சீரமைப்பு பணி முடிந்து மின்சாரம் உடனடியாக விநியோகிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகரில் போதிய மின்சாரம் விநியோகம் செய்ய பட்டணம் காத்தான் பகுதியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில்அரசு மருத்துவக் கல்லூரி கட்டாயம் அமையும் என்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர்,அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலதுணை மேலாளர்கள் ஆர்.சிவலிங்கம் ( வணிகம் ), கே.நலங்கிள்ளி (கோட்டம்), மைக் கேல்பட்டணம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி மற்றும் அரசு போக்குவரத்து கழக பணியாளர் கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி 50 வது வார்டு நெல்பேட்டை,சுங்கம் பள்ளிவாசல் தெரு,காயிதேமில்லத்நகர்,முனிசாலை ஆகிய பகுதிகளில் அள்ளும் கழிவு குப்பைகளை மதுரை மாநகராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றில் கொட்டும் அவலநிலை.. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மதுரை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்
மயிலாடுதுறை சந்திப்பிற்கு அரை கிலோமீட்டர் முன்பாக கோவையில் இருந்து மயிலாடுதுறை சென்றுகொண்டிருந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இதில் எந்த ஒரு பயணிக்கும் காயம் இல்லை என முதற்கட்ட தகவலில் தெரியவருகிறது ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என பயணிகள் தெரிவிக்கின்றனர் மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் தடம்புரண்ட ரயில் மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை ளை இணைந்து நடத்திய மாபெரும் தன்னார்வ ரத்ததான முகாமில் இந்த பகுதி இளைஞர்கள் 40க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தனர்
இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் பாபு ,ரமேஷ்ராஜா மற்றும் வாடிப்பட்டி பகுதி பொறுப்பாளர் நாகமுத்துராஜா தலைமையில் நிகழ்வு நடைபெற்றது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பாக உறுப்பினர் விமல் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மைக்கேல் ஆலயத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட சமூக தணிக்கையாளர் சித்திக் அலி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கோட்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:: கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
. நிலக்கோட்டை ஒன்றியம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சிப் பகுதியாக உள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் சரிந்த நிலையில் உள்ளது. இதனால் விவசாயப்பணி வேலைகளும் முற்றிலுமாக பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் என்பதை மாற்றி 200 நாட்களாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிராம பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர், வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
வேலூரில், கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் மீண்டும் வேட்பாளாக நிறுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு ஓட்டு போடுவதா, வேண்டாமா என, மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ‘நகைக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து’ என, பொய்யான பிரசாரத்தை நம்பி, தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டு போட்டு விட்டனர். ஆளும் கட்சி எம்.பி., க்களால் மட்டுமே வளர்ச்சி திட்டங்களை கொடுக்க முடியும். உருது மொழியில், பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், இஸ்லாமிய அகாடமி அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். என்னை, எம்.பி., யாக தேர்வு செய்தால் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகப்படுத்துவது, ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். மரம் வளர்ப்பது, குடிநீர் பிரச்னை தீர்ப்பது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
கே.எம்.வாரியார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக, ஸ்தபதி முத்தையா அளித்தவாக்கு மூலம் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர். ஸ்தபதி முத்தையா, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜா உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடந்த ஆண்டு ஜூனில் பழனி கோவிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். பழனி பயணியர் விடுதியில். அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பழனியில் பரபரபான சூழ்நிலை நிலவுகிறது.
தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி ,முந்திரி நடவு செய்தனர்.
மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலை மையில் களப் பயணம் சென்றனர். மாணவர்களை அரசு தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் ஓவியா வரவேற்றார்.மாணவர்களுக்கு முதலில்மல்லிகை,கத்தரி,மாமரம்,புளியமரம்,முந்திரி,பூவரசு,கொய்யா,அரளி போன்ற செடிகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார்.குழி த்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல்,மென்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து செய்தல் எப்படி என்பதை நேரடியாக விளக்கி னர்.மாணவர்களும் இதனை அங்கு நேரடியாக செய்து பழகினர். அனைத்து மாணவர்களும் சேற்றில் இறங்கி முந்திரி நடவு செய்த னர்.ஆசிரியை செல்வமீனாள் பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து சென்றார் .இன்றயை நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்களை நேரடி களப் பயணத்தின் வாயிலாக விழிப்புணர்வு அடைய செய்தது மாணவர்க ளிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.அனைத்து மாணவர்க ளுக்கும் டிராக்டர் ஓட்ட கற்று கொடுக்கப்ப ட்டது .டிராக்டர் ஒட்டியது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்று மாணவர்கள் கூறினார்கள்.அலுவலர்கள் வெங்கடேசன், சீனிவாசன்,மனோஜ் ஆகியோரும் தோட்டக்கலை துறையை பார்ப்பதற்கு உதவியாக இருந்தனர்.அனைத்து மாணவர்களுக்கும் இயற்கை உணவாக முருங்கை கீரை சூப் வழங்கப்பட்டது.
செய்தி வி காளமேகம்
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய திரு முகிலன் அவர்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முகிலனை கண்டுபிடித்தது ஆந்திரா போலீஸ் திருப்பதி ரயில் நிலையத்தில்,
முகிலனை போலீசார் அழைத்துச் சென்றது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு. முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு, தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள்.. முகிலனை கண்டுபிடிக்கும் பணியில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர்
செய்தி வி காளமேகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி . கே . என் . ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர் .தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் . ஆர் . பி . உதயகுமார் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று ( 6 – 7 – 2018 ) வழங்கினார் , சட்டமன்ற உறுப்பினர்கள் . மாணிக்கம் ( சோழவந்தான் ) , சரவணன் ( மதுரை தெற்கு ) ஆகியோர் உடன் உள்ளனர் ,
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.