இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியினை மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை, எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் மயமான 205 மீனவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முதல்வர் அளித்த உறுதி அடிப்படையில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மீனவர்களுக்கான நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு மீட்பு மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக மோடி, அண்ணாமலை, என பலரும் வாக்குறுதி அளித்த நிலையில் அதற்கான நடவடிக்கையை இதுவரை மத்திய அரசு எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வசம் உள்ள படகுகளை மீட்டு கொடுக்காமல் மீனவர்களை ஏமாற்றி விட்டார். எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது அவர்களது வாழ்வாதாரம் மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை என இதன் மூலம் தெரிய வருவதாக அனிதா ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் புதிதாக அமைய உள்ள INDIA கூட்டணி தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டி இலங்கை வசமுள்ள படகுகளை உடனடியாக மீட்கவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும் அதற்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுப்பார் என்றார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (இராமநாதபுரம்) , நாசர்கான் (இராமேஸ்வரம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மீன்வளத்துறை பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் , ஜெயக்குமார் சிவக்குமார் , அப்துல்காதர் ஜெய்லாணி, மீனவர் நல வாரிய உறுப்பினர் என்.ஜெ.போஸ், பி.சேசு ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..
by Askar
written by Askar
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..
உலகத்தின் மொத்த செல்வத்தையும் வங்கிகள் தங்களது பிடியில் மூலதனமாக வைத்துக் கொண்டு மதிப்பில்லாத காகிதப் பணத்தை அடித்து வட்டிக்கு விடுவதுதான் இன்றைய முதலாளித்துவ பொருளாதார பரிவர்த்தனை.
வட்டித் தொழில் செய்யும் மரபுசார்ந்த வங்கிகளுக்கு மாற்றாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இஸ்லாமிய வங்கி என்ற ஒரு கருத்தை உருவாக்க வேண்டிய நெருக்கடி முஸ்லிம் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. அப்போது தொடங்கி இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் கடந்த 70 ஆண்டுகளாக நிதானமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 72 நாடுகளில் சுமார் 550 இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.
இன்றைய இஸ்லாமிய நிதிச் சந்தையின் சொத்து மதிப்பு 4 டிரில்லியன் டாலர்கள்.உலக செல்வத்தில் 1 சதவிகிதம். (இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் மதிப்பைக் காட்டிலும் 7 மடங்கு கூடுதல்) ஆண்டுக்கு 17 சதவிகித அளவில் வளர்ச்சியடைந்து 2026 இல் இஸ்லாமிய நிதித் துறையின் சந்தை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கு வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதிப்பு மிகுந்த பொறுப்புகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் நம் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸா மாணவர்களுக்கு இதுஒரு நம்பிக்கை மிகுந்த இலக்காக இருக்கும். ஆலிம் கல்வி முடித்த அரபி மற்றும் ஆங்கிலப் புலமையுடைய இளைஞர்கள் இஸ்லாமிய நிதித் துறையில் ஆராய்ச்சிக் கல்வியை (PhD) சர்வதேச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இதுபோன்று உயர்ந்த இலக்கை மிகத் துல்லியமாக குறிவைத்து பயணிப்பவர்கள் கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவிகொண்டு பயணித்தால் தான் இலக்கை இலகுவாக எட்ட முடியும்.
அதேபோல அரசு உதவிபெறும் முஸ்லிம் கலை அறிவியல் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களின் சங்கங்கள் 6 அரபு நாடுகளிலும் துடிப்புடன் இயங்குகின்றன.
தாங்கள் படித்த கல்லூரிகளில் வணிகம் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு இப்படி ஒரு தொலைநோக்கு இலக்கை நிர்ணயித்து இந்த அமைப்புகள் பயிற்சியளித்தால், இந்த ஒரு வேலையை மட்டும் தொய்வில்லாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு செய்தால் அரபு நாடுகளின் அனைத்து இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகமானோர் தமிழக முஸ்லிம் பிள்ளைகளாக இருப்பார்கள்.
உள்நாடு வெளிநாடுகளில் எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு கடனுதவியளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் இடைவெளி விடாமல் நம் பிள்ளைகள் அமர வேண்டும். தமிழகத்தின் மிக முக்கியமான திட்டங்களுக்கு கடனுதவியளிக்க முடியும்.
அரபுநாடுகளில் உள்நாட்டு மக்களை வேலையில் அமர்த்தும் சட்டங்கள் என்னதான் வந்தாலும் அறிவுக்கும் திறமைக்கும் உயர்ந்த அணுகுமுறைக்கும் இந்த உலகில் எல்லைகடந்த ஒரு ஈர்ப்பும் மதிப்பும் எப்போதும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
மட்டுமல்லாமல் அரபுநாடுகளில் மக்கள் தொகை வெகுவேகமாக குறைந்து வருகிறது. செல்வமும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலர் முன்பின் இருப்பதும், சவுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிரமாண்டமான தங்கச் சுரங்கம் ஆண்டுக்கு 8 ஆயிரம் கிலோ தங்கத்தை வெளியே தள்ளப் போவதும் சேர்ந்து இனி அடுத்த 50 – 100 ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகள் பொருளாதார வல்லமை மிக்கதாக நீடிக்கப் போகின்றன என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
இந்த பொருளாதார வளர்ச்சிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து கவனித்து அதை நமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு அமைப்பை (R&D) உருவாக்கி செயல்படுத்தினால் உம்மத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.
வீட்டில் வளரும் உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் இந்த செய்திகளை அப்படியே காட்சிப்படுத்துங்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..
by Askar
written by Askar
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..
தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான். பெரியார் போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை. திடீரென ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது”
-காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..
by Askar
written by Askar
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வண்ணம் நடைபெறும் கியான் வாபி மசூதி மீதான நடவடிக்கைகளை கண்டித்து,
கியான் வாபி மசூதியை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை பாதுகாக்கவும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும், பரவி வரும் வெறுப்பு பிரச்சாரங்களை வேரறுக்கவும், நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்களை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தகவல்.
கே. நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..
by Askar
written by Askar
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..
சோழவந்தானில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 55வது நினைவு நாள் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன், வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர் முருகேசன் ஆகியோர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் பொதுக்குழு நாகராஜ்மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி எட்டாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் ராஜாகுருவித்துறை விஜய் பாபு, தண்டாயுதம் என்ற கணேசன், சோலைகண்ணன்,ஜெயபிரகாஷ கவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பிரதிநிதி மணிகண்டன்ராமு,கென்னடி சேதுகண்ணன் பேட்டை மாரி பாலா பூக்கடை காமாட்சி அழகர் செந்தில் பூசாரி மாரிமுத்துஉள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..
by Askar
written by Askar
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..
அதிமுகவின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் ்பி உதயகுமார் அவர்களின்பரிந்துரையில் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து வாடிப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணாவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் இதில் வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், , மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர்கள் வாடிப்பட்டிஅசோக் சோழவந்தான்முருகேசன் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி முன்னாள் கவுன்சிலர் பெருமாள் துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் குருவித்துறை விஜய் பாபு, சோழவந்தான் பேரூராட்சிகவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பேட்டை மாரி உள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது..
by Askar
written by Askar
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது..
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் பேரூராட்சித்
தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முன்னாள் செயலாளர் முனியாண்டி, கோயில் செயல் அலுவலர் இளமதி , பணி நியமனக்
குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி ,முத்து செல்வி ,சதீஷ், கொத்தாலம் செந்தில்,
நிஷா கௌதமராஜா, செல்வராணி, சிவா நிர்வாகிகள் சங்கங்கோட்டை ரவி, சந்திரன், மில்லர் மற்றும் பணியாளர்கள் பூபதி, வசந்த்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழநி தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
by Askar
written by Askar
தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனிமுருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை ,சன்னதி வீதி ,அடிவாரம் வழியான மலைக்கோவலுக்கு சென்றனர். இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும் ,சிறுவர்களுக்கு வேடம் இட்டும் பெண்கள் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தியும் ,முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறித்த போலீஸ் கைது!-கோவையில் பரபரப்பு..
by Askar
written by Askar
வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் போலீஸ்! கோவையில் பரபரப்பு..
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சபரிகிரி என்ற காவலர் கைது, கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சபரிகிரி, பொள்ளாச்சி சென்று வழிப்பறி செய்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனி – புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? கொங்கு மக்கள் முன்னணி, வலியுறுத்தல்..
by Askar
written by Askar
பழனி – புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? கொங்கு மக்கள் முன்னணி, வலியுறுத்தல்..
“பழனி -புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் அமைந்துள்ளது இந்த சாலையின் வழியாகத்தான் பழனியில் இருந்து தாராபுரம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் நாள்தோறும் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பழனி நகருக்குள் நுழையும் முக்கிய பகுதியில் இந்த கேட் அமைந்துள்ளதால்
நாள்தோறும் ரயில் வருகிற நேரங்களில் இந்த கேட் மூடப்படுகிறது அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும்நிலை ஏற்படுகிறது. பழனி நகரம் சுற்றுலா தளமாகவும், ஆன்மீக தளமாகவும் இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் வந்து செல்வதால் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. அதன் முதல் நடவடிக்கையாக புது தாராபுரம் சாலை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பழனி வழியாக தற்பொழுது தினமும் 10 முதல் 12 ரயில்கள் பழனி -தாராபுரம் ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. இதில் கேட் மூடப்படும் போது நிற்கும் சில நிமிடங்களில் சாலையின் இரு புறங்களிலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடியும்.
பழனியில் நகருக்கு வெளியேயும், நகருக்குள்ளும் இந்த வழியாக ஆம்புலன்சுகள் அதிகம் செல்வது உண்டு. இதில் ரயில் வருகிற நேரத்தில் கேட் மூடப்படும் போது ஆம்புலன்சுகள், வாகனங்களோடு வரிசையில் நிற்கும். அதனால் நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல் ரயில் கடந்து சென்ற பின் கேட் திறக்கப்படும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்வதும் உண்டு. அதேநேரத்தில் பஸ்கள், கார்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களும் செல்லும். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அவ்வழியாக பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் விவசாயிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்
பழனியில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் பழனி – தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள். அதன்பின் அறிவிப்போடு நின்றுவிடும் ஏற்கனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அதன்பின் அதுபற்றி எதுவும் அறிவிப்பு இல்லை! இதுவரை எந்த பணிகளும் துவங்கப்படவும் இல்லை! ஆகவே, மத்திய, மாநில அரசுகளும், பாரளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு பழனி – புதுதாராபுரம் சாலை ரயில்வே மேம்பால பணியை விரைந்து செயல்படுத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, காலம் தாழ்த்தாமல் பணியை முழுமையாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கொங்கு மக்கள் முன்னணியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
சி.ஆறுமுகம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொங்கு மக்கள் முன்னணி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இடிந்து விழுந்த கழிவறை, பழநியில் சமூக ஆர்வலர்கள் பலர் எழுப்பும் கேள்விகள்.? விடை சொல்லுமா நிர்வாகம்.?
by Askar
written by Askar
பழனி பேருந்து நிலையம் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை நகராட்சி தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையின் கழிவறை பகுதி இடிந்து விழுந்தது. இருப்பினும் யாருக்கும் எவ்வித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நகராட்சி விடுதியின் கட்டிடப் பராமரிப்பு பணி நடைபெற்றது. தரமற்ற பணி காரணமாகவே கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், மேலும் இதுபோல சம்பவங்கள் நடைபெற்றால் பொதுமக்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. நகராட்சி விடுதி கட்டிடத்தின் பராமரிப்பு பணி முறையாக நடந்துள்ளதா என்று ஆய்வு செய்து, மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
by Askar
written by Askar
அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 02-02-2024 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கிஷோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சமயங்களில் திருமணத்தின் போது ஒரு பெண் தங்கத்தால் செய்யப்பட்ட திருமாங்கல்யம் அணிவது ஒரு வழக்கமான கலாச்சாரத் தேவையாகும். மேலும் பெற்றோர்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார பின்னனியின்படி, திருமண விழாவைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயதுவரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித்திட்டங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியும். 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ. 50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண உதவித்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம் / பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஈ.வெ.ரா.மணியம்மை விதவை மகள் திட்டத்தில் 316 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண உதவித்திட்டத்தில் 48 பயனாளிகளுக்கும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 394 ஏழை பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 3152 கிராம் தங்க நாணயம் (ரூ.1,93,94,256) மதிப்பீட்டில் மற்றும் ரூ.1,53,25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்ததாவது, பெண் கல்வியை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக சீர்திருத்த திருமணங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக திருமண உதவி திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், அன்னை தெரசா திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பள்ளிப்படிப்பு முடித்த பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25.000 நிதிஉதவியும். பட்டப்படிப்பு முடித்திருந்தால் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, நமது தென்காசி மாவட்டத்தில் இன்று 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.1,53,25,000 திருமண நிதி உதவியும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் போன்ற திட்டங்களின் மூலம் பெண்களின் உயர் கல்விக்கு வழிவகுப்பதுடன், பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்களின் மூலம் பயன்பெற்று பெண்களின் சமூக பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடையத்தில் 42 பயனாளிகளுக்கும், செங்கோட்டையில் 36 பயனாளிகளுக்கும், குருவிகுளத்தில் 12 பயனாளிகளுக்கும், தென்காசியில் 75 பயனாளிகளுக்கும், சங்கரன்கோவிலில் 23 பயனாளிகளுக்கும், மேலநீலதநல்லூரில் 12 பயனாளிகளுக்கும், கடையநல்லூரில் 37 பயனாளிகளுக்கும், ஆலங்குளத்தில் 53 பயனாளிகளுக்கும், கீழப்பாவூரில் 54 பயனாளிகளுக்கும், வாசுதேவநல்லூரில் 50 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் என மொத்தம் 394 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, ஒயிலாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிழ்ச்சிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. மதிவதனா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஒன்றிய குழுத்தலைவர் சேக் அப்துல்லா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம். கனகராஜ் முத்துப்பாண்டியன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி செல்வி. ஜெயராணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன்!-அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
by Askar
written by Askar
“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…” – உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல் மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்..
அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என உடன் பிறப்புக்கு கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள மடல் பின்வருமாறு:
“என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்களே நிறைந்திருக்கிறீர்கள். இந்த மடலை நான் எழுதும்போது, உடன்பிறப்புகளாம் உங்ளுக்கு இப்போது நேரம் மதியம் 12 மணி. உங்களில் ஒருவனான எனக்கு காலை 7.30 மணி. ஆம்.. இந்தியாவிலிருந்து நாலரை மணி நேர வேறுபாடு கொண்ட ஐரோப்பாவின் ஸ்பெய்ன் நாட்டில் இருக்கிறேன், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக!
ஜனவரி 27-ஆம் நாள் சென்னையிலிருந்து ஸ்பெய்ன் நாட்டிற்கு புறப்படும் நிலையில், ஊடகத்தினரிடம் பேசும்போது, “தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைவதற்கு கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த ஆண்டு ஸ்பெய்ன் நாட்டிற்குச் செல்கிறேன்” என்று தெரிவித்தேன். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் – ஜப்பான் பயணத்தின் விளைவாக கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கவுள்ள தொழில்கள், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இவற்றையும், ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியையும் சுட்டிக்காட்டினேன்.
இதோ, இங்கே ஸ்பெய்ன் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கானத் தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெய்னில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான்.
“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…” – உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெய்ன் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெய்ன் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன. நம்முடைய தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெய்ன் நாட்டிலும் எருது ஓடும் போட்டி உண்டு. நம் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, அந்நாட்டு மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிஷ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிஷ் பெற்றிருக்கிறது. ஸ்பெய்னில் எல்லா இடங்களிலும் ஸ்பானிஷ் மொழியே முதன்மை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டிற்குச் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் நிலையை இருநாடுகளிலும் கண்டபோது, நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் – நம் உயிருக்கும் மேலான இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கை நினைவுக்கு வந்தது. அந்த அண்ணனுக்கு பிப்ரவரி 3 அன்று நினைவு நாள்.
வங்கக் கடலோரம் தன் கழகத் தம்பியாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுடன் நிரந்தரத் துயில் கொள்ளும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. “எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது” என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், இனமானப் பேராசிரியர் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார்.
உலக நாடுகளின் வரலாற்றை கழகப் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தன் தம்பியருக்கு எடுத்துரைத்து அரசியல் தெளிவு தந்த அறிவுலக மேதை அவர். கழகத்தின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக்கி, உலக வரலாறுகள் பற்றிய வகுப்பெடுத்தவர்கள் நம் அண்ணாவும் அவர்தம் அன்புத் தம்பியரும்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன. ஜனவரி 21-ஆம் நாள் சேலத்தில் எழுச்சிமிகு உணர்ச்சி மாநாடாக நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடும் மாநில உரிமை மீட்பு முழுக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகப் பொருளார் திரு.டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழமைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.
சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், தங்கை கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையிலான நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் கழகத்தினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது கழக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை
இந்தியாவின் குடியரசு நாளான ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் கழக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது. இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே தலைவர் கலைஞரின் செயல்திட்டம்.
மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல். மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். அந்த இலக்கை திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.
நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்.
அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..
by Askar
written by Askar
இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா இராயப்பன்பட்டியில் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா சிறப்பாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.அவர் பேசும் போது, இந்த முக்கியமான ஒரு வரலாற்று மைல்கல் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக இரண்டு காரணங்கள் முதல் சுமார் ஏழு எட்டு தலைமுறையாக ராயப்பன்பட்டியில் விவசாயம் செய்து கொண்டிருக்கிற குடும்பத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையிலும் நானே இன்றைக்கும் ராயப்பன்பட்டியில் விவசாய நிலம் வைத்து உழவு பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவது நீதி கட்சியின் நான்காவது வாரிசாக என் கொள்ளு தாத்தா சுப்ரமணிய முதலியார் துவக்கத்தில் நிதியை அளித்து உப தலைவராக பயணித்து பல மாற்றங்களை உருவாக்கி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்குப் பிறகு என் தாத்தா பிடி ராஜன் அதற்குப் பிறகு என் அப்பா பண்பாளர் பழனிவேல் ராஜன் ஆகியோர் இந்த இயக்கத்தோடு அடிப்படை தொண்டர்களுக்கு பணி செய்கிறவர்கள் என்ற அடிப்படையில் கல்வியோடு முக்கியத்துவத்தை நன்கு அறிந்து மீண்டும் மீண்டும் செயலிலும் கொள்கைகளும் வலியுறுத்தி செயல்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த விழாவுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எந்த ஒரு சமுதாயத்திற்கும் முன்னேற்றத்திற்கு சிறந்த பாதை ஒரே சிறந்த பாதை அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டியது அனைவருக்கும். சிலருக்கு கல்வி அளித்தால் பத்தாது இன்றைக்கு கூட வளர்ந்த மாநிலங்களில் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டை போல எந்த மாநிலமும் இந்தியாவில் இல்லவே இல்லை ஒரே காரணம் சம உரிமை சம வாய்ப்பு எல்லா சமுதாயங்களுக்கும் வாய்ப்பு பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சியோட முயற்சியினால் ஆரம்பித்த பணி இன்றைக்கு கூட இங்கு பார்த்தால் கிட்டத்தட்ட சமமாக எண்ணிக்கை இருக்கிறார்கள் பெண்கள் இதுதான் ஒரு சமுதாயத்துக்கு அழகு.
ஒரு சமுதாயம் முன்னேற்றத்திற்கு அடிப்படை இந்த பணியில் எந்த அளவிற்கு நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம்.நமக்கு ஒரு கடமை இருக்கு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பரப்பாளர்கள் மிஷினரி மற்றும் நிர்வாகங்கள் கல்விக்கு செய்த பணி மகத்தான பணி அதற்கும் நம் பாராட்டையும் நன்றியையும் கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.
நான் அமைச்சரான பிறகு பல மாவட்டங்களில் பல கல்லூரிகளில் இந்த மாதிரி சிறப்பு விருந்தினராக
சென்று இருக்கிறேன். கல்லூரி பள்ளி சில கல்லூரிகளே கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் வரைக்கும் முன்னாள் உருவாக்கப்பட்ட கல்லூரிகள் இன்றைக்கு இருக்கின்ற தமிழ்நாட்டில் இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் கல்வியில் முதலிடம் பெற்ற மாவட்டம் சென்னை அல்ல மதுரை அல்ல கோவை அல்ல கன்னியாகுமரி ஏன் கன்னியாகுமரி என்றால் கிறிஸ்தவ நிறுவனங்கள் கூடுதலாக பல நூற்றாண்டுகளாக பல 10 ஆண்டுகளாக இருக்கின்றன.
ஒரு நல்ல சமுதாயம் அனைவருக்கும் வாய்ப்பு முதலமைச்சர் கூறுவது போல் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு கல்வி நிறுவனம் சிறப்பாக 60 ஆண்டுகளாக வழங்கிக் கொண்டிருக்கும் குழுவிற்கு பள்ளிக்கும் நான் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் . இன்றைக்கு எத்தனையோ வகையில் நம்ம முன்னேறி இருந்தாலும் பல வகையில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல துறைகளில் பல மாற்றங்களை முதலமைச்சர் எங்களிடம் கடமையாக கொடுத்து அவரே சிலவற்றை நேரடியாக செய்தும் நாங்கள் எல்லாம் சில பணிகளை ஆளுக்கு ஆள் செய்து வருகிறோம்.
கல்வி துறையை சார்ந்த முயற்சிகள் ஆரம்பப்பள்ளி அரசாங்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதேபோல் எல்லா பள்ளிகளின் உட்கட்டமைப்பை சிறப்பிக்க நமது ஊர் நமது பள்ளி திட்டம் எத்தனையோ வகைகள் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நான் முதல்வன் திட்டம் இன்னொரு அடையாளம் மற்றும் முழு உதாரணம்.
அடுத்த தலைமுறை சிறப்பாக திறனோடு உற்பத்தி செய்யும் வகையில் உயர்த்தி உலக அளவிலான பொருளாதாரத்தில் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாக்குவது எங்கள் அரசாங்கத்துடைய கடமையாகும் அதற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இன்னும் நான் கூறப்போனால் இன்றைக்கு உலக அளவில் நமக்கு மிகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருக்கிறது தகவல் தொழில்நுட்பத்துறை .
அதனால் அந்த துறையில் நான் அமைச்சராக இருப்பது எனக்கு கிடைத்த பெரிய வரமாக நான் கருதுகிறேன். பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் நான் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறேன் என் கணிப்பில் மாதத்துக்கு 10,000 வேலை வாய்ப்புகள் இந்த துறையில் இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் .அதை 20 லிருந்து முப்பது ஆயிரம் இலக்கு அடைய அதற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம் குறிப்பாக இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் சென்னையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தி உலக அளவில் புதுப்புது நிறுவனங்களை உருவாக்கியவர்களை அழைத்து மாணவர்களுக்கு இலவசமாக அங்கே போவதற்கு டிக்கெட் அளித்து நம் மாநில மாணவர்களும் தொழில்நுட்ப புது நிறுவனங்கள் துவக்க கூ டியவர்கள் ஸ்டார்ட் அப் அவர்கள் இந்த பெரிய உலக அளவில் இருக்கிற
மிக சிறப்பான முன்னேறிய நபர்களையும் கற்றுக் கொள்வதற்கு சிறப்புமிக்க வாய்ப்பை இதுவரைக்கும் செய்யாத முயற்சியை நாம் செய்ய இருக்கிறோம்..
தேனி மாவட்டத்தில் இந்த மாதிரி வேலை உயர்த்துவதற்கு பணி செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். உறுதியாக வரும் ஆண்டில் ஏதோ ஒரு வகையில் இங்கே ஒரு சிறப்பான முயற்சி எடுத்து இங்கே பணி வாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொடங்க முயற்சி எடுக்கப்படும்.
உட் கட்டமைப்பு சமுதாய கட்டமைப்பு நம் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக தான் இருக்கிறது இருந்தபோதிலும் தினப்படி செயலிலும் தற்காலிகம் இருக்கிற சூழலும் சில அளவுகோலிலும் இன்னும் பல வகைகள் நம் நிர்வாகத்தை அரசாங்க செயல்பாட்டை சிறப்பிக்க தேவைப்படுகிற சூழ்நிலை இருக்கிறது அதுதான் உண்மை அதை உணர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையிலும் புதுப்புது திட்டங்களையும் புது புது முயற்சி களை நம் முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நான் நிதியமைச்சர் ஆகவும் மனித வள மேலாண்மை துறை அமைச்சராகவும் இருந்த போது எடுத்த பல முயற்சிகளை தொடர்ந்து இப்பொழுது தகவல் தொழில்நுட்ப துறையில் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.இதனை எதிர் வருகின்ற சட்டமன்ற கூட்ட தொடரில் தெரிவிப்போம்.
இதை தொடர்ந்து செய்வோம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த 16 வது சட்டமன்றத்திற்கு காலம் இருக்கிறது.
அதில் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பணி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் அதெல்லாம் நல்ல முறையில் நடக்கும் . நாங்கள் இறுதியாக 60 ஆண்டுகளில் பல ஆயிரம் மாணவர்களை பல வகைகள் அவர்கள் குடும்பத்திற்கு முன்னேறும் பாதையை காண்பித்து ராயப்பன்பட்டி தேனி மாவட்டம் தமிழ்நாட்டுக்கு பலனளிக்கும் வகையில் கல்வி அளித்து இந்த சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி உடைய அனைத்து பொருளாளர் நிர்வாகிகள் தாளாளர் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் முன்னாள் இந்த பொறுப்பில் இருந்தவர்கள் 60 ஆண்டுகளாக அவர்கள் எல்லோருக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே கூடி இருக்கும் மாணவர்களுக்கு உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் நீங்கள் எல்லாம் சிறந்த வகையில் கல்வி பெற்று உலகளவில் பொருளாதாரத்தில் புகழும் பெற முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் எனினும் இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு அருகே நாங்கள் விவசாயம் செய்யும் ஊரிலேயே என்னை அழைத்ததற்கு உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் என பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -1
கப்ளிசேட்
உமைய்யாக்களின் பேரரசு -34
(கி.பி 661-750)
கவர்னர் அஸ்ரஸ் ஒரு பைத்திய
காரத்தனமான உத்தரவை பிறப்பித்தார்.
முஸ்லீம்களாக மாறிய மக்கள் கத்னா செய்திருக்கிறார்களா
தொழுகிறார்களா,
குர்ஆன் ஓதுகிறார்களா என்று சோதித்து சரியாக இவைகளை செய்யவில்லை எனில் அவர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க உத்தரவிட்டார்.
அதிகாரிகளின் அராஜகங்களால்,
சோதனை அழுத்தங்களால், நிறைய மக்கள் மீண்டும் காஃபிர்களாக மாறினர்.
உமைய்யா அரச குடும்பத்தினர்
மிகுந்த அராஜகத்தில் ஈடுபட்டனர்.
காவலர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை.
தினார்கள் பறித்தல்,
சொத்துக்களை அழுத்தம் கொடுத்து பறித்தல்,
அதிகாரிகளின்
வெறியாட்டங்கள்,
உமைய்யாக்களின் பரம்பரை வெறி,
மக்கள் உரிமைகள் பறிப்பு ,என பேரரசு மக்களின் கோபத்தை சம்பாதித்தது.
மன்னர் ஹிஸாம் நல்லவராக இருந்தும்,
நிர்வாகத்திறன் இல்லாமல் இவர்களை கட்டுப்படுத்த தவறியதால், மக்களிடையே வெறுப்புணர்வு பரவத்தொடங்கியது.
அது மக்கள் புரட்சியாக மாறத் துவங்கியது.
ஹுசைன் (ரலி) அவர்களின் பேரர்
ஜைத் அவர்களின் தலைமையில் மக்கள் அணிசேரத் தொடங்கினர்.
ஜைதை ஒழித்து மக்கள் அணி சேர்வதைத் தடுக்க, கூபா கவர்னர் யூசுப் இப்னு உமர் அவர்களுக்கு மன்னர் உத்தரவிட்டார்.
கூபா கவர்னர் யூசுப் இப்னு உமர் அவர்கள்
பஜ்ரு தொழுதுவிட்டு
லுஹா தொழுகை வரை பள்ளியிலேயே இருப்பார்.லுஹா தொழுவிட்டே நகருவார்.
திருக்குர்ஆனை ஓதிக்கொண்டே இருப்பார்.
ஆனால் மனிதமனம் விசித்திரமானது.
இவர் இரக்கமே இல்லாத கொடுங்கோலராக இருந்தார்.
யூசுப் இப்னு உமர் அவர்கள் ஹுசைன் (ரலி) அவர்களின் பேரர் ஜைது அவர்களை கொடூரமாக
கொன்றார்.
தலையை தனியாக வெட்டி தலையை மட்டும் டமாஸ்கஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்.ஜைது அவர்களின் உடலை பல நாட்கள் கூபாவில் தொங்கவிட்டு இருந்தார்.
இதனால் உமைய்யா ஆட்சியாளர்கள் மீதான கோபம் மக்களிடையே அதிகரித்தது.
அலி(ரலி) வழிவந்த
ஜைது குடும்பத்தினர் மீதான அனுதாபம் அதிகரித்தது.
ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கட்டுப்பாடற்ற மக்களின் வெறுப்பையும்,
கோபத்தையும்
சம்பாதித்த ஹிஸாம் இப்னு அப்துல் மலீக் அவர்கள் மரணமடைய ஆட்சி முடிவுக்கு வந்தது.
அடுத்து உமைய்யா ஆட்சியாளராக வலீத் இப்னு யஜீது என்ற இரண்டாம் வலீது பதவியேற்றார்.
இவர் மது,மாது என்று மிகவும் நடத்தை கெட்டவராக இருந்தார்.
மக்கள் இவரை வெளிப்படையாகவே
பாவி என விமர்சிக்கும் அளவிற்கு இவரின் செயல்பாடுகள் அமைந்து இருந்தன.
எதிரிகளை தேடிப்பிடித்து பழிவாங்கினார்.
ஜைது அவர்களின் மகன் யஹ்யாவை
படுகொலை செய்து உடலை ஈட்டியில் குத்தி ஏழுவருடங்கள்
தொங்க விட்டு இருந்தார்.
உடல் அழுகி நாற்றமெடுத்து எலும்புகூடாகி உதிர்ந்தாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.
அலி(ரலி) குடும்பத்தின் அவர்களின் பெரிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) அவர்களின்
நாலாவது பேரர் முகம்மது இப்னு அலி
தலைமையில் மக்கள் ஒன்று கூடினர்.
இவரின் அதிரடி நடவடிக்கைகள் உமைய்யா பேரரசின் அஸ்திவாரத்தை அசைத்தது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”
by Askar
written by Askar
“முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”
திரைப்பட நட்சத்திர இயக்குனரின் மகன் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அடிபதித்து, தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு, இளம் தலைமுறையினரின் மனதில் “இளைய தளபதி”, “தளபதி” என “விஸ்வரூபம்” எடுத்தவர், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயரிலேயே மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் தொய்வின்றி செய்து வந்த நிலையில் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டுமானால் ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் என்பதையும், அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே அதற்கான பணிகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை புரிந்து கொண்ட நடிகர் விஜய் அவர்கள் தற்போது “தமிழக வெற்றிக் கழகம்” எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து அறிவித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்று அவரது நல்லெண்ணம் வெற்றி பெற அவருக்கும், அவரது குழுவினருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைபெற்ற ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது விஜய் மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கூட உடனடியாக தேர்தல் அரசியலை முன்னெடுக்காமல் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அதே சமயம் அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவும் போவதில்லை எனவும், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் தெரிவித்துள்ள அவரது முடிவையும், தன்னம்பிக்கையையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார வரவேற்கிறது.
மேலும் அரசியல் என்பது நடிப்பைப் போல மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி என்பதை உணர்ந்து கொண்டு, அரசியலின் அடிப்படை விசயங்களை முன்னோர் பலரிடமிருந்து கற்று, அதற்காக மனதளவில் தன்னை பக்குவப்படுத்தி, தயாராகி கொண்டு வருவதாகவும், “அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது ஆழமான வேட்கை”, அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் எனவும், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள அவரது முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.
தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகின்ற கழகங்களால் அரசியல் என்பது சாக்கடையாகிப் போனதோடு, ஊழல் கழகங்களின் முதுகில் சவாரி செய்யும் கட்சிகளால் அரசியல் வருவாய் ஈட்டும் தொழிலாகவே மாறிப் போன நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு ஊழல் கழகங்களுக்கும் மாற்றாக கடந்த 2018ல் நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் அரசியல் கட்சி கண்ட போது அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு மனதோடு வரவேற்றது. அத்துடன் ஊழல் கழகங்களுக்கு மாற்றாக, மாற்றத்திற்கான விதையாக மய்யம் இருக்கும் என்கிற நம்பிக்கையிலும், வருமானம் இல்லாமல் முழுநேர அரசியல் என்பது ஊழலுக்கே வழிவகுக்கும் என்பதாலும் மய்யத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் பகுதி நேர அரசியல், சமூக வலைதள அரசியல் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட கட்சியையும், அதன் தலைமையையும் மக்களிடையே கொண்டு போய் சேர்க்காது என்பதையும், மக்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சி மீதும், அதன் தலைமை மீதும் நம்பிக்கை வராமல் அவநம்பிக்கையே ஏற்படும் என்பதையும், அதனால் கட்சியினரின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போய் வெற்றிக் கனியை பறிப்பது என்பது இயலாத காரியமாகி அதுவே ஊழல் கழகங்களுக்கு சாதகமாகிப் போகும் என்பதையும் காலம் உணர்த்தியது.
இந்த நிலையில் புதியதாக அரசியல் களம் காண இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது கைவசம் உள்ள திரைப்படங்களின் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு அரசியல் களத்தில் முழுமையாக களமாடப் போகிறார் என்பது நிச்சயமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து அவருக்கு வெற்றிக் கனியை தமிழ்நாடு பரிசளிக்கும் என்பதையும், அவர் கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்காமல் போனால் இதுவரை தமிழ்நாட்டில் உருவாகி கரைந்து, காணாமல் போன கட்சிகளின் பட்டியலில் இடம்பெற நேரிடும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா..? நடிகரால் சாதிக்க முடியுமா..? என எதிர்மறையான வினாக்களும், விமர்சனங்களும் எழுந்தாலும் கூட வருவாய்க்கான பல்வேறு தொழில்கள், பணிகளைப் போல நடிப்பும் வருவாய்க்கான தொழில், பணி என்பதால் அதில் கிடைத்த அடையாளத்தையும், திரைப்பட உச்ச நட்சத்திரம் என்கிற வெளிச்சத்தோடும், மக்கள் நலனிற்காக கிராமங்கள், நகரங்கள் தோறும் முழுநேர நேரடி அரசியலை நடிகர் விஜய் அவர்கள் மேற்கொண்டு கட்சியின் கட்டமைப்பை ஆழ உழுது, ஊழல் கழகங்களோடு விலகி நின்று நேர்மையான அரசியலை கடைபிடிப்பாரேயானால் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாகவே வெற்றி பெற்றதைப் போல் தமிழக வெற்றி கழகமும் பெருவாரியாக வெற்றி பெற்று ஊழல் கழகங்களுக்கு மாற்றாக திகழ அனைத்து வாய்ப்புகளும் தமிழ்நாட்டில் பிரகாசமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..
by Askar
written by Askar
சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..
வெள்ளிக்கிழமை (2.02.2024) அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கட்சிப் பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல். திருமாவளவன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விஜய் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல்; சீமான் கருத்து..
by Askar
written by Askar
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து பேசிய சீமான், விஜய் தொடங்கியுள்ள கட்சியின் தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக உள்ளது. இதை வரவேற்கிறேன். புதிதாக தொடங்கும் கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என பல பெயர்களைக் கொண்டு பரீசலித்துவந்தார். அதில் இந்த பெயரை தேர்வு செய்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள கட்சி பெயரில், திராவிடம் என்ற சொல் இல்லாததே பெரிய மகிழ்ச்சி தான்.
அரசியலில் அவருக்கான வாக்கு அவருக்கு, எனக்கான வாக்கு எனக்கு. அவர் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல். கழகம் என்பதை யார் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி! நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை..
by Askar
written by Askar
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“‘விஜய் மக்கள் இயக்கம்’பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.