பெங்களூரு சிறையில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்பாக பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கீழக்கரை உள்ள இருவரது வீட்டில் சோதனை நடத்தினர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நசீர். இவர் சிறையில் இருந்த போது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தார் என்ற வழக்கின் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ந்தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நசீரின் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாயை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ந்தேதி ஏடிஎம் மெசினில் டெபாசிட் மூலமாக நசீர் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை மண்ணடியில் கீழக்கரையைச் சேர்ந்த தமீமுல் ஆசிக் மற்றும் அல் முபீத் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமீமூல் ஆசிக் சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வருகிறார். அல் முபீத் சென்னையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்த பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அவர்கள் சொந்த ஊரான கீழக்கரை பருத்தி காரன் தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரு இடங்களிலும் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரி இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வீட்டில் எந்த முக்கிய ஆவணங்களும் கிடைக்காததால் ஒரு பென்டிரைவ் மற்றும் இருவரது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்றதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category:
மாவட்ட செய்திகள்
முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் சென்ற பெண் மீது என் என்எல் பஸ் மோதியதில் படுகாயம் டிரைவர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது என். என்.எல் பஸ் மோதியதில் (ஜெயலெட்சுமி) படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி (47) இவர் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு ரோட்டோரம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி வந்தஎன் என்எல் பஸ் ஜெயலெட்சுமி மீது மோதியதில் பின் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம்பட்ட ஜெயலெட்சுமியின் கணவர் கண்ணன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்ன கன்னு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியா வழக்குபதிவு செய்து என் என்எல் பஸ்ஸை பறிமுதல் செய்து டிரைவர் லாரன்சை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மார்ச் 08 ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா; குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு..
written by Abubakker Sithik
மார்ச் 08 ஈஷா மஹாசிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்; குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு..
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹா சிவராத்திரி விழா நம் பாரத கலாச்சாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர். ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு..
மதுரை மாவட்டம், மேலூரில் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற விழாவில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தையும், ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடத்தையும் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக பெண்கள் தினம் முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பின் மூலமாக உணவு வழங்கி பேசுகையில், உலகில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் நினைத்தால் முதியோர்களை அரவணைத்து காப்பகங்களே தேவையில்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், பாலமுருகன், ரமேஷ்குமார் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் மத்திய பாதுகாப்பு படை உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி; மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது..
written by Abubakker Sithik
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில் மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது. ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் குழுமம் சார்பாக மத்திய தொழில் பாதுகாப்புத் துறை படை உருவான உதய தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அலுவலர் கணேசன், விமான நிலைய துணை மேலாளர் ஜானகி ராம் மற்றும் ஏர் இந்தியா, இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட்., ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுங்க இலாகா அணி, குடியேற்றத்துறை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன.
மொத்தம் பத்து அணிகள் கொண்ட 23 லீக் போட்டிகள் நடைபெற்றது. காலிருதி அரையிறுதி, இறுதிப்போட்டி என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் ஏர் இந்தியா விமான அணியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணி மோதியதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் பரிசுகளை வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம்-2013 பற்றிய விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டத்தில் பாலியல் வன்முறை சட்டம் – 2013 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் பணியிடத்தில் பாலியல் வன்முறை சட்டம் -2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் உள்ளக புகார் குழு அமைத்தல், புகார் பெட்டி வைத்தல் மற்றும் அதன் நோக்கங்கள் பற்றியும், அனைத்து பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பலகை வைப்பது குறித்தும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா விளக்கவுரை ஆற்றினார்.
மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு Selfie with Daughter போட்டியானது மாவட்ட ஆட்சித்தலைவரால் துவக்கி வைக்கப்பட்டது. 04.03.2024 முதல் 07.03.2024க்குள் மகள்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ https://forms.gle/ARrqerSxvtS7b3KSA என்ற இணைப்பில் தங்களுடைய முழு விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு 08.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பரிசுகள் வழங்குவார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளை சுற்றுலா அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..
written by Abubakker Sithik
மாற்றுத்திறன் படைத்த சிறப்பு பள்ளி குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பி மகிழ்வித்த தென்காசி மாவட்ட கலெக்டர்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளை திருநெல்வேலி அறிவியல் மையத்திற்கு சுற்றுலாவிற்கு அனுப்பி தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் குழந்தைகளை மகிழ்வித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.03.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிவியல் மையத்திற்கு 04.03.2024 அன்று ஒருநாள் சுற்றுலாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அனுப்பி வைத்தார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 714 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) நடராஜன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளின் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசு !! இராமநாதபுரத்தில் அதிமுக குற்றச்சாட்டு !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுத்தியதாகவும் விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், பட்டணம்காத்தான் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி. மருது பாண்டியன் துவக்க உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி! ஆகியோர் போதைப்பொருள் கடததல் காரர்களிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். டில்லியில் சிக்கிய போதைப்பொருள் தமிழக போலீசார் பிடித்திருக்கால் உணவுப்பொருள் எனக் கூறி மூடிமறைத்திருப்பர்கள் டில்லியில் பிடிபட்டதால் குட்டு வெளியானது என மாவட்ட கழக செயலாளர் எம்- ஏ. முனியசாமி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கண்டனம் உரை நிகழ்த்தினார் . முன்னாள் அமைச்சர் கோஷங்களை படிக்க பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் உரக்க கோஷமிட்டனர். அதிமுக தொண்டர்கள் கையில் போதைப் பொருள் ஒழிக்க வேண்டும் என்னும் பதாகையுடன் திரளாக கூடியிருந்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன் மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா சசிகுமார, அவைத்தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார, முதுகுளத்தூர் முனியசாமி பாண்டியன, கடலாடி, காளிமுத்து கமுதி ராஜேந்திரன், அந்தேரனிராஜ சாயல்குடி, பிரவீன் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் , சிக்கல் முதுகுளத்தூர் நகர் செயலாளர் முத்துராமலிங்கம் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் இரவு பகலாக தொடர் போராட்டத்தை தொடங்கிய வருவாய் துறை அலுவலர்கள் ! வேடிக்கை பார்க்கும் அரசு !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக உள்பகுதியில் 10 அம்ச கோரிக்கையினை தமிழக அரசு நிறைவேற்ற கோரி, வருவாய் துறை ஊழியர்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கினர். ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளான மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி மூன்றாம் கட்ட போராட்டமாக அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையான அனைத்து நிலை அலுவலர்களும் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை துவங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊழியர்களும் கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து இரவு பகலாக ஆண்கள் பெண்கள் என அனைத்து ஊழியர்களும் தேவையான உணவை அந்த இடத்திலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் வருகின்ற 7ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழகத்தில் இருந்து சுமார் 14,000 மேற்பட்ட வருவாய் துறை சங்கத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து பணிகளையும் புறக்கணிக்கப் போவதாகவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடல் மீட்பு; உதவும் பணியில் தமுமுகவினர்..
written by Abubakker Sithik
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடல் மீட்பு; உதவும் பணியில் தமுமுகவினர்..
புளியங்குடி மலைப் பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் உடலை தமுமுகவினர் மீட்டனர். தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயதான கோபால் என்ற முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக காணவில்லை என்ற செய்தி வெளியானது. பின்பு நான்கு நாட்களுக்குப் பிறகு புளியங்குடி மேற்கு பகுதியில் வீரமுடையார் கோவில் அருகே உள்ள மலை அடிவாரத்தில் கிடப்பதாக அங்குள்ள விவசாயிகள் தென்காசி மாவட்ட தமுமுக செயலாளர் எம் எஸ் அப்துர் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்கு விரைந்த காவல்துறை அதன் பிறகு தமுமுக மருத்துவ சேவையை அணுகியது. பின்பு அங்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அமரர் உறுதியில் உடல்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போதைப் பொருள் விவகாரம்!-பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது;அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி..
by Askar
written by Askar
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (04-03-2024) கடலுார் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் மனதாரப் பாராட்டி உள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான்.
போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் – ஷோன்தி (23 கிலோ heroin வழக்கு) இவர் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார். அதேபோல பா.ஜ.க. எம்.பி.,யின் மகன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார் யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தது. கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டார் எனக் கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?
கடலூர் எம்.பி., மீது கூட ஒரு வழக்கு வந்தது. அவரையும் கட்சி காப்பாற்றவில்லை. அவர் சட்டரீதியாக வழக்கைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மீது குறை சொல்ல முடியாமல், பிரதமர் மோடி நினைத்ததை எல்லாம் பேசுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார். 2016 தேர்தலில் கன்டெய்னர் லாரியில் பெரும் பணம் சிக்கியது. தி.மு.க. வழக்குத் தொடுத்தது. அது தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடர்ந்து தாமதப்படுத்துகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியைச் சிதைக்க முயற்சித்தார்கள்; அது நடக்கவில்லை. கூட்டணி வலுவாகத் தொடர்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தவறான பிரசாரம் செய்கின்றனர். நகராட்சித் தேர்தலுக்கு வருவது போல பிரதமர் மோடி அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவருக்கு ரோஷம் ஏற்பட்டு, மழை நிவாரண நிதியை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கும் அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவாரா எனப் பார்க்கலாம்.
கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலை தொடர்பான விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பான நி்கழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது, அதனை ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல்பட்டது. அதுபோல, கல்பாக்கம் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம். தமிழ்நாடு மக்கள் ஏற்காததை நாங்கள் ஏற்க மாட்டோம்.
தி.மு.க. கூட்டணியில் பிளவு இல்லை. நாளை மாலைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விடும் என நினைக்கிறேன். 7-ஆம் தேதிக்குள் தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விடுவோம். இ.வி.எம். இயந்திரத்தில் முறைகேடுகளைத் தடுக்கத் தேர்தல் ஆணையத்தில் பல புகார்கள் தந்து உள்ளோம் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகின் மிகப் பிரம்மாண்ட மஹா சிவராத்திரி விழா; மார்ச் 08 ஈஷாவில் கோலாகலம்..
written by Abubakker Sithik
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மஹாசிவராத்திரி விழா நம் பாரத கலாச்சாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடன குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர். ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீங்கள் ஒரு அமைச்சர்!- சாமானியர் அல்ல: உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்..
by Askar
written by Askar
நீங்கள் ஒரு அமைச்சர்!- சாமானியர் அல்ல: உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம்..
நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி
மீது காட்டமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களையும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “நான் பேசியதன் விளைவை நன்கு அறிவேன். 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் என்னால் செல்ல முடியாது. பொதுவான ஒரு இடத்தில் விசாரிக்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள நான் தயார்” என்று உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள்.
சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்..
by Askar
written by Askar
பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்..
சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈணுலையை (Prototype Fast Breeder Reactor) பிரதமர் மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈணுலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பாஜக அரசு அதனை இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும்.
மக்கள் நலத்தையும், மண்ணின் வளத்தையும் நாசப்படுத்த கூடிய கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கிய காலம்தொட்டே நாம் தமிழர் கட்சி அணுவுலைகளைக் கடுமையாக எதிர்த்து வருவதுடன், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற மாற்று மின்உற்பத்திப் பெருக்கத்துக்கு மாறவும் வலியுறுத்தி வருகிறது. மேலும், அணு உலை கழிவுகளை என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சாராசரியாக வெளியாகும் 27000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றினை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்திற்குக் (Away From Reactor-AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் ஏறத்தாழ 48000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்திற்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நிலம் மாறிவிடும். இதனைக் கருத்திற்கொண்டே கடந்த 2019ஆம் ஆண்டு கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய ஒன்றிய அரசு முடிவு செய்தபோதும், கடந்த 2021ஆம் ஆண்டு புதிய அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி வழங்கியபோதும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்ததுடன், தமிழ்நாடு முழுவதும் தொடர்ப் போராட்டங்களையும் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது.
ஆனால், மக்கள் எதிர்ப்பினைத் துளியும் பொருட்படுத்தாது, எதேச்சதிகாரப்போக்குடன் கூடங்குளத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைக்கான தற்காலிக அணுக்கழிவு மையத்தை அமைக்க அனுமதித்தது இந்திய ஒன்றிய அரசு. நிரந்தர அணுக்கழிவு மையம் அமைத்திட எந்த இந்திய மாநிலமும் ஒத்துக் கொள்ளாத நிலையில், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு அணுவுலைகளையே மூட வேண்டுமென்று கோரிக்கை வைத்துவரும் நிலையில் தற்போது அதைவிடப் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் 500 மெகாவாட் ஈணுலையை கல்பாக்கத்தில் தொடங்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
அறிவியலில் வளர்ந்த வல்லாதிக்க நாடுகளே அணுக்கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்கும்போது, நிரந்தர அணுக்கழிவு மையம் வைப்பதற்கான தொழில்நுட்பத்தை இதுவரை பெற்றிடாத இந்தியா, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அணுவுலைகளை அமைத்து வருவது, நேரடியாக தமிழர்கள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல் போரேயாகும். ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, ஈணுலை, அணுக்கழிவு மையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத் திட்டங்களையெல்லாம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதன் மூலம் பாஜக அரசு இந்தியாவின் குப்பைத்தொட்டியாகவே தமிழ்நாட்டை மாற்றியுள்ளது. பாஜகவினைக் கடுமையாக எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஈணுலையை தமிழ்நாட்டில் திறப்பது குறித்துத் திட்டமிட்டு அமைதிகாப்பது ஏன்? இதுதான் பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் செயல்முறையா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, கல்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்படும் ஈணுலையை உடனடியாகக் கைவிடுவதோடு, கட்டுமானப் பணிகளை நிறுத்தவேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகின்றேன். மேலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஈணுலைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, அதனைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 15 இடங்கள் போட்டியிடுவது குறித்து ஆலோசனை
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மண்டபத்தில் சிவசேனா கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் காமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் சாலை முத்து மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயா வரவேற்றனர். மாநில முதன்மைச் செயலாளர் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் 30 பேர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 11 திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கர்நாடக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரை கண்டித்தும், தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க கோரியும், சுதந்திர போராட்ட தியாகி அழகுமுத்துக் கோன் சிலை அமைக்கவும், சிவகங்கை மாவட்டம் தூதை பஞ்சாயத்தில் தடுப்பணை அமைப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநில பொது செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் 15 இடங்களில் போட்டியிடுவதற்காக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் 24ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அவனியாபுரத்தில் அனுமதியின்றி செயல்படும் வார சந்தையால் போக்கு வரத்து நெரிசல்..
written by Abubakker Sithik
மதுரை அவனியாபுரத்தில் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி..
மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா அவனியாபுரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட காய்கறி வார சந்தையால் அவனியாபுரம் விமான நிலையம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறிய போது, அவனியாபுரத்தில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். எங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தினசரி இருபது ரூபாய் வாடகை பெற்று வருகின்ற நிலையில், தற்போது தனிநபர் சொந்த வருமானத்திற்காக அவனியாபுரம் விமான நிலையம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் 8 மாதங்களாக வார சந்தை என்ற பெயரில் கடை ஒன்றுக்கு நூறு ரூபாய் வசூல் செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரங்கள் பாதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினர்.
அவனியாபுரம் தினசரி காய்கறி சந்தையில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்து எங்களது கடன் மற்றும் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் உள்ளிட்டவைகளை கட்டி வந்த நிலையில், தற்போது வார சந்தை இயங்கப்பட்டு வருவதால் மூன்று நாளைக்கு ஒரு முறை தான் 2000 ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாகவும், இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து மாநகராட்சி ஆணையாளர், காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுரை மேயரிடமும் மனு கொடுத்தோம். எங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அவனியாபுரத்தில் 1,000 ஆண்டு பழமையான முருகன் சிலை கண்டெடுப்பு; பிற்கால பாண்டியர்கள் காலத்திய 11 ஆம் நூற்றாண்டு கால சிலையாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
மதுரை காமராசர் பல்கலைக்கழக முதுகலை மாணவர் த.வினோத் அவனியாபுரம் பகுதியில் கள ஆய்வு செய்த போது, இந்த முருகன் சிலையை கண்டுபிடித்துள்ளார். குறிஞ்சி நிலத் தலைவனான முருகனுக்கு தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. பல தனிச் சிலைகளும் உள்ளன. மதுரை அவனியாபுரம் புறவழிச் சாலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள செம்பண் ஊரணியின் அருகாமையில் இந்த முருகன் சிலை, தலை இல்லாமலும் முன்கைகள் மிகவும் சிதைந்த நிலையிலும் ஒரு மரத்தின் வேருக்கு அருகில் கிடைத்துள்ளது. இதன் உயரம் 60செ.மீ ஆகவும், அகலம் 50 செ.மீ ஆகவும் உள்ளது. கண்டிகை, சரப்பளி, ஆரம் ஆகிய அணிகலன்களுடன் தோள் மற்றும் கால் அணிகள் அணிந்த நிலையில் மேடையில் இடது காலை மடித்து வலது காலைத் தொங்க விட்டபடி சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. வலது இடது கைகள் சிதைந்துள்ளன. பீடத்தின் கீழ்ப் பகுதியில் நீண்ட தோகையுடன் ஆண் மயில் சிற்பம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மாணவர் வினோத் கூறுகையில், பிற்கால பாண்டியர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட முருகன் சிலை. காலம் 11 ஆம் நூற்றாண்டு அல்லது 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிலையாக இருக்கலாம். தலை சிதிலடைந்து காணப்படும் சிலை இப்பகுதியில் ஏற்கனவே பிரதான சிவன் கோவில்கள் இருக்கலாம் அதில் சிதிலமடைந்த சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றது. கோவிலின் அருகிலேயே பழமை வாய்ந்த செவந்திஸ்வரர் கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதால் அங்கிருந்து கூட இந்த சிலைகள் வந்திருக்கலாம் என தெரிகிறது. முருகன் சிலை என்பதற்கான ஆய்வுகளை முன்னாள் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்தி, பழநி, தொல்லியல் ஆராய்ச்சியாளர் சாந்தலிங்கம் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வு மாணவர் மதுரை வினோத் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..
written by Abubakker Sithik
மதுரையில் ரோட்டரி சங்கம் சார்பில் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கி விழிப்புணர்வு..
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மல்லிகை ரோட்டரி சங்கம் சார்பில் நறுமணம் என்ற பெயரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மல்லிகை ரோட்டரி சங்க தலைவர் உமாராணி தனசேகரன் தலைமை தாங்கினார். சர்வதேச ரோட்டரி இயக்குனர் முருகானந்தம், ரோட்டரி கவர்னர் ஆனந்த ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நடிகர் சரத்குமார் பேசும் போது, ரோட்டரி சங்கங்கள் சமூக சேவை செய்வது என்பது வரவேற்கதக்கது. தருமி பொற் காசுகளுக்காக காத்திருந்தார் என்று சொல்வார்கள். ஆனால் ரோட்டரி உறுப்பினர்கள் புற்று நோய் போன்று பல திட்டங்களுக்கு கேட்காமலேயே நீங்கள் பொற்காசுகளை வாரி வழங்குகிறீர்கள் என்பதை பார்க்கிற பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு நிதி வழங்கியது பாராட்டுதலுக்கு உரியது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சேவை செய்ய வேண்டும் ஏழைகளுக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவையாக நான் கருதுகிறேன். அதுவும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பது மிகப்பெரிய பணி. இந்த பணியை செய்து வருகிற மல்லிகை ரோட்டரி சங்கத்தை நான் மனதார பாராட்டுகிறேன். தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
மதுரை ரோட்டரி லஹரி பள்ளியைச் சார்ந்த பெருமக்கள் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ரூபாய் 25000 நன்கொடை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், உதவி ஆளுநர் கவுசல்யா, வழக்கறிஞர் சாமுண்டி போஸ், மல்லிகை ரோட்டரி சங்க செயலாளர் பத்மாவதி, பொருளாளர் பூங்கொடி, ஒருங்கிணைப்பாளர் தேவிகா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம்; உறுதி மொழி ஏற்பு..
written by Abubakker Sithik
செங்கோட்டை நூலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. இதில் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். மத்திய விளையாட்டுத் துறை, நேரு யுவகேந்திரா மற்றும் செங்கோட்டை வருவாய்த்துறை, செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து நூலகத்தில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு செங்கோட்டை வருவாய் துறை தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் பிரிவு அலுவலர் சிவன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவ்விழாவிற்கு வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செண்பக குற்றாலம், SMSS பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நூலக வாசகர்கள் ,போட்டித் தேர்வு மாணவர்கள் அனைவரும் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சதீஷ் (என்ற) சண்முகையா செய்திருந்தார். முடிவில் நூலகர் ராமசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.