மதுரை காளவாசல் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் கிரீன் வின்ஸ் அப்பார்ட்மெண்ட் அருகே அடர்ந்த முற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது இதை பார்த்த அப்பகுதி மக்கள் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் மோட்டார் வாகன நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் போராடி அணைத்தனர் யாரேனும் சிகரெட் அல்லது பீடிகளை குடித்து அணைக்காமல் தூக்கி எரிந்து இருக்கலாம் இது காய்ந்த முள் பகுதியில் தீப்பற்றி இருக்கலாம் என தெரியவருகிறது எனினும் துரிதமாக செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் முற்றிலுமாக தீயை அணைத்தனர் இதனால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.