Home செய்திகள் திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சாவை கடத்திய 4 பேர் கைது., கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருமங்கலம் அருகே 340 கிலோ கஞ்சாவை கடத்திய 4 பேர் கைது., கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

by mohan

 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து., விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து., டாட்டா சுமோ வாகனத்தில் 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர்., தனிப்படை போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த 4 பேரையும் கைது செய்தனர்.இந்த கடத்தல் தொடர்பாக கூடல்நகர் பகுதியைச் தெய்வம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் போலீசார் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com