வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் களவுபோன, தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடித்து கொடுக்கும்படி சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து 60 பேரின் செல்போனை கண்டுபிடித்து அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் நடந்தது. சம்மந்தப்பட்டவர்களிடம் எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் ஒப்படைத்தார்.உடன் டிசிபி, டிஎஸ்சி பூபதிராஜ், சைபர் க்ரைம் பிரிவை சேர்ந்த லதா, உமாராணி, ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Category:
மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.தூங்கு சுற்றுவட்டார கிராமத்திலிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் மருத்துவம் பார்த்து செல்கின்றனர் இந்நிலையில் மருத்துவமனையின் வளாகத்திலுள்ள கட்டிடத்தில்காங்கிரட் சிலாப் பழுதாகி உடைந்து கீழேவிழும் நிலையில் உள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து செல்வதால் பழுதான கான்கிரீட் சிலாப் கீழே விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காலதாமதமின்றி விரிசல் ஏற்பட்டு உடைந்து காணப்படும் கான்கிரீட் சிலாப்பினை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911).
by mohan
written by mohan
மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin) ஏப்ரல் 8, 1911ல் அமெரிக்கா மின்னசோட்டா நகரில் எலியாஸ் கால்வின் மற்றும் ரோஸ் ஹெர்விட்ஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். கால்வின் சிறு குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம் டெட்ராய்டுக்கு குடிபெயர்ந்தது. 1928ல் மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1931 ஆம் ஆண்டில் மிச்சிகன் சுரங்க மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (இப்போது மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும், 1935ல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். அடுத்த நான்கு ஆண்டுகள் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிந்தைய முனைவர் பட்ட (post-doctoral) பணிகளைச் செய்தார். 1942ல் மேரி ஜெனீவ் ஜெம்டேகார்டை மணந்தார்.
கால்வின் 1937ல் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1947ல் வேதியியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். கார்பன் -14 ஐசோடோப்பை ஒரு ட்ரேசராகப் பயன்படுத்தி, கால்வின், ஆண்ட்ரூ பென்சன் மற்றும் ஜேம்ஸ் பாஷாம் ஆகியோர் கார்பன் பயணிக்கும் முழுமையான பாதையை வரைபடமாக்கினர். ஒளிச்சேர்க்கையின் போது ஆலை, வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு ஆக உறிஞ்சப்படுவதிலிருந்து தொடங்கி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பிற கரிம சேர்மங்களாக மாற்றப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது, கால்வின், பென்சன் மற்றும் பாஷாம் ஆகியோர் முன்பு நம்பியபடி கார்பன் டை ஆக்சைடை விட, கரிம சேர்மங்களின் உற்பத்தியைத் தூண்டுவதற்காக ஒரு ஆலையில் குளோரோபில் மீது சூரிய ஒளி செயல்படுகிறது என்பதைக் காட்டியது. கால்வின்-பென்சன்-பாஷாம் சுழற்சி என சில நேரங்களில் அழைக்கப்படும். 1961ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றர்.
1950களில் அவர் பொது அமைப்புகள் ஆராய்ச்சி சங்கத்தின் முதல் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 1963ம் ஆண்டில் அவருக்கு மூலக்கூறு உயிரியல் பேராசிரியர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் வேதியியல் பயோடைனமிக்ஸ் ஆய்வகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும், ஒரே நேரத்தில் பெர்க்லி கதிர்வீச்சு ஆய்வகத்தின் இணை இயக்குநராகவும் இருந்தார். அங்கு அவர் 1980ல் ஓய்வு பெறும் வரை தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தனது இறுதி ஆண்டு செயலில், எண்ணெய் உற்பத்தி செய்யும் தாவரங்களின் பயன்பாட்டை ஆய்வு செய்தார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாக வாழ்க்கையின் வேதியியல் பரிணாமத்தை சோதித்து பல ஆண்டுகள் கழித்தார், மேலும் 1969ல் வெளியிடப்பட்ட வேதியியல் பரிணாம விஷயத்தில் ஒரு புத்தகத்தையும் எழுதினார்.
1958ல் ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் ஜெர்மன் அறிவியல் அகாடமி லியோபோல்டினாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டில், கால்வினுக்கு விட்டியர் கல்லூரியில் கவுரவ டாக்டர் (எல்.எல்.டி) பட்டம் வழங்கப்பட்டது. ஆசா கிரே, மரியா கோப்பெர்ட்-மேயர் மற்றும் செவெரோ ஓச்சோவா ஆகியோருடன் அமெரிக்க தபால்தலைகளின் அமெரிக்க விஞ்ஞானிகள் தொகுப்பின் 2011 தொகுதியில் கால்வின் இடம்பெற்றார். கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்தத மெல்வின் கால்வின் ஜனவரி 8,1997ல் தனது 85வது அகவையில் கலிபோர்னியா அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே வாகை குளத்தில் மல்லிகை பூ சாகுபடி செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் விவசாயம் பற்றி ஒவ்வொரு கிராமங்களாக நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்,இதன் ஒரு பகுதியாக வாகைகுளம் கிராமத்தில் மூங்கில்ராஜா என்பவர் தோட்டத்தில் குளிர் காலங்களில் மல்லிகை பூ சாகுபடி எவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் மருந்து வகைகள் உரங்கள் எப்போது அளிக்க வேண்டும் என மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் மீனா, மீனாட்சி,சாய்மேகனாரெட்டி, நானிசி, நர்மதா, நவீனா, ஆகியோர் விவசாயிகளிடம் கேட்டிருந்தனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாப்டூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலி 3 பேர் படுகாயம் .
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரில் பேரையூரைச் சேர்ந்த வினோத்குமாா் மற்றும் அவருடைய நண்பர்கள் மணிராஜ், கார்த்திக், முத்து, வினோத், ஆகியோர் சாப்டூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேரையூரைச் சேர்ந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 3 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றிருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேரையூர் முருகன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பங்கபந்து , 100-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பங்களாதேஷ் நாட்டில் cox bazar நகரில், பங்களாதேஷ், இந்தியா, நேபால், இலங்கை ஆகிய நாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றனர் .இதில் ,தமிழகத்தில் இருந்து இந்திய அணியில், மதுரையை சேர்ந்த சச்சின் சிவா பங்குபெற்றார். இப்போடிக்கு செல்லும்போது ,மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்உதவி செய்தார். இப்போட்டியில், இந்திய அணி இரண்டாம் இடம் பெற்றது. சச்சின் சிவா நேபாலுக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்றார்.தற்போது, தான் பெற்ற பரிசை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் WPC எனும் பெண்கள் தொழில் முனைவோர் கட்டமைப்பு சார்பில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண் தொழில் முனைவோர் இன்றைய காலகட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முன்னெடுப்புகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பார்வையாளராக மூலிகை சிக்கன் காசிராஜன், நடிகை ஸ்ரீகலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை ரேணுகா மற்றும் ஜோஸ்பின் அமல கிறிஸ்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
75-வது சுதந்திரத் திருநாள் விடுதலைப் போரில் தமிழகம் சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா.
by mohan
written by mohan
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக,மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர், தலைமையில்
75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ”விடுதலைப் போரில் தமிழகம்” சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது.இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா” முன்னிட்டு,மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகசுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, காந்தி நினைவு அருங்காட்சியத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.இக்கண்காட்சியினை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர்மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர்தலைமையில் தொடங்கி வைத்தார்கள். இக்கண்காட்சியில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்கள் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த விடுதலைப் பேராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றுத் தொகுப்பு குறித்த புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள்சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.7 நாட்கள் நடைபெற்ற இந்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா காந்தி நினைவு அருங்காட்சியத்தில் இன்றைய தினம் (06.04.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா”-வை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசு மற்றும் சான்றிதழ்களையும் பல்வேறு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்இரா.சுவாமிநாதன், காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர்கே.ஆர்.நந்தா ராவ்உட்பட அரசு அலுவலர்கள் மாணவ மாணவிர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் தொடங்கிவைத்தார்.
by mohan
written by mohan
தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரையின் முதல் பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் கலந்து கொண்டு பச்சைக் கொடி அசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள், உய்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற மாணவர்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் போட்டு பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி திருப்பரங்குன்றம், திருநகர் முக்கிய சாலைகளில் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தைகளால் அவனியாபுரம் சக்தீஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.இந்த நிலையில் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த 42 வயதான முனியாண்டி என்பவர் மீது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முனியாண்டியை கைது செய்தனர்.மேலும் அவர் மீது போக்ஸா வழக்குப்பதிவு செய்து சிரையிலடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் பார்த்ததுக்காகவும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு மேயர் பாராட்டு.
by mohan
written by mohan
மாநகராட்சியில் 4 மண்டல சுகாதார நிலையங்கள் உட்பட 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கே நடைபெறும் பிரசவங்களின் சராசரி எண்ணிக்கையை 30 சதவீதம் அளவிற்கு அதிகரித்தமைக்காகவும் பேறுகால இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்தமைக்காகவும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை,மேயர்இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், ஆகியோரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 19 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, ஊட்டசத்து, கொரோனா தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிககவனத்துடனும், பாதுகாப்பாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அரசின் பேறுகால முன்கவனிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பல்வேறு பேறுகால ஆலோசனைகள் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இதன் பலனாக ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 முதல் 80 பிரசவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது சராசரியாக 120 பிரசவங்கள் என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளது.மேலும், குறிப்பிடதகுந்த அம்சமாக செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் பேறுகால இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரே ஒருவர் மட்டும் பிரசவம் நடைபெற்று 36 நாட்கள் கழித்து உயிரிழந்து உள்ளார். இதை தவிர்த்து, மதுரை மாநகராட்சி பகுதிகளில் பேறுகால மரணம் எதுவும் கடந்த 6 மாத காலத்தில் ஏற்படவில்லை.இது விகிதாச்சார அடிப்படையில், ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு 9 ஆகும்.இதனை எட்ட சிறந்த முறையில் பணிபுரிந்து தீவிர நோய் பாதிப்பு ஏதும் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அரசு இராசாசி மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்து சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கும், தாய்மார்களுக்கு நம்பிக்கை அளித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையை குறிப்பிடதகுந்த அளவு அதிகரித்தமைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும்மேயர் பாராட்டு தெரிவித்தார்.மேலும், இதே போல, தொடர்ந்து சிறந்த முறையில் செயல்பட்டு பேறுகால இறப்பு விகிதத்தை முற்றிலும் தவிர்க்கவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைமேயர் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வில், துணை ஆணையாளர் மரு.சங்கீதா, நகர்நலஅலுவலர் மரு.ராஜா, உதவி நகர்நலஅலுவலர் மரு.தினேஷ்குமார், மண்டல மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்.எஸ்.ஜீனத்;, மருத்துவர்.சி.ஸ்ரீகோதை மருத்துவர். பி.வி.புவனேஸ்வரி, மருத்துவர். ஆர்.சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர். ஏப்ரல். 07 – உலகயளவிலான சிலம்ப போட்டி கடந்த 2 நாட்களாக கோயம்பத்தூரில் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்து போட்டியில் பங்கேற்றனர்.இதில் தமிழகம் சார்பில் வேலூரில் உள்ள தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் உதயகுமார், இக்கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 3 – ம் ஆண்டு பயிலும் கார்த்திக் ஆகிய 2 பேர் தங்கபதக்கம் பெற்றனர்.இவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசு, துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை, ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7).
by mohan
written by mohan
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம். 1948ம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950ல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் (World Health Day) கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது. உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். உலகநாடுகளைஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் சுகாதார மற்றும் மருத்துவம் குறித்த விசேஷ நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது சுகாதாரம் தொடர்பிலான நிலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்தகவுகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகும்.
ஆலீ மேயோ மாலினுக்கு 1977ம் ஆண்டு சோமாலியாவில் பெரியம்மை வந்தபோது, அது அவனை மருத்துவமனைக்குப் போகவைத்தது மட்டுமல்லாமல், அவனுடைய பெயர் தலைப்புச் செய்திகளில் அடிபடும்படியும் செய்தது. சிகிச்சையளிக்கப்பட்டு அவன் குணமடைந்த பிறகு, பெரியம்மை நூற்றாண்டுகளாக லட்சோப லட்சம் ஆட்களை நாசப்படுத்திய பின்னர் பூமியிலிருந்தே துடைத்தழிக்கப்பட்டது என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) 1980ல் அறிவித்தது. உலகில் இந்நோய்க்குப் பலியான ஆட்களிலேயே ஆலீதான் கடைசி நபர் என்று கூறப்பட்டது. 1992ல் உடல்நலப் பராமரிப்புக்கான மற்ற நன்மைகளை WHO அறிக்கையிட்டது: 1980களின் போது வளரும் நாடுகளிலுள்ள அதிக மக்கள், பாதுகாப்பான குடிநீர் வசதிகளும் சுகாதார வசதிகளும் கிடைக்கப்பெற்றனர். கூடுதலாக, மிகவும் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்களில் பெரும் சதவீதத்தினர் உள்ளூர் மருத்துவ சேவை வசதிகளைப் பெற்றனர். இவற்றின் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில், சில இடங்களில் குழந்தை மரண எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்த நன்மைகள் இழப்புகளினால் சரிக்கட்டப்பட்டு பேராபத்துக்களினால் மறைக்கப்படுகின்றன. ஹெச்ஐவி/எய்ட்ஸ் உலகம் முழுவதிலும் 1,70,00,000க்கும் அதிகமானோர் எய்ட்ஸை ஏற்படுத்தும் வைரஸாகிய ஹெச்ஐவி-யினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். நாளொன்றுக்குத் தோராயமாக 8,000 பேர் என்ற வீதத்தில், ஒரே ஒரு வருடத்தில் சுமார் 30,00,000 பேர் பீடிக்கப்பட்டவர்களானார்கள். பத்து லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஹெச்ஐவியைப் பெற்றிருக்கின்றனர். பிள்ளைகள் மத்தியில் எய்ட்ஸினால் ஏற்படும் மரணங்கள், சமீப பத்தாண்டுகளில் பிள்ளைகளின் பிழைப்பு வீதத்தில் அடைந்திருக்கும் எந்த முன்னேற்றங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதைவிட விரைவில் அதிகத்தை செய்யலாம். ஆசியாவில் அதிகரித்ததைப் போன்று அநேக இடங்களில் இந்தக் கொள்ளைநோய் வெடிக்கும் நிலையின் ஆரம்பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஹெச்ஐவிக்குப் பலியான அனைவரிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் வசிக்கின்றனர் என்று எய்ட்ஸ் அண்ட் டிவலப்மெண்ட் கூறுகிறது.
எலும்புருக்கிநோய் (TB) கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பெரும்பாலும் அசட்டை செய்யப்பட்டிருந்தாலும், TB மீண்டும் ஒருமுறை உலகில் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 30 லட்சம் மக்களைக் கொன்று, தொற்றுநோய்களிலேயே உலகின் முதன்மை கொலையாளியாக ஆகியிருக்கிறது. இந்த மரணங்களில் 98 சதவீதத்திற்கும் அதிகம் வளரும் நாடுகளில் ஏற்பட்டன. மோசமான நிலைமையை மகா மோசமாக்குவதற்கு, TB பேக்டீரியா, ஹெச்ஐவி-யோடு இணைந்து, சாவுக்கேதுவான கூட்டு சேர்ந்து, அழிவுக்கேதுவான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 2025 ஆண்டிற்குள், ஹெச்ஐவி தொற்றப்பெற்ற பத்து லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் TB-யால் மரணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளைவிட தற்போது வளரும் நாடுகளில் உள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருதய நோயினால் ஏற்படும் முழுவுலக அழிவுக்கு அருகாமையில் நாம் இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார் WHO-ன் டாக்டர் இவான் ட்யார்ஃபஸ். இருதய நோய் இனியும் தொழில்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளின் கொள்ளைநோயாக மட்டும் இருக்கப்போவதில்லை. எடுத்துக்காட்டாக, லத்தீன், அமெரிக்காவில் தொற்றுநோய்களினால் மரணிப்பதைவிட இருதய நோயினால் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமான மக்கள் மரணிப்பார்கள். ஒருசில வருடங்களுக்குள் இதயத் தமனி உறைவும் பாரிசவாயும் வளரும் நாடுகள் முழுவதிலும் ஏற்படும் மரணத்திற்கான முன்னணி காரணமாக விளங்கும். வெப்பமண்டல நோய்கள் காலரா அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியிருக்கிறது. மஞ்சள் காமாலை, டெங்கு கொள்ளை நோய்களும் அதைவிட அதிகமானோரைப் பாதித்தும், மலேரியாவினால் ஏற்பட்ட நிலைமை சீரழிந்தும், இவ்வாறு வெப்பமண்டல நோய்கள் கட்டுப்பாடின்றி தலைவிரித்தாடியிருப்பது போல் தோன்றுகிறது என்று WHO எச்சரிக்கிறது. உலகின் மிக ஏழை நாடுகளில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் ஏற்கெனவே ஒரு பெருந்தோல்வியாக இருக்கிறது. மலேரியாவினால் மட்டும் இறந்தோரின் எண்ணிக்கை இப்போது ஆண்டுக்கு சுமார் 20 லட்சமாக இருக்கிறது. ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன்பே இந்நோய் பெரும்பாலும் ஒழித்துக்கட்டப்பட்டதாக எண்ணப்பட்டிருந்த பிறகும் இந்தக் கதி.
வயிற்றுப்போக்கு நோய்கள் வளரும் நாடுகளில் மரணித்த இளம் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தொற்றுநோயின் விளைவாகவோ ஊட்டச்சத்துக் குறைவின் விளைவாகவோ ஒவ்வொரு நாளும் அநேகமாக 40,000 பிள்ளைகள் மரணிக்கின்றனர். வயிற்றுப்போக்கு நோய்களினால் மட்டும் ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மரணக்கிறது. உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 10,000 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் ஒரு லச்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 10,000 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 10,000 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். உலகெங்கிலுமான பிராந்தியங்களிலும் 206 நாடுகளிலும் தற்போது 13,50,000 பேர் கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 75,000 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இந்தச் சுகாதார நிலைமை நமக்கு எதைச் சொல்கிறது? “வளரும் நாடுகள் இரட்டைப் பிரச்சினையால் தாக்கப்படுகின்றன,” என்று ஒரு சுகாதார நிபுணர் சொல்கிறார். “தோன்றும் நவீன நீண்டகால நோய்கள் அனைத்தாலும், ஆனால் இன்னும் நிலவியிருக்கும் வெப்பமண்டல நோய்கள் ஒருசிலவற்றாலும் அவை இப்போது தாக்கப்படுகின்றன.” அதன் விளைவு? கவலையை உண்டாக்கக்கூடிய “புவியியல் அமைப்பினால் தீர்மானிக்கப்படும் ஒரு இடைவெளி” தெளிவாகத் தெரியலாயிற்று என்று 2000ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உடல்நலத்தை அடைவது (Achieving Health for All by the Year 2000) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, சுமார் 40 ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள உடல்நல பராமரிப்பு “உலகின் எஞ்சிய பாகங்களுக்குச் சமமாக வளரவில்லை.” சுகாதார நிலையின் இடைவெளி மிகப் பெரியதாகவும் அதிகரிப்பதாகவும் இருக்கிறது.
அகன்றுவரும் இந்த இடைவெளிக்குப் பல காரணங்கள் இருந்தாலும், குறைவுபட்ட உடல்நலத்திற்கான ஒரு முக்கிய காரணம் “வறுமையாக இருக்கிறது” என்று உலக சுகாதாரம் என்ற ஆங்கில பத்திரிகை கூறுகிறது. வறுமையானது பெரும்பாலும் மக்களை சுகாதாரமற்ற, போதிய மற்றும் பாதுகாப்பான தண்ணீர் இல்லாத, மக்கள் நெருக்கடி நிறைந்த, நெருக்கமான இடவசதியுடைய வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட, குறைபாடுள்ள வீடுகளில் வசிக்கும்படி தள்ளிவிடுகிறது. இந்த மூன்று காரணிகளும் உடல்நலத்தைப் பாதிப்பது மட்டுமன்றி மெய்யாகவே நோய்களையும் ஏற்படுத்துகின்றன. இதற்குக் கூடுதலாக, நோய்நொடிகளுக்கு எதிராக போராடக்கூடிய உடலின் பாதுகாப்பு அமைப்பைப் பலவீனப்படுத்திவிடும் ஊட்டச்சத்துக்குறைவை சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் மரத்தை கரையான் அரிப்பதைப்போன்று உடல்நலத்தை வறுமை அரித்துப்போடுவதேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
உலகம் முழுவதும் குடிசைவாழ் மக்களில் 100 கோடிக்கும் அதிகமானோர் மனமுறிவடைந்து உணரும்படி விடப்பட்டிருக்கின்றனர் என்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. வறுமைக்கான அடிப்படைக் காரணங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாய் இருக்கின்றன. நோயை ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகள் அவர்களுடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றன. வறுமையின் பிடியில் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்கள் என்றால், சுகாதார நிலையின் இடைவெளியின் பரிதாபகரமான பக்கத்தில் நீங்களும் நம்பிக்கையேதுமின்றி மாட்டிக்கொண்டிருப்பதாக உணரலாம். எனினும், ஏழையாக இருக்கிறீர்களோ இல்லையோ, உங்களுடைய உடல்நலத்தையும் உங்களுடைய பிள்ளைகளின் உடல்நலத்தையும் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் எடுக்கக்கூடிய சில படிகள் இருக்கின்றன. மக்களுக்கான தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசு உறுதியளிக்க வேண்டும்.
1. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடங்க உறுதி எடுங்கள். அதற்க படிப்படியான முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. நீங்கள் கடைசியாக உடற்பயிற்சி செய்தது எப்போ…? உடற்பயிற்சி மீண்டும் இன்றே தொடங்குங்கள். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். உடற்பயிற்சியை அன்றாட வேலைகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
3. ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவையே சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்கிறேன் என்று கலோரி அதிகமுள்ள ஆரோக்கியமான உணவினை சாப்பிட்டாமல் இருக்காதீரகள்.
4. ஆரோக்கியமான உடல் எடையை பாரமரிக்க வேண்டியது அவசியம்.
5. உணவுகளை தவிர்க்காமல் வழக்கமான அளவில் சாப்பிடுங்கள். டயட் என்று சொல்லி உணவின் அளவைக் குறைக்காதீர்கள். இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
6. ஒவ்வொரு முறை உணவு சாப்பிடும் போதும் உடலுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவை சாப்பிடுவதற்கான வாய்ப்பாக கருதி சாப்பிடுங்கள்.
7. ஒவ்வொரு பருவத்திற்கு என பிரத்யேகமாக வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். உள்ளூரில் விளையும் காய்கறிகளையே அதிகம் சாப்பிடுங்கள்.
8. உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனால் நீண்ட காலம் சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் இன்றி இருக்கலாம்.
9. உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
10. மன அழுத்தம் குறைய யோகா போன்றவற்றை செய்யத் தொடங்குங்கள். இதனால் வேலையிலும் செயல் திறன் அதிகரிப்பதை உணர முடியும்.
பஞ்ச பூதங்களின் மொத்த உருவம்தான் பிரபஞ்சம். பிரபஞ்சத்தின் சிறிய வடிவம்தான் மனித உடல். ஆம், உடலும் பஞ்ச பூதங்களால் ஆனதுதான். ஒவ்வொரு மனிதரும் தூய்மையாக இருந்தாலே, இந்த ஒட்டுமொத்த பூமியும் நலம் பெறும் என்பது திண்ணம். உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். உலக சுகாதார தினத்தில் உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமையும் கூட என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 7, 2001).
by mohan
written by mohan
கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல்(ஹானர்ஸ்) படித்தார். பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். சர்.சி.வி. இராமனின் கண்காணிப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்ட இராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்றார்.கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலுள்ள சர் வில்லியம் இலாரன்ஸ் பிராகின் (Bragg) ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பணிமுடிவடைந்ததும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போது இருந்த இலட்சுமணசாமி முதலியார், இராமச்சந்திரனை அழைத்துவந்து 1952ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக ஆக்கினார். இத்துறையின் கீழ் படிகவியல்லும் உயிர் இயற்பியல் என்னும் புதிய துறையை முன்னணி ஆய்வு வசதிகளுடன் இராமச்சந்திரன் எற்படுத்தினார். சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பொறுப்பேற்றபோது இராமச்சந்திரனுக்கு வயது 29. நாட்டின் மிகச்சிறந்த ஆய்வு நிலையங்களில் ஒன்றாக இராமச்சந்திரன் உருவாக்கிய படிகவியல்லும் உயிர் இயற்பியல் ஆய்வு நிலையம் உள்ளது. மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் (collagen) உயிரணு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்தார். ஊடுகதிர் பற்றி ஆய்வினை இயற்பியல் முறையில் ஆய்வு மேற்கொண்டார். இம்முறைக்கு இராமச்சந்திரன் கோட் என்றே அழைக்கப்படுகிறது. காலஜினில் உள்ள மூலக்கூறுகள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்ற உண்மையை வெளியிட்டார். கருக்காடிப் புரதக்கூறுகளின் (பெப்டைடுகளின்) கட்டமைப்பை அறிய உதவும் இராமச்சந்திரன் வரைபடம் என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். நோபல் பரிசு பெற இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர். குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.1977ல் லண்டனில் உள்ள ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி விருது பெற்றார். கிரிஸ்டலோகராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக ‘இவால்டு’ விருது பெற்றார். மேகநாத் விருது, பட்நாகர் விருது, வாட்மூல் நினைவுப்பரிசு என பல விருதுகள் பெற்றார். இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமான நாராயண இராமச்சந்திரன் ஏப்ரல் 7, 2001ல் தனது 78வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் இயற்பியலாளர் மகொடோ கோபயாஷி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 7, 1944).
by mohan
written by mohan
மகொடோ கோபயாஷி (Makoto Kobayashi) ஏப்ரல் 7, 1944ல் ஜப்பான் நாகோயா நகரில் பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, கோபயாஷியின் தந்தை ஹிசாஷி இறந்தார். கோபயாஷி குடும்ப வீடு நாகோயாவின் குண்டுவெடிப்பால் அழிக்கப்பட்டது. எனவே அவர்கள் அவருடைய தாயின் குடும்ப வீட்டில் தங்கினர். 1967ல் நாகோயா பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் சயின்ஸில் டி.எஸ்.சி பட்டம் பெற்றார். 1972ல் நாகோயா பல்கலைக்கழகத்தின் ஷோச்சி சகாட்டா மற்றும் பிறரிடமிருந்து அவர் வழிகாட்டுதலைப் பெற்று அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வை முடித்த பின்னர், கோபயாஷி கியோட்டோ பல்கலைக்கழகத்தில் துகள் இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சி கூட்டாளராக பணியாற்றினார். தனது சகாவான தோஷிஹைட் மஸ்கவாவுடன் சேர்ந்து, துகள் இயற்பியலின் நிலையான மாதிரியில் சிபி-மீறலை விளக்கும் பணியில் ஈடுபட்டார். கோபயாஷி மற்றும் மஸ்காவாவின் கோட்பாடு குறைந்தது மூன்று தலைமுறை குவார்க்குகள் (quarks) இருக்க வேண்டும். இது ஒரு கணிப்பு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கீழ் குவார்க்கைக் கண்டுபிடித்ததன் மூலம் சோதனை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
1973 இல் வெளியிடப்பட்ட கோபயாஷி மற்றும் மஸ்காவாவின் கட்டுரை, “பலவீனமான தொடர்புகளின் மறுசீரமைக்கக்கூடிய கோட்பாட்டில் சிபி மீறல்”, இது 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லா காலத்திலும் நான்காவது மிக உயர்ந்த உயர் ஆற்றல் இயற்பியல் தாள் ஆகும். குவார்க்குகளுக்கு இடையில் கலவை அளவுருக்களை வரையறுக்கும் கபிபோ-கோபயாஷி-மஸ்கவா மேட்ரிக்ஸ் இந்த வேலையின் விளைவாகும். இந்த வேலைக்காக கோபயாஷி மற்றும் மஸ்கவா ஆகியோருக்கு கூட்டாக 2008ல் இயற்பியலுக்கான நோபல் பரிசில் பாதி வழங்கப்பட்டது. மற்ற பாதி யோய்சிரோ நம்புவுக்கு சென்றது.
மூன்று நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, ஷினிச்சிரா டொமோனாகா, லியோ எசாகி மற்றும் மாகோடோ கோபயாஷி ஆகியோரின் வெண்கல சிலைகள் 2015ல் சுகுபா நகரத்தில் உள்ள அசுமா மத்திய பூங்காவில் அமைக்கப்பட்டன. நிஷினா நினைவு பரிசு, சகுராய் பரிசு, ஆசாஹி பரிசு, ஐரோப்பிய இயற்பியல் சங்கத்தின் உயர் ஆற்றல் மற்றும் துகள் இயற்பியல் பரிசு, டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் கலாச்சார ஒழுங்குக்கான விருது போன்ற பரிசுகளை பெற்றுள்ளார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சங்கரன்கோவில் நகர காவல்துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன்,முன்பின் அறிமுகம் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் எனவும், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் வழங்கி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளியில் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் பள்ளி குழந்தைகளிடம் உங்களுக்கு பள்ளியிலோ வெளியிலோ ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், சாலையில் முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் எனவும், அவர்கள் தரும் எந்த ஒரு பொருளையும் வாங்க கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் சிறு வயது முதலே உயர்ந்த குறிக்கோளுடன் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த பதவியை அடைந்து தங்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் கீழப்பட்டியில் மந்தையம்மன்கோவில் திருவிழா நடைபெற்றது இதில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கோவில் நிர்வாகம் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பாக சால்வைஅணிவித்து வரவேற்றினர்.
செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் சுதாகரன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சிவ இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் TPK சாலையில் 2 ஆட்டோக்கள் மோதி விபத்துக்குள்ளான CCTV காட்சி.
by mohan
written by mohan
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் அருகே செல்லும் TPK சாலையில் கடந்த 2ஆம் தேதி காலை 11.50AM மணி அளவில் முன்னால் சென்ற கேஸ் ஆட்டோ மீது., ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் செல்லும் TPK சாலையில் இம்மாதம் இரண்டாம் தேதி காலை 11:50 மணி அளவில் கேஸ் ஆட்டோ ஓட்டுநர் ஆட்களை ஏற்றாமல் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். தனது ஆட்டோவில் ஏதோ பழுது ஏற்பட்டு இருப்பதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருந்த போது., அவருக்குப் பின்னால் மூன்று பயணிகளுடன் ஆட்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முன்னால் சென்ற கேஸ் ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.இதில் 2 ஆட்டோக்களும் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., மேலும் கேஸ் ஆட்டோவிலிருந்து கேஸ் ஆனது வெளியே கசிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு எரிவாயு கசிவதை நிறுத்தினர். இந்த விபத்தினால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணித்த மூன்று பேர் மற்றும் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.தற்போது இந்த விபத்து குறித்து எந்த ஒரு வழக்கும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பதியப்படவில்லை., இருப்பினும் தற்போது இந்த விபத்து நடந்தடது அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி யில் தெள்ளத் தெளிவாக பதிவாகி இருந்தது. தற்போது விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக அரசின்சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஏ.முனியசாமி தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் எம்.மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.முத்தையா, என்.சதன்பிரபாகர், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் கேசி.ஆனிமுத்து, ஆர்ஜி.ரத்தினம், எஸ்எம்.சாமிநாதன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்ஜி.மருதுபாண்டியன், மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் பாதுஷா,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபாலசிங்கம், இணைச்செயலாளர் ஜெயகார்த்திகேயன், துணை செயலாளர் சங்கர் (எ) ஜெயச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்எஸ்.தர்வேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜெ.ஜெயபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கே என்.கருணாகரன், எம்.மோகன் பாபு, ஆர்ஜி.ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயிலானி சீனிகட்டி,முன்னாள் நகர செயலாளர் கேசி.வரதன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜி.வீரபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.சண்முகவேல், பெருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏஜி.சிவகுமார் உள்பட கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கு பரிசுக் காசோலைகள் மற்றும் களை எடுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.04.2022 செவ்வாய் கிழமை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரங்களையும், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள், மல்பெரி பயிரிட்டு, பட்டுத் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுத் தொழிலை மேம்படுத்தும் வகையிலும், புதிய பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தமிழ் நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், நான்கு பயனாளிகளுக்கு
தலா ரூபாய் 35,000 மதிப்பில் களை எடுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த பட்டு விவசாயிகள்
தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு பரிசுத் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் அடைக்கலப் பட்டினத்தைச் சேர்ந்த பட்டு விவசாயி சு.ஜேக்கப் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ25 ஆயிரமும், கோவிலூற்றைச் சேர்ந்த பட்டு விவசாயி வை.அருள் குமரன் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், கடையநல்லூரைச் சேர்ந்த பட்டு விவசாயி ப.முருகன் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ 15ஆயிரமும், மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வே.பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் ( பட்டு வளர்ச்சித்துறை) க.நிஷாந்தி, ஆய்வாளர் சி.ஜெயந்தி மற்றும் பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.