சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி கட்டடத்திற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி,கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பாக சட்டப்படிப்பு விளங்கி வருகிறது. மகளிர் படித்து முன்னேற்றம் காணும் போது நாடும் முன்னேற்றமடையும். தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அனைத்து படிப்பு பிரிவுகளிலும், மாணவர்களை விட அதிக அளவில் பெண்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற அரசாக விளங்குவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எதிர்கால தூண்களாக விளங்கிவரும் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வியை பெறவேண்டும் என்ற அடிப்படையில் எட்டா கனியாக இருந்த கல்வியை கிராமப்புற மக்களும் பெறவேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாகவும் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி கற்றிடவும் வழிவகை செய்துள்ளார்கள். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சட்டக் கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது என்றார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் .எஸ்.மாங்குடி (காரைக்குடி), ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), சட்டத்துறை செயலர் .எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலெட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
ராமநாதபுரத்தில் அமமுக கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட கழக சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு அழைபாளாக கலந்து கொண்டு பேசுகையில் : அனைவரும் சமமாக மதிக்க கூடிய கட்சி நமது கட்சி என்றும் . பாராளுமன்ற கூட்டணி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து கூக்கர் சின்னத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் பல ஆண்டு காலம் ஆட்சி செய்யும் கட்சிக்கு இணையாக அம்முக செயல்பட்டு வருகிறது என்றும் எம்ஜிஆர் போல் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியாக மாற்றுவோம் என்றும் திமுக ஆட்சியில் மின் கட்டண விலை உயர்வு பால் விலை உயர்வு சிறு தொழில் வியாபாரிகள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர் பழனிச்சாமியின் நடவடிக்கையால் மக்கள் வெறுப்பில் திமுக ஆட்சிக்கு வந்தது அதை உணர்ந்து திமுக செயல்பட தவறிவிட்டது மக்கள் விரைவில் திமுகவை தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்தார். ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் அமமுக தான் மாற்றுக் கட்சி என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிப்பார்கள் என்று கூறினார். இக்கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் இன்று (பிப்.,04) பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.
பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்
அதனை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 624-வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் ! நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரைக்கு இலங்கை யிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் முனை,மற்றும் குந்துகால் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வரை நிறுத்த சொல்லும் போது அவர் வேகமாக தப்பி ஓடினார். இதனை அடுத்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர். பின் வண்டியை சோதனை செய்தபோது சுமார் 4.634 கிராம் எடையுள்ள 916 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தையும், ராமேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நம்புராஜன் என்பவரை கைது செய்து அவர் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின் கைது செய்யப்பட்ட நம்புராஜனிடம் விசாரணை நடத்தி பின் நாளை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..
by Askar
written by Askar
12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..
மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஒழிப்பு நடவடிக்கையில் D2 செல்லூர் ச&ஒ காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர். ஆதிராஜா, மு.நி.காவலர்.4066. ராஜேஷ், மு.நி.காவலர். 1001. .முத்துக் குமார ராஜா, மற்றும் நுண்ணறிவுப்பிரிவு சார்பு ஆய்வாளர். முத்துராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., நேரில் அழைத்து அவர்களின் நற்பணியைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழும், பணவெகுமதியும் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள்( செய்தியாளர்) கேட்டுச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..
by Askar
written by Askar
அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள்( செய்தியாளர்) கேட்டுச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..
தேனி செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-
_நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக அரசு மக்களிடம் வாக்குறுதி குறித்து கருத்து கேட்பது குறித்த கேள்விக்கு._
ஏற்கனவே கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை புதிதாக கருத்துக்கள் கேட்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று தான் மக்களிடம் குழப்பமாக உள்ளது.
_அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைப்பு குறித்த கேள்விக்கு._
ஒருங்கிணைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் என்னுடன் இணைந்து வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு,
அறிஞர் அண்ணா நினைவகத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்ப வரும் வழியில் சின்னம்மாவை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
_அதிமுக ஒன்றிணைப்பில் எடப்பாடி பழனிச்சாமியை சேர்த்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ._
என்ன நிலைப்பாடில் இருக்கிறார் என்பதை நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும். எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் சொல்லி விட்டோம்.
_இடைக்கால பட்ஜெட் போதுமானதாக இல்லை என கருத்துக்கு_
இது இடைக்கால பட்ஜெட் தானே. தேர்தல் நடைபெற்ற பின்பு முழுமையான பட்ஜெட் வரும் வரைக்கும் நிதி கோரப்படுகின்ற பட்ஜெட் ஆக தான் கருத வேண்டும்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில் இணைந்தார்..
by Askar
written by Askar
சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அதிமுகவில் இணைந்தார்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற வேண்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையேற்று அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர் இந்த நிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்குஉட்பட்ட சோழவந்தான் பேரூர் கழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர் இந்த நிலையில் சோலை ரவி ஏற்பாட்டில்சோழவந்தான் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பேட்டை அப்பாச்சி கண்ணன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் பேரூர் இளைஞர் அணி செயலாளர் கேபிள் மணி பேட்டை மாரி இ.ராஜா எஸ். சுரேஷ் சி பாலுசாமி முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்..செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டியில் திமுக சார்பில்
அண்ணா நினைவு தினம்
மௌன ஊர்வலம்..
பேரறிஞர்அண்ணா 55வதுநினைவு தினத்தையொட்டி வாடிப்பட்டியில்தி.மு.க., சார்பாக மௌன ஊர்வலம் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க சார்பாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் பழைய நீதிமன்றதிலிருந்து புறப்பட்டு தி.மு.கவினர் மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்,அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பேரூராட்சித் தலைவர்கள் எஸ் எஸ் கே ஜெயராமன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்யபிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூர்செயலாளர் மு.பா.பிரகாஷ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அயூப்கான், பங்களா மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், இளைஞர் அணி வினோத் குமார், அரவிந்தன் ரங்கநாதன்,பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உயிரை பணையம் வைத்து அரசு சேவைக்காக காத்திருக்கும் கீழக்கரை மக்கள்… ஆட்சியர் மற்றும் கீழக்கரை நிர்வாகம் கவனிக்குமா??.. சமூக ஆர்வலரின் கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது ஆகும். ஆனால் இங்கு அரசு சேவைகளான ஆதார் கார்டு மற்றும் பிற சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் கட்டிடம் *ஹைதர் கால* கட்டிடம் என கூறும் அளவுக்கு மிகவும் பழமையாக எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ளது, இந்த இடத்தில் தான் குழந்தைகள் பயிலும் பால்வாடியும் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த கட்டிடத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
பழமையான கட்டிடத்திலும் ஆதார் எடுக்க தினமும் 40 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு சிறிய குழந்தைகளை தாய்மார்கள் வைத்து மிகவும் சிரமப்படுகின்றனர், ஆனால் இதை விட வேதனை பல நேரங்களில் பொதுமக்கள் காக்க வைக்கப்பட்டு பின்னர் ஆன்லைன் வேலை செய்யவில்லை என திருப்பி அனுப்புவதுதான்.
இது தொடர்பாக SDPI கட்சி முன்னாள் பொருளாளர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி (மேற்கு ) கீழை அஷ்ரஃப் தெரிவிக்கையில், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு தாய்மார்கள் மற்றும் வயதான முதியவர்களும் நின்றபடியே சிரமத்துக்கு ஆளாகின்றனர், இதை கவனத்தில் கொண்டு முறையாக இருக்கை உள்ள வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் இச்சேவை மையத்தில் ஒரு நபர் மட்டுமே பணியில் உள்ளார், ஆகையால் ஆதார் அட்டை பணிகள் நிறைவடைய ஒரு நபருக்கு குறைந்தது 15 நிமிடத்திற்கும் மேல் ஆகிறது. இது போன்ற பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதலாக அரசு பணயாளர்களை நியமித்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்” என வேதனையுடன் கூறி முடித்தார்.
உயர் பலி ஆகும் முன்பா விழிக்குமா கீழக்கரை மற்றும் மாவட்ட நிர்வாகம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு லாட்டரி குலுக்கல் கடந்த ஜனவரி 24ஆம்தேதி நடைபெற்றது.
குலுக்கலின் முதல் பரிசு ரூ.20 கோடி (3.2 மில்லியன் வெள்ளி) ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த குலுக்கலுக்காக கிட்டத்தட்ட 4.5 மில்லியன் லாட்டரி சீட்டுகள் விற்பனையாகின.
எக்ஸ் சி 224091 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு பாலக்காட்டில் மொத்த விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்து திருவனந்தபுரத்தில் உள்ள கடையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் முதல் பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் சபரிமலைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த 33 வயதான பக்தர் வழிபாட்டை முடித்து விட்டு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அவர், தனது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால், கேரள லாட்டரி இயக்குநரகமும் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தனது நண்பர்களுடன் லாட்டரி இயக்குநரக அலுவலகத்திற்கு வந்த அந்த வாலிபர் முதல் பரிசு கிடைத்த அந்த லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டார். ரூ.20 கோடி பரிசு தொகையில், அதிர்ஷ்டசாலியான அய்யப்ப பக்தருக்கு வரி நீக்கிய பிறகு ரூ.12.60 கோடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை செய்தார். அவரே நேரில் சந்தித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுக மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரஹ்மான் மரக்காயர் கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியதாவது : மண்டபம் பேரூராட்சியில் நிரந்தரமான பேருந்து நிலையம் இல்லை மீன்வளர்ச்சி துறைக்கு சொந்தமான இடம் உண்டு அந்த இடத்தை பேருந்து நிலையத்திற்க்கு வழங்கினால் மண்டபம் மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரிகள் சங்கம் நகர் வர்த்தக சங்கம் மீனவர்சங்கங்ளின் கோரிக்கையாக உள்ளது எனவே தாங்கள் முயற்சித்து அவ்விடத்தை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக மீனவர்களை மோடி, அண்ணாமலை ஏமாற்றி விட்டனர் ! INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரத்தில் பேட்டி ! !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீனவர் நலன் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடலில் மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியினை மீனவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களுக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை, எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் மயமான 205 மீனவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக முதல்வர் அளித்த உறுதி அடிப்படையில் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மீனவர்களுக்கான நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு மீட்பு மற்றும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை வசமுள்ள படகுகளை மீட்டுத் தருவதாக மோடி, அண்ணாமலை, என பலரும் வாக்குறுதி அளித்த நிலையில் அதற்கான நடவடிக்கையை இதுவரை மத்திய அரசு எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வசம் உள்ள படகுகளை மீட்டு கொடுக்காமல் மீனவர்களை ஏமாற்றி விட்டார். எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது அவர்களது வாழ்வாதாரம் மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை என இதன் மூலம் தெரிய வருவதாக அனிதா ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் புதிதாக அமைய உள்ள INDIA கூட்டணி தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டி இலங்கை வசமுள்ள படகுகளை உடனடியாக மீட்கவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும் அதற்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுப்பார் என்றார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, நகர் மன்ற தலைவர்கள் ஆர்.கே.கார்மேகம் (இராமநாதபுரம்) , நாசர்கான் (இராமேஸ்வரம்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வி.வேலுச்சாமி, இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மீன்வளத்துறை பொறியாளர் கணபதி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத் , ஜெயக்குமார் சிவக்குமார் , அப்துல்காதர் ஜெய்லாணி, மீனவர் நல வாரிய உறுப்பினர் என்.ஜெ.போஸ், பி.சேசு ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..
by Askar
written by Askar
இனிவரும் காலத்தில் நமது பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படி இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்; CMN சலீம் அறிவுரை..
உலகத்தின் மொத்த செல்வத்தையும் வங்கிகள் தங்களது பிடியில் மூலதனமாக வைத்துக் கொண்டு மதிப்பில்லாத காகிதப் பணத்தை அடித்து வட்டிக்கு விடுவதுதான் இன்றைய முதலாளித்துவ பொருளாதார பரிவர்த்தனை.
வட்டித் தொழில் செய்யும் மரபுசார்ந்த வங்கிகளுக்கு மாற்றாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இஸ்லாமிய வங்கி என்ற ஒரு கருத்தை உருவாக்க வேண்டிய நெருக்கடி முஸ்லிம் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. அப்போது தொடங்கி இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் கடந்த 70 ஆண்டுகளாக நிதானமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.
இன்றைய நிலையில் உலகம் முழுவதும் 72 நாடுகளில் சுமார் 550 இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.
இன்றைய இஸ்லாமிய நிதிச் சந்தையின் சொத்து மதிப்பு 4 டிரில்லியன் டாலர்கள்.உலக செல்வத்தில் 1 சதவிகிதம். (இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் மதிப்பைக் காட்டிலும் 7 மடங்கு கூடுதல்) ஆண்டுக்கு 17 சதவிகித அளவில் வளர்ச்சியடைந்து 2026 இல் இஸ்லாமிய நிதித் துறையின் சந்தை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கற்பனைக்கு எட்டாத உயரத்திற்கு வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மதிப்பு மிகுந்த பொறுப்புகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் நம் பிள்ளைகளை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸா மாணவர்களுக்கு இதுஒரு நம்பிக்கை மிகுந்த இலக்காக இருக்கும். ஆலிம் கல்வி முடித்த அரபி மற்றும் ஆங்கிலப் புலமையுடைய இளைஞர்கள் இஸ்லாமிய நிதித் துறையில் ஆராய்ச்சிக் கல்வியை (PhD) சர்வதேச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்க வேண்டும்.
இதுபோன்று உயர்ந்த இலக்கை மிகத் துல்லியமாக குறிவைத்து பயணிப்பவர்கள் கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவிகொண்டு பயணித்தால் தான் இலக்கை இலகுவாக எட்ட முடியும்.
அதேபோல அரசு உதவிபெறும் முஸ்லிம் கலை அறிவியல் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்களின் சங்கங்கள் 6 அரபு நாடுகளிலும் துடிப்புடன் இயங்குகின்றன.
தாங்கள் படித்த கல்லூரிகளில் வணிகம் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு இப்படி ஒரு தொலைநோக்கு இலக்கை நிர்ணயித்து இந்த அமைப்புகள் பயிற்சியளித்தால், இந்த ஒரு வேலையை மட்டும் தொய்வில்லாமல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு செய்தால் அரபு நாடுகளின் அனைத்து இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகமானோர் தமிழக முஸ்லிம் பிள்ளைகளாக இருப்பார்கள்.
உள்நாடு வெளிநாடுகளில் எந்தந்த திட்டங்களுக்கு எவ்வளவு கடனுதவியளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் இடைவெளி விடாமல் நம் பிள்ளைகள் அமர வேண்டும். தமிழகத்தின் மிக முக்கியமான திட்டங்களுக்கு கடனுதவியளிக்க முடியும்.
அரபுநாடுகளில் உள்நாட்டு மக்களை வேலையில் அமர்த்தும் சட்டங்கள் என்னதான் வந்தாலும் அறிவுக்கும் திறமைக்கும் உயர்ந்த அணுகுமுறைக்கும் இந்த உலகில் எல்லைகடந்த ஒரு ஈர்ப்பும் மதிப்பும் எப்போதும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
மட்டுமல்லாமல் அரபுநாடுகளில் மக்கள் தொகை வெகுவேகமாக குறைந்து வருகிறது. செல்வமும் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலர் முன்பின் இருப்பதும், சவுதியில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பிரமாண்டமான தங்கச் சுரங்கம் ஆண்டுக்கு 8 ஆயிரம் கிலோ தங்கத்தை வெளியே தள்ளப் போவதும் சேர்ந்து இனி அடுத்த 50 – 100 ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகள் பொருளாதார வல்லமை மிக்கதாக நீடிக்கப் போகின்றன என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
இந்த பொருளாதார வளர்ச்சிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து கவனித்து அதை நமது பிள்ளைகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு அமைப்பை (R&D) உருவாக்கி செயல்படுத்தினால் உம்மத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும்.
வீட்டில் வளரும் உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் இந்த செய்திகளை அப்படியே காட்சிப்படுத்துங்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..
by Askar
written by Askar
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்..
தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான். பெரியார் போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை. திடீரென ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது”
-காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..
by Askar
written by Askar
ஞானாவாபி பள்ளிவாசல் விசயத்தில் அத்து மீறிய அநீதிகளை கண்டித்து முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம்..
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ஐ அப்பட்டமாக மீறும் வண்ணம் நடைபெறும் கியான் வாபி மசூதி மீதான நடவடிக்கைகளை கண்டித்து,
கியான் வாபி மசூதியை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை பாதுகாக்கவும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும், பரவி வரும் வெறுப்பு பிரச்சாரங்களை வேரறுக்கவும், நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்களை ஒன்றிய அரசு ஊக்குவிப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தகவல்.
கே. நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநிலத் துணைத் தலைவர் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..
by Askar
written by Askar
சோழவந்தானில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள்; அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்..
சோழவந்தானில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 55வது நினைவு நாள் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன், வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர் முருகேசன் ஆகியோர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் பொதுக்குழு நாகராஜ்மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி எட்டாவது வார்டு முன்னாள் கவுன்சிலர் பெருமாள் ராஜாகுருவித்துறை விஜய் பாபு, தண்டாயுதம் என்ற கணேசன், சோலைகண்ணன்,ஜெயபிரகாஷ கவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பிரதிநிதி மணிகண்டன்ராமு,கென்னடி சேதுகண்ணன் பேட்டை மாரி பாலா பூக்கடை காமாட்சி அழகர் செந்தில் பூசாரி மாரிமுத்துஉள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..
by Askar
written by Askar
அதிமுகவின் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம்! கட்சியினர் வாழ்த்து..
அதிமுகவின் பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் ்பி உதயகுமார் அவர்களின்பரிந்துரையில் அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளராக வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து வாடிப்பட்டியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ராஜேஷ் கண்ணாவை சந்தித்து கட்சி நிர்வாகிகள் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் இதில் வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், , மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார்,நகரசெயலாளர்கள் வாடிப்பட்டிஅசோக் சோழவந்தான்முருகேசன் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டிஇளைஞர் அணி தண்டபாணி கேபிள் மணி முன்னாள் கவுன்சிலர் பெருமாள் துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் குருவித்துறை விஜய் பாபு, சோழவந்தான் பேரூராட்சிகவுன்சிலர்கள் சண்முகபாண்டிராஜா,ரேகா ராமச்சந்திரன் டீக்கடைகணேசன், நகர துணை செயலாளர் தியாகு, பேட்டை மாரி உள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது..
by Askar
written by Askar
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு; அதனைத் தொடர்ந்து பொது விருந்தும் நடைபெற்றது..
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பொது விருந்தை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ . தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் பேரூராட்சித்
தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், முன்னாள் செயலாளர் முனியாண்டி, கோயில் செயல் அலுவலர் இளமதி , பணி நியமனக்
குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி ,முத்து செல்வி ,சதீஷ், கொத்தாலம் செந்தில்,
நிஷா கௌதமராஜா, செல்வராணி, சிவா நிர்வாகிகள் சங்கங்கோட்டை ரவி, சந்திரன், மில்லர் மற்றும் பணியாளர்கள் பூபதி, வசந்த்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழநி தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
by Askar
written by Askar
தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனிமுருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை ,சன்னதி வீதி ,அடிவாரம் வழியான மலைக்கோவலுக்கு சென்றனர். இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும் ,சிறுவர்களுக்கு வேடம் இட்டும் பெண்கள் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தியும் ,முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறித்த போலீஸ் கைது!-கோவையில் பரபரப்பு..
by Askar
written by Askar
வேலியே பயிரை மேய்ந்த கதை; மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகை பறிக்கும் போலீஸ்! கோவையில் பரபரப்பு..
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சபரிகிரி என்ற காவலர் கைது, கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் சபரிகிரி, பொள்ளாச்சி சென்று வழிப்பறி செய்தநிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
You must be logged in to post a comment.