12
12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு..
மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஒழிப்பு நடவடிக்கையில் D2 செல்லூர் ச&ஒ காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12.480 கி.கி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சிறப்பாக பணிபுரிந்த சார்பு ஆய்வாளர். ஆதிராஜா, மு.நி.காவலர்.4066. ராஜேஷ், மு.நி.காவலர். 1001. .முத்துக் குமார ராஜா, மற்றும் நுண்ணறிவுப்பிரிவு சார்பு ஆய்வாளர். முத்துராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., நேரில் அழைத்து அவர்களின் நற்பணியைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழும், பணவெகுமதியும் வழங்கினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.